என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariana"

    • சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான் என பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருந்தார்
    • அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது

    அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா பிராமணர்கள் பற்றிய பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதியக்கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று அவர் பேசியிருந்தார்.சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான்,

    ரஞ்சித் சவுதாலாவின் இக்கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ரஞ்சித் சிங் சவுதாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.

    • பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்
    • செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர

    கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.
    • மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற இருக் கிறது.

    அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நடை பெறவில்லை. அரியானா வில் உள்ள 10 தொகுதிக்கு வருகிற 25-ந்தேதியும், பஞ்சாப்பின் 13 இடங்கள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஜூன் 1-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    இந்த 3 மாநிலங்களும் இளைஞர்களை அதிக அளவில் பாதுகாப்பு படைகளுக்கு அனுப்புவதில் முன்னணி வகிக்கின்றது. பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் ஓட்டுகளை கவர காங்கிரஸ் புதிய வியூகம் அமைத்துள்ளது.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்ப்பதற்காக 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன்படி 17½ வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் 4 ஆண்டு களுக்கு ஒப்பந் தத்தில் முப்படை அணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள். அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மேலும் 15 ஆண்டு களுக்கு பணியில் வைத்து கொள்ளப் படுவார்கள். மற்றவர்கள் 4 ஆண்டுடன் பணியில் இருந்து விடுவிக்கப் படுவார்கள்.

    இந்த திட்டம் விமர் சனத்துக்கு உள்ளானது. அக்னிபாத் திட்டம் முடி வுக்கு கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. பழைய ஆள் சேர்ப்பு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்தது.

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் இந்த 3 மாநிலங்களிலும் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்து வரு கிறார்கள். இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த தேர்தல் வியூகம் அமைக்கப் பட்டுள்ளது. அக்னிபாத்தை நீக்குவது உள்பட கட்சியின் 25 உத்தரவாதங்களை விளக்கி தீவிர பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் மேற் கொண்டுள்ளது.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. சீனிவாஸ் கூறும்போது, `இளைஞர் களுக்கு நீதி கிடைக்க வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்கிறோம்.

    நாம் எங்கு சென்றாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் மிகப் பெரிய பிரச்சினை. நாங்கள் 30 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதாக வாக்குறுதிஅளித்து காலக் கெடு வகுத்துள்ளோம். இந்த நேரத்தில் இளைஞர்கள் சிறந்த எதிர் காலத்துக்காக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.

    • இன்று (மே 29) வரலாறு காணாத வகையில் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
    • குடிநீர் வீணாகாமல் தடுப்பதை கவனிக்க 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காலநிலை மாற்றத்தால் பருவநிலை குழம்பிபோயுள்ள நிலையில் அதன் தாக்கம் உலக நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. துபாய் கனமழை, ஆப்கனிஸ்தான வெள்ளம், இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ள தண்ணீர் பஞ்சம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

    சமீப காலமாக தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் கர்நாடக தலைநகர் பெங்களூரு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

     

     

    இன்று (மே 29) வரலாறு காணாத வகையில் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து கார் கழுவுவது, கட்டுமான பணியிடங்கள் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வேலைகளுக்கு குடிநீரைப் பபயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது.

     

    மக்கள் தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுப்பதை கவனிக்க 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோரிக்கை விடுத்தும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிட வில்லை என்றும் அரியானா பாஜகஅரசு டெல்லி அரசுக்கு எதிராக சதி செய்கிறதுஎன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     

     

    உடனடியாக தண்ணீர் திறக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இடத்ற்கிடையில் டெல்லியில் சில பகுதிகளில் லேசான மலை பெய்ததால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைத்துள்ளனர். 

    • எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
    • மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன்.

    அரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் செயலி ஒன்றில் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

    அதில், கடந்த 2 மாதங்களில் மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மின் கட்டணம் செலுத்தியதற்கான ஸ்கிரின்ஷாட்டையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அதிக மின் கட்டண உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் வந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் தங்கள் வீடுகளுக்கும் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்துவது குறித்து பதிவிட்டு வருகின்றனர். 

    • முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்திருந்தார்
    • வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்த நிலையில் தற்போது ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் அதிகளவில் டோனி முதிலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்டார்டப் ஆக தொடங்கப்பட்டு இயங்கி வரும் மின்சார வாகன நிறுவனம் புளூமார்ட்[BluSmart]. வளர்ந்து வரும் இந்நிறுவனம் ஓலா ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது. தற்போதைக்கு டெல்லி,குருகிராம், நொய்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைகளை வழங்கிவரும் புளூமார்ட் இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

     

    இந்த வருடத்துன் தொடக்கத்தில் துபாயிலும் தனது சேவையை புளூமார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. ப்ரீ சீரிஸ்  நிதியுதவி சுற்று மூலம் புளூஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை தற்போதுவரை ஈர்த்துள்ளது.

    மேலும் ரூ.550 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. பெரு நிறுவனங்களில் அல்லாமல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் டோனி தொடர்ந்து முதலீடு செய்து வருவது கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் சந்தையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புளூஸ்மார்டின் மின்சார வாகன சேவை பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • யமுனாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான மோசடி வழக்கில் சுரேந்தர் சிக்கியுள்ளார்.
    • அரியானா முன்னாள் முதல்வர்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தீபேந்தர் சிங் ஹுடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

    அரியானா மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த சோன்பத் தொகுதி எம்.எல்.ஏ சுரேந்தர் பன்வார், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானாவில் யமுனாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான மோசடி வழக்கில் சுரேந்தர் சிக்கியுள்ளார்.

    இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சோன்பத்தில் உள்ள சுரேந்தர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில் அவர் தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகனையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. இவர் காங்கிரசைச் சேர்ந்த அரியானா முன்னாள் முதல்வர்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தீபேந்தர் சிங் ஹுடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

     

    முன்னதாக 2005 முதல் 2014 வரை தீபேந்தர் சிங் ஹுடா, அரியானா நகர மேம்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் திரிலோக் சந்த் குப்தா ஆகியோர் R.S. Infrastructure (RSIPL) உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து நகர்ப்புறங்களில் காலனி அமைப்பதாக கூறி சட்டவொரோதமாக நிலங்களை அபகரித்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் அமலாக்கத்துறை, R.S. Infrastructure (RSIPL) ரியல் எஸ்டேட் பிரிவை நடத்தி வரும் M3M ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம் 10.35 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் காலனி அமைப்பதாக கூறி லைசன்ஸ் வாங்கியது. ஆனால் இதுவரை அங்கு எந்த காலனியும் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த நிலைத்தை Religare Group என்ற மற்றொரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாக M3M ப்ரோமொடேர்ஸ் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த பரிவதனையின் மூலம் சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ.300 கோடி பணம் M3M ப்ரோமோட்டர்ஸ் நிறுவனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாங்கிக்கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  இந்த நில மோசடி வழக்கில் முன்னாள் முதலவர் தீபேந்தர் சிங் ஹுடா  சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கருதுகிறது.

    நேற்று முன் தினம் மகேந்திரகர் காங்கிரஸ் எம்எல்ஏ ராவ் தன் சிங் தொடர்புடைய ரூ.1400 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள்  தொடர்புடைய வழக்குகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்துவருவது கவனிக்கத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேரா சாச்சா ஆசிரமத்தில் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை குர்மீத் ராம் ரஹீம் கொண்டாட உள்ளார்
    • அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ளார் குர்மீத்

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது அரியானா சிறையில் இருந்து வரும் ராம் ரஹீமுக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தேரா சச்சா ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பரோல் கேட்டு குர்மீத் விண்ணப்பித்திருந்தார். அதன்படி 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு இன்று அதிகாலை 6.30 மணியளவில் குர்மீத் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை குர்மீத் ராம் ரஹீம் கொண்டாட உள்ளதாக தெரிகிறது. கடத்த கடந்த 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 232 நாள்கள் குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், பிறகு ஜூலை, நவம்பர், மீண்டும் 2024ஆம் ஆண்டு ஜனவரி என முறையே 40 நாள்கள், 30 நாள்கள், 21 நாள்கள், 50 நாள்கள் பரோலில் குர்மீத் வெளியே வந்தார்

    அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளுர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரியாக ராஜஸ்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 வார பரோலில் குர்மீத் வெளியே வந்தார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 40 நாள் பரோலில் குர்மீத் வெளிவந்த நேரம் சரியாக அரியானா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற காலகட்டம் ஆகும்.

    கடந்த 2022 பிப்ரவரியில் 21 நாள் பரோலில் அவர் வெளிவந்த காலகட்டம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த சமயம்., அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியே வந்தது அரியானா உள்ளாட்சித் தேர்தல் சமயம். அதே அக்டோபரில் அரியானா இடைத்தேர்தலின்போது வந்தார். 

    2020 அக்டோபரில் அரியானா சட்டமன்ற தேர்தலின்போது வெளியே வந்தார். தற்போது காஷ்மீர், அரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கும் சமயத்தில் வெளியே வந்துள்ளார். 

    • அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார்.
    • வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்றைய தினம் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாலை மரியாதைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கி ஊர் மக்கள் வினேஷ் போகத்தை உச்சி முகர்ந்து வருகின்றனர். வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது.

    வினேஷ் போகத்தை கவுரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைத்து அவருக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினர். ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து காசு போட்டு வினேஷ் போகத்துக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளனர்.

    தனது உறவினரும் குருவுமாக மகாவீர் சிங் கிடம் ஆசி பெற்ற அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஊர் மக்களின் அன்பு குறித்து வினேஷ் போகத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை.

    எனக்கு இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நபிக்கையை கொண்டு சரியான திசையில் பயணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னதாக வினேஷ் கூறியபடி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    • போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
    • இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

    பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்த போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் வெள்ளிப் பதக்கத்துக்கான அவரது மேல் முறையீடும் பலனளிக்காமல் போனது.

    இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியிலும் அரியானாவில் அவரது சொந்த கிராமத்திலும் உற்சாக வரவேற்பானது அளிக்கப்பட்டது. தொடர்ந்து அரியானா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதையொட்டி வினேஷ் போகத் அரசியலிலும் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பஞ்சாப் - அரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வினேஷ் போகத் பங்கேற்றுள்ளார். விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இன்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவசாயிகள் சார்பாக வாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய வினேஷ் போகத், உங்களின் மகள் இன்று உங்களோடு நிற்கிறாள் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் ஒரு மல்யுத்த வீராங்கனை, மொத்த நாட்டுக்கு நான் சொந்தம், மாநிலத்தில் வர உள்ள தேர்தலில் நான் செய்ய எதுவும் இல்லை. எனக்கு இப்போது தெரிந்தது எல்லாம், இப்போது எனது நாடு துன்பத்தில் உள்ளது, விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடத்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

    • பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது.
    • காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா்.

    சண்டிகர்:

    அரியானாவில் முதல்- மந்திரி நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று நடவடிக்கை மேற்கொண்டாா்.

    அரசமைப்புச் சட்டத்தின் கீழ், மாநில பேரவை கடைசியாக கூடியதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும்.

    அரியானாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மாா்ச் 13-ந் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப்டம்பா் 12-ந் தேதிக்குள் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மாநிலத்தில் அக்டோபா் 5-ந் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிா்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு கவர்னருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது.

    இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரவையை கவர்னர் நேற்று (வியாழக்கிழமை) கலைத்தாா். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இனி, காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா். அரியானா பேரவையின் பதவிக்காலம் நவம்பா் 3-ந் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது.
    • 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

    அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.

    அரியானாவில் கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 47 இடங்களை கைப்பற்றி இருந்தது. 2019-ம்ஆண்டு தேர்தலில் 40 இடங்களில் வெற்றிபெற்றது.

    இந்த நிலையில் 3-வது முறையாகவும், அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளன.

    கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.


    தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று காலை அரியானா சென்ற ராகுல்காந்தி 2 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    நாளை (வியாழக்கிழமை) வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடப்பதால் அதன் மீது மக்களிடம் எதிர்ப்பு அலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் சம அளவில் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜனதாவுக்கு 44 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 46 இடங்களும் கிடைக்கும் என்று கூறப் பட்டுள்ளது.

    பல தொகுதிகளில் ஜனநாயக ஜனதா கட்சி வாக்குகளை பிரிக்கிறது. கடந்த தடவை இந்த கட்சி பா.ஜ.க. அணியில் இடம் பெற்று இருந்தது. 10 இடங்களில் வெற்றி பெற்று இருந்த இந்த கட்சி பிரிக்கும் வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    அதுபோல பல தொகுதிகளில் சுயேட்சைகளின் ஆதிக்கமும் உள்ளது. அவர்கள் பிரிக்கும் வாக்குகள் 10 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும் அரியானாவில் கணிசமான அளவுக்கு உள்ள தலித் இன மக்களின் வாக்குகளும் முக்கியமான தாக கருதப்படுகிறது. அரியானா மக்கள் தொகையில் 25 சதவீதம் அளவிற்கு தலித் இன மக்கள் உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அரியானா தலித்துகளில் 68 சதவீதம் பேர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து இருந்தனர்.

    இதனால் இந்த தடவையும் அரியானா தலித்துகள் தங்களை ஆதரிப்பார்கள் என்று காங்கிரஸ் கூட்டணி தலை வர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 5-ந் தேதி ஓட்டுப் பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

    8-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    ×