என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction"

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.63 1/2குவிண்டால் எடை கொண்ட 5 ஆயிரத்து924 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.28.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.59-க்கும், சராசரி விலையாக ரூ.26.25-க்கும் என மொத்தம் ரூ.51ஆயிரத்து 441-க்கு விற்பனையானது.

    அதேபோல் 182.59 குவிண்டால் எடை கொண்ட 375-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.887.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.89-க்கும், சராசரி விலையாக ரூ.86.89-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.05-க்கும், சராசரி விலையாக ரூ.75.55-க்கும் என மொத்தம் ரூ.14லட்சத்து 69ஆயிரத்து 136-க்கு விற்பனையானது.

    அதேபோல் 3.10 குவிண்டால் எடை கொண்ட 4 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 132.69 -க்கும், குறைந்த விலையாக 110-க்கும் , சராசரி விலையாக ரூ116.19-க்கும் என ரூ39 ஆயிரத்து 185- க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.15லட்சத்து 59 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
    • இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இதுகுறித்து கிச்சிபாளையம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கூலி வேலை செய்து நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    நேற்று 111 விவசாயிகள் கலந்து கொண்டு 49 ஆயிரத்து 901கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு விற்பனை செய்து செல்கிறார்கள். நேற்று 111 விவசாயிகள் கலந்து கொண்டு 49 ஆயிரத்து 901கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 16 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.75க்கும், குறைந்தபட்சம் ரூ.59. 65க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37லட்சத்து 39ஆயிரத்து 958க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் சேர்ந்து ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து செலுத்த வேண்டும்.
    • மொத்த முள்ள 78 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100,ரூ4100,ரூ.4300,ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ்நிலையத்தில் 24 கடைகள், தினசரி மார்க்கெட்டில் 52 கடைகள், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகள் ஆக மொத்தம் 78 கடைகள் மாத வாடகைக்கு விட பொது ஏலம் விடும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், ஆணையாளர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.இந்த நிலையில் ஏற்கனவே ஏலத்தில் கடைகளை ஏலத்தில் எடுத்த வியாபாரிகளும், புதிய வியாபாரிகளும் கலந்து கொள்ளவில்லை.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது, சிறிய கடைகளின் அடிப்படை வாடகையே, ரூ.4ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. மேலும் ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் சேர்ந்து ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து செலுத்த வேண்டும். அடிப்படை வாடகையை குறைத்து நிர்ணயம் செய்து ஏலம் விட்டால் தான் கடைகளை ஏலம் எடுக்க முடியும்.

    தற்போது உள்ள வாடகைக்கு கடையை எடுத்து நடத்த முடியாது எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வாடகையை குறைத்து நிர்ணயம் செய்து ஏலம் விட வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஏலத்தில் குறைந்தளவே வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இதில் மொத்த முள்ள 78 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100,ரூ4100,ரூ.4300,ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுக்கப்பட்டது. இதில் அலுவலக மேலாளர் சண்முகராஜன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 28.37 1/2 குவிண்டால் எடை கொண்ட 8,616 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.25.89-க்கும் என மொத்தம் ரூ.66 ஆயிரத்து 904-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 107.66 1/2 குவிண்டால் எடை கொண்ட 235 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.89-க்கும், சராசரி விலையாக ரூ.81.36-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.71-க்கும், சராசரி விலையாக ரூ.71.16-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 17ஆயிரத்து 41-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 945-க்கு விற்பனையானது. 

    • ஆலங்குளம் பகுதிகளில் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
    • டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக் குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

    வருகிற 13, 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 3 தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.

    இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் வளாகத்தில் வருகிற 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான 5 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம்.

    மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

    வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத் தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடி யாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    இத்தகவலை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சாம்சன் தெரிவித் துள்ளார்.

    • .ஏலத்தில் 50 விவசாயிகள், 9 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.
    • ஏலத்துக்கு 2,350 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 907 கிலோ.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 2 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,350 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 907 கிலோ.தேங்காய் கிலோ ரூ.19.10 முதல் ரூ.26.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 25.45.46 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது.

    இவற்றின் எடை 1,011 கிலோ. கொப்பரை கிலோ ரூ. 57.15 முதல் ரூ. 82.45 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 79.05.ஏலத்தில் 50 விவசாயிகள், 9 வியாபாரிகள் கலந்துகொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா் 

    • ரூ.5.99 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது
    • ஏலத்திற்கு, 7,857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டுவந்தனர்.

    கரூர்:

    ப.வேலுார் வெங்க மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 84.39 ரூபாய்க்கும், குறைந்த பட்ச மாக, 51.65 ரூபாய்க்கும், சரா சரியாக, 84.39 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 5.99 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.




    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29.36 குவிண்டால் எடை கொண்ட 7,870 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.39-க்கும், சராசரி விலையாக ரூ.25.75-க்கும் என மொத்தம் ரூ.71ஆயிரத்து 113-க்கு தேங்காய் விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 219.07 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.12-க்கும், சராசரி விலையாக ரூ.81.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் என மொத்தம் ரூ.16லட்சத்து 67ஆயிரத்து 20-க்கு விற்பனையானது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.17 லட்சத்து 38 ஆயிரத்து 133-க்கு விற்பனையானது.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • மொத்தமாக 1,750 மஞ்சள் மூட்டைகள் ரூ.79 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம எடுத்தனர். இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,110 மூட்டைகளும், உருண்டை ரகம் 510 மூட்டைகளும், பணங்காலி ரகம் 130 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.3675 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7743-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.2665-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6199-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6669-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12065-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மொத்தமாக 1,750 மஞ்சள் மூட்டைகள் ரூ.79 லட்சத்திற்கு ஏலம் போனது.

    • கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.
    • டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற உள்ளது.திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.குறிப்பிட்ட தொகை வராத காரணத்தினால் 10ம் தேதி நடக்க இருந்த டெண்டரை மீண்டும் 20 ஆம் தேதி மாற்றி வைத்தனர்.

    இந்த நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவில் நிர்வாகமே கடைகளை வாடகைக்கு விட வேண்டும் .டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.நேற்றுகாலை 10 மணி அளவில் டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்க ப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மாலை 4 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது. வியாபாரிகள் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலக அலுவலர் அலுவலகம் முன்பு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவில் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆய்வாளர் ஆதிரைகோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியவர்கள் முன்னிலையில் டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டரை ஈட்டு வீராம்பாளையம் ஊராட்சி சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ரூ 7லட்சத்து பத்தாயிரத்திற்கு டென்டரை எடுத்தார்.மேலும் டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    • க.பரமத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலம்
    • விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூட லூர் மேற்கு, கார்வழி, கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புன்னம், தென்னிலை, துக்காச்சி, ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர். வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக் காடுதுறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் எள் சாகுபடி செய்யப்படுகிறது.மேற்கண்ட பகுதிகளில் விளையும் எள் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் பலர் மலிவு விலைக்கு விற்க மனமில்லாமல் பலர் எள் காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுக்கின்றனர்.பிறகு மீதம் உள்ள எள்ளை மூட்டைகளாக கட்டி கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 100மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டதில் கருப்பு எள் ஏலத்தில் ஒரு கிலோ குறைந்த விலையாக ரூ.146, அதிக விலையாக கிலோ ரூ.166க்கு ஏலம் போனது. இதேபோல, சிகப்பு எள் ஒரு கிலோ குறைந்த விலை யாகரூ. 151, அதிக விலையாக கிலோ ரூ. 50கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.

    ×