என் மலர்
நீங்கள் தேடியது "beef"
- முதல்வர் நயாப் சிங் சைனி, பசு மீதான பாசத்தில் மக்கள் அப்படி செய்வதை யாரால் தடுக்க முடியும், அவர்களை குண்டர்கள் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
- 'வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகார ஏணியில் ஏறியவர்கள், நாடு முழுவதும் தங்களின் ஆட்சியின் மீதான பயத்தை விதைத்து வருகின்றனர்'
அரியானாவில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக எண்ணி பசு பாதுகாப்பு குண்டர்களால் புலம்பெயர் தொழிலாளியான சாபிர் மாலிக் என்ற இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டுக்கறி எடுத்துவந்ததாகத் தனது மகளுடன் வந்த இஸ்லாமிய முதியவரை சக பயணிகள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இந்த இரண்டு சம்பவங்களில் வீடியோவும் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரியானாவில் நடந்த சம்பவம் தொடர்பாக பேசிய பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, பசு மீதான பாசத்தில் மக்கள் அப்படி செய்வதை யாரால் தடுக்க முடியும், அவர்களை குண்டர்கள் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகார ஏணியில் ஏறியவர்கள், நாடு முழுவதும் தங்களின் ஆட்சியின் மீதான பயத்தை விதைத்து வருகின்றனர். பாதுகாலவர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள வெறுப்பு சக்திகள், வெளிப்படையாகவே வன்முறையைப் பரப்பத் தொடங்கியுள்ளன. அதன்மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு பகிரங்கமாகச் சாவல் விடுத்துள்ளது.
பாஜக அரசால் இந்த அயோக்கியர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதனால்தான் துணிச்சலாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் எந்த விலையையும் கொடுத்தாகினும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டது
- கும்பாபிஷேகத்தில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பிரான பிரதிஷ்டை கும்பாபிஷேகத்தின்போது கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு 300 கிலோ அளவிலான 1 லட்சம் திருப்பதி லட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாக கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ லட்டுகளை விருந்தினர்களுக்கு விநியோகித்தோம் என்று அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆசார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது அருவருப்பானது.
- பக்தி இல்லாத இடத்தில புனிதத்தன்மையும் இருக்காது.
ஜக்கி வாசுதேவ்திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டுக்கள் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்று ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் காசை மிச்சப்படுத்த இந்த முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயடு குற்றம் சாட்டியுள்ளார். மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த திருப்பதி லட்டு விவகாரம் அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டிறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது அருவருப்பானது. இந்த சம்பவம் மிகவும் அருவருப்பூட்டுகிறது. இதனால்தான் கோவில்கள் அரசின் கட்டுபாட்டிலன்றி பக்தர்கள் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என்று கூறுகிறோம், பக்தி இல்லாத இடத்தில புனிதத்தன்மையும் இருக்காது.
பக்தியுள்ள இந்துக்கள் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மதகுரு ஜக்கி வாசுதேவ் கோவையில் ஈசா யோகா மையத்தை நிறுவி ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மதகுரு ரவி சங்கரும் லட்டு விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
- பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்
- ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். விரத முடிவில் முவில் அக்டோபர் 1,2-ந் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற அனாச்சாரங்கள் நடபத்தை தடுக்க தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷனா [பாதுகாப்பு] சங்கம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பிற மதங்களை ஒப்பிட்டு இந்த விவகாரத்தில் பவன் கல்யாண் மற்றொரு கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
அதாவது, திருப்பதி கோவிலில் நடந்ததுபோல தேவாலயத்திலோ, மசூதியிலோ நடந்திருந்தால் இந்நேரம் நாட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அந்த விஷயம் உலகம் முழுவதும் பேசப்பட்டு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கும். ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் மத நம்பிக்கை புண்பட்டுள்ள வேளையில் நாம் மதச்சார்பற்றவர்கள் எனக் கூறி இதை பிரச்சனையாக வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- சாவர்க்கர், அசைவம் உண்பவர். பசுவதைக்கு எதிரானவர் அல்ல.
- பிராமணராக இருந்து கொண்டு மாமிசம் உண்பதை வெளிப்படையாக பிரசாரம் செய்து வந்தார்.
சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தினேஷ் குண்டுராவ், "சாவர்க்கர், அசைவம் உண்பவர். பசுவதைக்கு எதிரானவர் அல்ல. அவர் மாட்டிறைச்சியையும் சாப்பிட்டு வந்ததாக சிலர் கூறுகின்றனர். பிராமணராக இருந்து கொண்டு மாமிசம் உண்பதை வெளிப்படையாக பிரசாரம் செய்து வந்தார்.
பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா இஸ்லாத்தை மிக தீவிரமாக பின்பற்றுவர் அல்ல. அவர் பன்றி இறைச்சியைக் கூட சாப்பிட்டார். ஜின்னா முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளமாக மாறினார். அவர் ஒருபோதும் அடிப்படைவாதி அல்ல" என்று தெரிவித்தார்.
சாவர்க்கர் குறித்த காங்கிரஸ் அமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று.
- ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
சென்னையில் துறைமுகத்தில், எருமை மாட்டுக் கறி என கூறி, 28 மெட்ரிக் டன் காளை மாட்டுக் கறியை ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததை தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதியை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று அளித்திருந்தது.
சந்தேகத்தின்பேரில், இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதைதொடர்ந்து, தவறான தகவலை கூறி, ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக, டெல்லியை சேர்ந்த யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது சுங்கவரி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாளர் முகமது காலித் ஆலம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
- ரினிமா போரா இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
- இன்று வரை சிலர் இது என் தவறு என்றே சொல்கிறார்கள்.
திருமதி இந்தியா 2024 பட்டம் வென்ற ரினிமா போரா தனது காதலன் தனக்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டியதாகவும், தன்னை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார். பிரபல யூடியூபருக்கு அவர் அளித்த நேர்காணலில் ரினிமா போரா இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"கடந்த 16 வருடங்களாக நான் துஷ்பிரயோகத்தை அனுபவித்து வருகிறேன். அதை மறக்க எனக்கு பல ஆண்டுகள் ஆகும். அந்த நாட்கள் இப்போது முடிந்துவிட்டன என்று ஒவ்வொரு நாளும் நான் ஆறுதல் கூறிக் கொள்கிறேன். இன்று வரை சிலர் இது என் தவறு என்றே சொல்கிறார்கள். அதற்காக நான் இன்றும் போராடுகிறேன்." என்று அவர் கூறினார்.

"16 வயதில், நான் அசாமில் இருந்து பெங்களூருவுக்கு படிக்க சென்றேன். எனது முதல் உறவு அங்கு ஒரு முஸ்லிம் ஆணுடன் இருந்தது. என் பெற்றோரைப் போலவே, அவர் என் சொந்த நலனுக்காக என்னை துன்புறுத்துவதாக நான் நினைத்தேன். சமயங்களில் அவர் என்னை நடத்திய விதத்திற்காக நான் அவரை தலிபான் என்றும் அழைத்தேன்."
"அவர் என்னை கொடூரமாக அடித்தார். என்னை மாட்டிறைச்சி சாப்பிட வைத்தார். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி சாப்பிட வைத்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அவரது பெற்றோர் என்னை மாட்டிறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்தினார்கள். என் பெயரை ரினிமா போராவிலிருந்து ஆயிஷா ஹுசைன் என்று மாற்றினார்கள். என்னையும் நமாஸ் செய்ய வைத்தார்கள்," என்று ரினிமா போரா தெரிவித்தார்.
நேர்காணலின் போது, இது ஒரு லவ் ஜிஹாத் சூழ்நிலை என்று அவர் ஒப்புக்கொண்ட ரினிமா, "அவர் இந்த பாட்காஸ்டை பார்த்து கொண்டிருக்க வேண்டும். நான் அவரை விட்டுவிட்டால் என் மீது ஆசிட் வீசுவேன் என்று அவர் மிரட்டினார்," என்று தெரிவித்தார்.
- உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை
- கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.
அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அசாமில் திருத்தம் செய்யப்பட்ட கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோயில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும்.
இந்த சட்டத்தை திருத்தி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி தடைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக கூறி நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றச்சாட்டு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவுகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை உணவு திருவிழாவில் கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17 இல் மாட்டிறைச்சி உணவும் விற்பனை செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டு குழுவினராக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளனர்.
- அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற விஷயங்களுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த அரசு முயற்சிக்கலாம் என்று அசாம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோவில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டிறைச்சி கடத்தியதாக இளைஞர் ஒருவர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அந்த இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அசாம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலீசார் வாகன சோதனையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை பிடித்தனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன இறைச்சி என்பதை அவர் கூற மறுத்துள்ளார். இறைச்சி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது தரப்பு நபர், ஒரு கிடங்கின் உரிமையாளர். இறைச்சியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை. இவருக்கு அது என்ன இறைச்சி என்று கூட தெரியாது" என்று தெரிவித்தார்.
2 தரப்பு வாதங்களும் கேட்ட உச்ச நீதிமன்றம், "அசாம் மாநில அரசு இதுபோன்று மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 8-இன் படி விற்கப்படும் இறைச்சி மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த முடியும் என்று கூறிய உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது.
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.
கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloods2018