என் மலர்
நீங்கள் தேடியது "Beer"
- டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
- கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் முன்பாகவே மேலும் தாக்கம் கடுமையாக உள்ளது.
அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.
ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.
இதுபற்றி திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களில், பீர் விற்பனை 8 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 18 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளது.
வருகிற மே மாதத்தில் விற்பனை 18 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 8 டிப்போக்களிலும் தேவைக்கு ஏற்ப பீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.
பாராளுமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது என தெரிவித்தார்.
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர் கூறும் போது, சமீபத்தில் சாதாரண பீர் பாட்டில்களின் விலை ரூ.170லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் அது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பகலில் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது என்றார்.
- டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
- கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உட்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.
தற்போது கோடை வெயில் வெழுத்து வாங்குவதாலும், 109 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதாலும், டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீரென பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல கடைகளில் தேடி அழைந்தும் பீர் கிடைக்காத விரக்தியில் சரக்கு குடித்து செல்கின்றனர்.
மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதாலும், "குடிமகன்கள்" விரும்பும் சரக்குகள் கிடைப்பதில்லை. குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன.
விலை அதிகரிப்பு உள்ள சரக்குகள் தான் கிடைக்கின்றன. என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் குளு குளு பீர் வகைகள் கிடப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி ‘பீர்’ விற்பனை ஆகும்.
- ‘பீர்’ விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது.
சென்னை:
வெப்பம் வாட்டி வதைத்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக 'கூலிங் பீர்'தான் இருந்து வருகிறது. வழக்கமாக கோடை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் நடப்பாண்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் 'பீர்' வாங்கி குடிக்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை ஆகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 36 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை செய்யப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் பார்க்கும் போது இது வழக்கமான நாட்களில் விற்பனை ஆகும் 'பீர்' பாட்டில்களைவிட 44 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 'பீர்' விற்பனை அதிகரித்து இருப்பதால், டாஸ்மாக் நிறுவனத்துக்கான வருவாயும் உயர்ந்திருக்கிறது. அதாவது ரூ.20 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.
உதாரணமாக, நேற்று முன்தினம் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை மண்டலம் என மொத்தம் தமிழ்நாட்டில் 162 கோடியே 83 லட்சத்துக்கு மதுப்பாட்டில்கள் விற்பனை ஆகி இருந்தது.
இதில் 'பீர்' விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதாவது, மொத்த விற்பனை விலையில் 18 சதவீதம் பீர் விற்பனைதான் இருக்கிறது.
- மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
- நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.
நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.
நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.
- பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது.
- குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர்.
காய்ச்சிய உடனே குடிக்கும் சரக்கில் தான் மது போதை கிக் அதிகம் என மது பிரியர்கள் நினைக்கிறார்கள். மது பிரியர்களின் இந்த தீராத குறையை தீர்க்க ஐதராபாத்தில் குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபான கூடங்களில் டேப் ரூம் என்ற பெயரில் புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான கூடங்களில் நண்பர்கள், கூட்டாளிகள், தோழிகள் என யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த டேப் ரூம் மதுபான கூடம் பீர் பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான புத்துணர்ச்சியை ஊட்டும் அனுபவத்தை வழங்குகிறது. அதாவது வரிசையாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது. அதனை பிடித்து குடிமகன்கள் அப்படியே குடிக்கலாம்.
விட்டில், கோதுமை, ஜேம்ஸ் ப்ளாண்ட், அங்கிள் டங்கிள் உள்ளிட்ட உயர் ரக பீர் வகைகள் இந்த குழாய்களில் வருகின்றன. எந்த குழாயில் எந்த வகையான பீர் வரும் என்ற பெயர் குழாய்களுக்கு மேலே அச்சிடப்பட்டுள்ளன.
இதிலும் தனித்துவம் என்னவென்றால் இந்த குழாய்களில் வரும் பீர் ஆலைகளில் இருந்து காய்ச்சிய உடனே மதுபான கடைக்கு கொண்டுவரப்பட்டு அப்படியே குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் காய்ச்சிய உடனே பீர் குடிக்கும் அனுபவம் கிடைக்கிறது. குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர். பல்வேறு விதமான பீர்களை அவர்களே பிடித்து ருசித்து மகிழ்கின்றனர். இந்த புதிய திட்டத்தால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மதுபான கூட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- எந்த மதுவை குடித்தாலும் அவர்களுக்கு அது ஒத்துப்போகாது.
- விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வை தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது.
நாளைல இருந்து அந்தக் கருமத்தை கையில தொடவே கூடாது என்று சபதம் எடுக்கும் குடிமகன்கள் அடுத்த நாளே சபதத்தை முடித்துவிட்டு மீண்டும் உற்சாக உலகில் மிதக்க தொடங்கி விடுகிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் மிகவும் அதிகரித்தே காணப்படுகிறது. விதவிதமான மது வகைகள் இருந்தபோதிலும் விஸ்கி, பிராந்தி, பீர் ஆகியவற்றை மட்டுமே அதிக அளவில் மது பிரியர்கள் குடித்து வருகிறார்கள். மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற போதிலும் மது பிரியர்களால் அதனை முழுமையாக விட முடிவதில்லை.
குறிப்பிட்ட வகை மதுவை அருந்தி பழகி விட்டவர்கள் வேறு எந்த பிராண்டையும் தொடுவதில்லை. அதே நேரத்தில் ஒரு சிலர் எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடித்து விடுவதும் உண்டு. காக்டைல் என்று அழைக்கப்படும் மது கலவையும் பார்களில் பரிமாறப்படுவது உண்டு. இப்படி மது குடிப்பவர்களை விதவிதமாக பட்டியல் போட்டுவிடலாம்.
விஸ்கி பிராந்தியை மட்டுமே குடிப்பவர்களில் பலர் அதற்கு மட்டுமே அடிமையாகி தொடர்ந்து பிராந்தியையே குடித்து வருவார்கள். வேறு எந்த மதுவை குடித்தாலும் அவர்களுக்கு அது ஒத்துப்போகாது. அதேபோன்று பீர் மட்டுமே குடிப்பவர்களும் உண்டு. இந்த இரண்டும் நமக்கு ஆகவே ஆகாது. நமக்கு ஏத்த சரக்கு விஸ்கி மட்டும்தான் என்று கூறிக்கொண்டு போதையில் மூழ்கிக் கிடப்பவர்கள் ஏராளம். விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகமாக்கி விடும் என்று கூறுவார்கள். இதனால் விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வை தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது. இதனால் புது மாப்பிள்ளைகளுக்கு குடிமகன்கள் பலர் மாப்ள... அப்பப்ப விஸ்கிய உள்ள தள்ளிக்க... சரியா ? என்று கிண்டலாக கூறுவதும் உண்டு.
இப்படி போதையில் விழுந்து கிடக்கும் விஸ்கி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. தொடர்ச்சியாக விஸ்கி குடிப்பவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் பெண்ணாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.
இது தொடர்பாக 100 குடிமகன்களுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்குள் 8 முறை மது கிண்ணங்களில் விஸ்கியை ஊற்றி கொடுத்து பரிசோதித்து பார்த்ததில் இது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்கிற அமிலம் விஸ்கி சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக சுரந்து அதுவே ஆண்மைத் தன்மையை காலி செய்வதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்று விஸ்கி சாப்பிடுபவர்கள் நாளடைவில் முழு மங்கையாக மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே விஸ்கி பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் சமூக வலைதள பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த சோதனை முடிவில் விஸ்கி சாப்பிடுபவர்கள் பெண்களைப் போல அமைதி சொரூபமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. யாருடனும் அதிகமாக வாதாடாமல் அவர்கள் அடக்க ஒடுக்கமாக பெண் தன்மையுடன் மாறி இருந்ததாகவும் கூறப்படுகிறது. சில பெண்கள் என்னதான் தவறு செய்தாலும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.
அது போன்ற உணர்வுகளையும் விஸ்கி குடித்த ஆண்களிடம் காண முடிந்துள்ளது. அதே நேரத்தில் அவர்கள் சம்பந்தம் இல்லாமல் அதிகமாக பேசிக் கொண்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. எனவே விஸ்கி பிரியர்களே உஷாராக இருங்கள். ஒருவேளை உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு நீங்கள் பெண்ணாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் உங்களது வரலாறே மாறி விடும். ஆபத்தும் உள்ளது. நீங்கள் வசந்தாக இருந்தால் வசந்தியாக மாற நேரிடும். கண்ணனாக இருந்தால் கண்ணம்மாவாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
உஷார் உஷார் உஷார்....
- இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
- ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
- பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் எப்போதும் மதுபானங்களின் மீதான கலால் வரி கர்நாடக பட்ஜெட்டில் உயர்த்தப்படும். இதன் மூலம் மதுபானங்கள், பீர் வகைகளின் விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கர்நாடக அரசு, கலால் வரியை உயர்த்தி பீர் விலையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக சில குறிப்பிட்ட பீர்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது.
இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் கலால் துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயரும் பீர்களின் பழைய மற்றும் புதிய விலை விவரம் பின்வருமாறு:-
இந்த விலை உயர்வின் படி லெஜண்ட் ரூ.145 (பழைய விலை-ரூ.100), பவர் கூல் ரூ.155 (ரூ.130), பிளாக் போர்ட் ரூ.160 (ரூ.145), ஹண்டர் ரூ.190 (ரூ.180), உட்பகர் கிரஸ்ட் ரூ.250 (ரூ.240), உட்பகர் கிளைட் ரூ.240 (ரூ.230) ஆக உயர்த்தப்பட உள்ளது.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- சிங்கப்பூரில் பிரபலமான டைகர் பீர் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
- முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
தெலுங்கானா மாநில அரசின் நடத்தை காரணமாக பீர் விநியோகத்தை நிறுத்துவதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இங்குள்ள பீர்களுக்கு பதிலாக புதிய நிறுவன பீர்களை அறிமுகப்படுத்த மாநில அரசு முயற்சித்து வருகிறது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நடந்த உயர்மட்ட பரிசீலனையில் ஏற்கனவே பல பரிந்துரைகள் பெறப்பட்டது.
சிங்கப்பூரில் பிரபலமான டைகர் பீர் தெலுங்கானாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சிங்கப்பூர் செல்ல உள்ளார். டைகர் பீர் நிறுவன பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
தெலுங்கானாவில் டைகர் பீர் வந்தால் அதிக அளவில் விற்பனை நடக்கும். இதனை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மது வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டைகர் பீர் நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக அளவு சலுகை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அங்குள்ள குடிமகன்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது.
- வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக கூலிங் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
குறிப்பிட்ட பீர் வகைகள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது. வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.
இதனால் ஏப்ரல் மாதத்தில் 20 சதவீதமும், மே மாதத்தில் 25 சதவீதமும், ஜூன் மாதத்தில் 40 சதவீதமும் பீர் விற்பனை அதிகரித்தது.
இந்த நிலையில் தற்போது ஜில் பீர் விற்பனை குறையத் தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஜில் பீர் விற்பனை சரிந்தது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த மாதம் பீர் விற்பனை 45 சதவீதம் வரை அதிகரித்தது. அதனால் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் 'கூலிங்' பீர் விற்பனை குறைந்தது.
சென்னையில் மட்டும் 20 சதவீதமும், தமிழகம் முழுவதும் 30 சதவீதமும் ஜில் பீர் விற்பனை சரிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணியத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிரடி சோதனை ஒரு வாரமாக நடக்கிறது.
90 நாட்களுக்கு மேலான உயர் வகை சரக்குகள் கடையில் இருப்பு வைக்க கூடாது, எந்த பிராண்ட் மது அதிகளவு விற்கப்படுகிறதோ அதனை ஒரு வாரம் விற்பனை அளவில் இருப்பு வைக்க வேண்டும்.
நடுத்தர, குறைந்த ரக மதுபானங்கள் அதிகமாக விற்பனை ஆவதால் அதனை 'இல்லை' என்று சொல்லாமல் இருப்பு வைக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை, வெளிநபர்கள் வேலைபார்த்தல், சட்ட விரோத பார் செயல்படுதல் போன்றவற்றை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னையில் மட்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் தெரிவிக்கின்றது.
- கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது.
- மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சிறப்பு பீர் தயாரிக்கப்படுகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.
சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.
நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது.
தமிழ்நாட்டில் ‘அக்னி நட்சத்திரம்’ வெயில் தொடங்குவதற்கு முன்பே வேலூர், திருத்தணி, மதுரை, சேலம் உள்பட பல மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாத குடிமகன்கள் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு சென்று ‘பீர்’ குடிப்பது அதிகமாகி உள்ளது.
அப்போது ‘பீர்’ கூலிங்காக இல்லாவிட்டால் கடைக்காரர்களுடன் வாக்கு வாதம் செய்கின்றனர். பல கடைகளில் குளிர் சாதன பெட்டி பழுதாகி கிடப்பதால் ‘கூலிங் பீர்’ கொடுக்க முடிவதில்லை.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மழை காலத்தை விட வெயில் காலத்தில் தான் பீர் விற்பனை அதிகரிக்கும்.
எனவே, பழைய குளிர் சாதன பெட்டிகளை மாற்றி விட்டு புதிய குளிர்சாதன பெட்டிகளை தந்தால்தான் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகத்தின் தரப்பில் பழுதாகி செயல்படாத குளிர்சாதன பெட்டிகள் எத்தனை கடைகளில் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கடைகளுக்கு புதிய குளிர்சாதன பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்தது. அதை மதுக்கடைகளுக்கு இப்போது வழங்கி வருகின்றனர்.
இதனால் சென்னையில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் ‘கூலிங் பீர்’ தட்டுப்பாடின்றி கிடைப்பதாக குடிமகன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #TNTasmac