என் மலர்
நீங்கள் தேடியது "Bill Gates"
- AI டூல்ஸ் மூலம் பல்வேறு டீப்ஃபேக் உருவாக்கப்படுகிறது.
- தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் ஏய் (AI) முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.
உரையாடல் முடிவில் பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் ஊட்டசத்து தொடர்பான புத்தகங்களை பரிசாத வழங்கினார். அதற்குப் பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை பரிசாக வழங்கினார்.
உள்நாட்டிற்கு தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் "Vocal for Local" என்பதை வலியுறுத்தும் வகையில் பரிசு பொருட்கள் அமைந்திருந்தது.
அதில் ஒன்று தூத்துக்குடி முத்து ஆகும். தூத்துக்குடி முத்தை பில் கேட்ஸ்க்கு பரிசளித்த பிரதமர், இது தூத்துக்குடி முத்து. தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் முத்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள மீனவர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்றார்.
இந்த உரையாடலின்போது "AI மிகவும் முக்கியமானது. சில நேரங்களில் நான் நகைச்சுவைக்காக, எங்களுடைய நாட்டில், நாங்கள் எங்களுடைய தாயாரை ஏய் (Aai) என அழைப்போம். தற்போது நான் சொல்கிறேன், குழந்தைகள் பிறக்கும்போது அவன் ஏய் (Aai) என சொல்கிறான். அதுபோன்று AI குழந்தைகள் முன்னேறிவிட்டன என்பேன்" எனத் தெரிவித்தார்.
#WATCH | After their interaction, Bill Gates presents a few nutrition books to PM Modi as gifts.PM Modi gifts him 'Vocal for Local' gift hampers. pic.twitter.com/JYGj10BzU1
— ANI (@ANI) March 29, 2024
அவர் பில் கேட்ஸை NaMo செயலி மூலம் ஒரு செல்ஃபி எடுக்கச் சொன்னார், பின்னர் அதை முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கண்டறியலாம் என்பதைக் காட்டினார்.
மேலும், AI டூல்ஸ் மூலம் பல்வேறு டீப்ஃபேக் உருவாக்கப்படுகிறது. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- டெல்லி ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
- இதில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார்.
வாஷிங்டன்:
பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இதற்கிடையே, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பில் கேட்ஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.
- செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
- இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இளம் இன்டர்ன்கள் (பயிற்சி பெறுபவர்) பில் கேட்ஸ்-ஐ தனிமையில் சந்திப்பதை தடை செய்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் நியூ யார்க் டைம்ஸ் செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
"நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும், இளம் பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பது, அவர்களை இரவு உணவுக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களை செய்ய பில் கேட்ஸ் ஒருபோதும் தவறியதே இல்லை," என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மைமக்ரோசாப்ட் மட்டுமின்றி இதே போக்கு மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷனிலும் தொடர்ந்தது என்று கூறப்படுகிறது. பவுன்டேஷனுக்கு வரும் இளம் இன்டர்ன்களிடம் பில் கேட்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார், இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.
கிட்டத்தட்ட இரண்டாவது மற்றும் மூன்றாம் கைக் கதைகள் மற்றும் அநாமதேய ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இந்த புத்தகத்தில், பல சந்தர்ப்பங்களில் எங்கள் அலுவலகம் ஆசிரியருக்கு வழங்கிய உண்மையான ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளைப் புறக்கணிக்கும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த பில் கேட்ஸ் செய்தி தொடர்பாளர், "இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியுள்ளது. இவை பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டாம்கட்ட மற்றும் மூன்றாம்கட்ட பெயர் அறியப்படாத ஆதாரங்களையே சார்ந்து இருக்கிறது," என்று தெரிவித்தார்.
- நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
- 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.420 கோடி) நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு அளித்து வருகிறார்.
- 14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீதத்தில் முடிந்தது
- விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வுகூடமான இந்தியா
இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் கூறியுள்ள கருத்துக்கு கண்டங்கள் எழுந்துள்ளது. வேலை தேடும் தளமான லிங்க்ட்இன் தளத்தின் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கடினமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன, மேலும் அவை போதுமான அளவு நிலையான வருவாய் உருவாகி வருகிறது.
இன்னும் 20 வருடங்கள் கழித்து அங்குள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பார்கள். எனவே இந்தியா [புதிய] விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடம் போன்றது. அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை [திட்டங்களை] இடங்களுக்கு[ நாடுகளுக்கு] எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

சோதனை எலிகளான பழங்குடியின மாணவிகள்
முன்னதாக பில் கேட்ஸ் தனது மனைவி பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனமான மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன்14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீத முடிவுகளைசுட்டிக்காட்டி பலர் பில் கேட்ஸ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் PATH (Programme for Appropriate Technology in Health) என்ற அரசு சாரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் [ ICMR] உடன் இணைத்து தெலுங்கானா மற்றும் குஜராத் வதோதரா பகுதிகளில் உள்ள 14,000 பழங்குடியின மாணவிகளுக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவுகள் பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு, பல மாணவிகளுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டது. 7 பழங்குடியின மாணவிகள் சோதனை தடுப்பூசி விளைவுகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் தொற்று பாதிப்பு, தற்கொலை என வேறு விதமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

கோப்புப் படம்
விழிப்புணர்ச்சி
விசாரணையின்மூலம் ஆராய்ச்சியில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சுகாதார முன்னெடுப்பு என கூறி இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் சம்மத படிவத்தில் பழங்குடியின மாணவிகளின் பெற்றோருக்குப் பதில் அவர்கள் தங்கிப் படித்து வந்த விடுதி காப்பாளர்கள் கையெழுத்திட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியின சிறுமிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்கின் டாக்டர்
2009 தடுப்பூசி சோதனைகள், வெளிநாட்டு நிதியுதவியுடன் நிறுவனங்களால் இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் எவ்வாறு சோதனைக் களமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 'ஸ்கின் டாக்டர்' என்ற விமர்சகர், நிதியுதவி பெறும் எத்தனை என்ஜிஓக்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற சோதனைகளை நடத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

எங்களை வெளிப்படையாகக் கினிப் பன்றிகளாக நடத்தும் அதே வேளையில், எங்கள் ஆட்சியாளர்களை அவர்கள் எவ்வளவு எளிதாக அணுகுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்காக இந்தியா வந்த பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார்.
- டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறினார்
உலக பணக்காரர்களான மைகோரோசாப்ட் நிறுவர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் நீண்ட நாள் பகையாளிகள். பில் கேட்ஸை தனது கருத்துக்களால் அவ்வப்பொது எலான் மஸ்க் சீண்டுவது வழக்கம்.
டிரம்ப் ஆதரவால் தற்போது அமெரிக்க அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எலான் மஸ்க் சொத்துமதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் மீண்டும் பில் கேட்ஸை சீண்டியுள்ளார்.

'டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்' என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார். பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விஷயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் பொசிஷன் ஆகும்.
டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார்.
இதன்படி டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது பில் கேட்ஸ்-கு அதிக லாபத்தை வழங்கும். இதற்கு, எலான் மஸ்க் கடுமையான எதிர்வினையாற்றினார். அதிலுருந்து இருவருக்குமிடையில் பகை வளர்ந்தது.

இந்த நிலையில்தான், தற்போது தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றும் விதமாக டெஸ்லா திவாலாகாமல் ஒரு வேலை அதற்கு நேர்மாறாக உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்தால் அதனால் பில் கேட்ஸ் கூட சொத்துக்களை இழந்து திவாலாகி விடுவார் என்று மஸ்க் தம்பட்டம் அடித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்டின் சந்தை மூலதனம் அல்லது சந்தை மதிப்பு $3.316 டிரில்லியன் ஆகும். அதேவேளை டெஸ்லாவில் சந்தை மதிப்பு $1.251 டிரில்லியன் ஆகும்.
- சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முதலீட்டு உச்சி மாநாடு நடந்து வருகிறது.
- இதில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டாவோஸ் சென்றுள்ளார்.
டாவோஸ்:
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முதலீட்டு உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திரப் பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சை நேற்று சந்தித்தார்.
பில்கேட்சுடனான சந்திப்பைத் தவிர, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில் AI மையம் நிறுவுவதற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் நாயுடு செயல்பட்டு வருகிறார்.
யுனிலீவர், பெட்ரோனாஸ், கூகுள் கிளவுட், பெப்சி மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் முதல் மந்திரி நாயுடு சந்திக்க உள்ளார்.
உச்சி மாநாட்டின் இடையில் பில்கேட்ஸ் சந்தித்த இரு இந்திய தலைவர்களில் ஒருவர் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டது.
- சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.
இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பில் கேட்ஸ், "அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 1% க்கும் குறைவாகவே வெளிநாட்டு உதவிக்காக செலவிடுகிறது என்றாலும், இந்த நிதி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. ஆகவே சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூலமாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவக்கும்" என்று தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை பல நாடுகளுக்கு சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது. USAID நிறுவனத்துடன் இணைந்து பில் கேட்சின் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.
- ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் நீடா கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கலந்துகொண்டார்.
அப்போது நடந்த கலந்துரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது உலக பணக்காரர் பில் கேட்ஸ் அல்லது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆகிய இருவரில் யாருடன் இரவு உணவு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீடா அம்பானி, "ரன்பீர், ஏனென்றால் என் மகன் ஆகாஷ் மிகவும் சந்தோஷப் படுவான்- ரன்வீர் ஆகாஷின் சிறந்த நண்பர்" என்று பதில் அளித்தார்.


இதற்கு முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீடா, மோடி நாட்டுக்கு சிறந்தவர், முகேஷ் வீட்டுக்கு சிறந்தவர் என முத்தாய்ப்பாகப் பதில் கொடுத்தார்.
- இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என பில் கேட்ஸ் பாராட்டினார்.
- பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.
வாஷிங்டன்:
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பில் கேட்ஸ் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதில் இந்தியாவின் முயற்சிகளைப் பில் கேட்ஸ் பாராட்டினார்.
- இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வாழ்த்துகள் நரேந்திர மோடி. சிறந்த நிர்வாகத்துக்கான மற்றொரு மைல் 200 கோடி தடுப்பூசிகள். கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.