என் மலர்
நீங்கள் தேடியது "BLOOD DONATION CAMP"
- கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
- திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயங்கி வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் 1, 2 மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 231 (சுயநிதி பிரிவு) இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை குழுவின் மூலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது மேற்பார்வையில் சுமார் 10 மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் 62 பேர் ரத்ததானம் வழங்கினா். சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. மேலும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். நிகழ்ச்சி முடிவில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்திட்ட அலுவலர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கணிப்பொறி தலைவர் வேலாயுதம் மற்றும் சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க சுயநிதிப்பிரிவு திட்ட அதிகாரி பேராசிரியர் பார்வதி தேவி மற்றும் மாணவ செயலர்கள் சொரிமுத்து, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.
தாராபுரம்:
தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் , அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் விக்டர் லாசரஸ் தலைமை தாங்கினார். முகாமை தாராபுரம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அரசு வக்கீல் உதயச்சந்திரன், தாராபுரம் அரசு கூடுதல் வக்கீல் இந்துமதி, வக்கீல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு 48 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். முகாமில் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.
- கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவகங்கையில் நடந்தது.
- இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
சிவகங்கை
கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவ கங்கை மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
14-ந்தேதி பையூர் பிள்ளைவயல் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரு கூத்து நிகழ்ச்சியும், மரம் நடும் விழாவும் நடந்தது. 15-ந்தேதி சிவகங்கை கூட்டுறவு பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடந்தன.
16-ந்தேதி பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி யில் நடந்தது. இதில் ஏராள மானோர் ரத்ததானம் செய்தனர்.
முன்னதாக முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இணை பதிவாளர் ஜீனு, மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலச்சந்திரன், இணைப்பதிவாளர் நாகராஜன், துணைப்பதிவாளர் குழந்தை வேலு, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சர்மிளா திலகவதி, மருத்துவ கண்கா ணிப்பாளர் ராமநாதன், உதவி நிலைய மருத்துவர் முகமது ரபி, அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இன்று (வியாழக்கிழமை) மன்னர் மேல்நிலைப்பள்ளி யில் ஓவிய ேபாட்டியும், இடைய மேலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவ முகாமும் நடக்கிறது. நாளை (18-ந்தேதி) காரைக்குடியில் மருத்துவ முகாமும், 19-ந்தேதி இளையான்குடி, காரைக்குடி கூட்டுறவு நகர வங்கிகளின் உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் நடக்கிறது. 20-ந்தேதி திருப்பத்தூர் கூட்டுறவு நிறைவு விழா நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மெடிக்கல் கேம்ப் தலைவர் அருள்செல்வம், ரோட்டரி ஐ.எம்.ஏ. ரத்த வங்கி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ரத்த தானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் ஐ.டயானா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இண்டராக்ட் கிளப் மற்றும் சாரண-சாரணியர்கள், இயக்க மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- முகாமினை கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நெல்லை:
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் கிராம உதயம் பொது மேலாளர், அறங்காவலர் தமிழரசியின் 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபால சமுத்திரம் கிராம உதயம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக ரத்த தானம் வழங்கும் முகாம் இன்று கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.
அம்பாசமுத்திரம் ரத்த வங்கி அலுவலர் ராஜேஷ்வரி, பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைலா ஆகியோர் ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் சுகாதார மேற்பார்வை யாளர் பூங்கொடி சுகாதார ஆய்வாளர் அக்பர் அலி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். முகாமில் 86 பேர் ரத்ததானம் செய்தனர்.
- இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார்.
பரமத்தி வேலூர்:
6-வது தேசிய சித்த மருத்துவ நாளை கொண்டா டும் வகையில், பரமத்தி வேலூர் நண்பர்கள் குழு, அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை, நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன் வரவேற்றார். வேலூர் நகர வர்த்தக தலைவர் சுந்தரம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பள்ளியின் செயலாளர் செல்வராசு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார். முகாமில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை சித்த மருத்துவர் பர்வேஸ் பாபு தலைமையில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிவகாமி (பரமத்தி ), சித்ரா(கபிலர்மலை), கோகிலா (நல்லூர்), நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா, நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் ஆகியோர்
கொண்டகுழுவினர், முகாமில் கலந்து கொண்ட
வர்களுக்கு பரிசோதனை களும், சிகிச்சைகளும் அளித்தனர்.
அதேபோல் நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா தலைமை யிலான குழுவினர் ரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தம் எடுத்தனர். இதில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தனர். முடிவில் நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் நன்றி கூறினார். முகாமில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
- ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் முகாமிற்கு தலைமை தாங்கினர்.
வள்ளியூர்:
சமூகரெங்கபுரத்தில் உள்ள டி.டி.என். கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலைச் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துக்கொண்டு முகாமினை நடத்தினர். முன்னதாக ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமிற்கு கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி கலந்து கொண்டார்கள். முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ரத்ததான நன்மைகளை மாணவரிடம் எடுத்துக் கூறினார். ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி முகமது இபாம், இளைஞர் செஞ்சிலுவை சங்க அதிகாரி ராம்கி மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ரராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
பல்லடம்:
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, வழக்கறிஞர் சங்கம்,திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் கோவை லைன்ஸ் ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமை பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசியதாவது :-
அனைவரும் ரத்தம் கொடுத்தால் உடலுக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார். இந்த முகாமில் 37 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களை நீதிபதிகள் சந்தான கிருஷ்ணசாமி, சித்ரா, மற்றும் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
- தேவகோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.
- 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்தி பேசினர். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம் சேசுரான், மருத்துவர் அழகு தாஸ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசை ராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராமநாதபுரம்
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவீன் ஏற்பாட்டில் சாத்தான் குளத்தில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளாரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காத ர்பாட்சா முத்துராம லிங்கம் தலைமையில் தாங்கி னார்.
ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும், ரத்தத்தை தானம் செய்வதனால் அடையும் பயன்கள் குறித்தும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார். தொடர்ந்து ரத்ததானம் செய்தவ ர்களை பாராட்டி னார்.ராமநாதபுரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் பெற்று க்கொண்டனர்.
இந்த முகாமில் மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், இளைஞரணி யூசப், கிளை செயலாளர் புகாரி, பிரதிநிதி வினோத், ஊராட்சி மன்றத்தலைவர் குப்பைக்கனி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
- முகாமை புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
- இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பேராலய வின்சென்ட் தி பவுல் சபை மற்றும் வள்ளியூர் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் தலைமை தாங்கி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் ஜான் வின்சென்ட், செயலாளர் எட்வின் ஜோஸ், பொருளாளர் டாக்டர் ஜார்ஜ் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் தலைவர் ஜான் வின்சென்ட் வரவேற்றார். நெல்லை மருத்துவக் கல்லூரி ரத்ததான முகாம் குழு மருத்துவர்கள் ரவிசங்கரன், மணிமொழி, திருவேங்கடம், ஆய்வக நுட்புனர் ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் பெற்றுக் கொண்டனர்.
வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஜெகதீசன், வாசகன், ராஜவேலு, சசிகுமார், அன்னை தெரசா ரத்ததான இயக்க தலைவர் ரீகன் மற்றும் பிற ரத்ததான அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் டாக்டர் ஜார்ஜ் திலக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வள்ளியூர் லயன்ஸ் கிளப் குழுவினர் செய்திருந்தனர்.
- தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
- நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.
வள்ளியூர்:
தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய தர மதிப்பீட்டுக்குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் திலகேஷ்வர்மா, டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். தெற்குகள்ளிகுளம் தர்ம கர்த்தா டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நியூஸ் லெட்டர் இதழை வெளியிட்டார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணை ப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல் மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை பேரா சிரியர்கள் ராய்சிச் ரெனால்ட், பிருந்தாமலர், ராஜகுமாரி ஆகியோர் செய்து இருந்தனர்.