என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Border-Gavaskar Trophy"

    • பார்டர் கவாஸ்கர் டிராபி இந்த ஆண்டின் இறுதியில் தொடங்குகிறது.
    • இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இதற்கிடையே, இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், இது 5 போட்டிகள் கொண்ட தொடராக உள்ளது. கடந்த இரண்டு முறை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் ஒருபோதும் முனையப் போவதில்லை. எங்காவது டிரா இருக்கும். மோசமான வானிலை இருக்கும். எனவே, இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் என தெரிவித்தார்.

    • உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும்.
    • நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான் என்றார் நாதன் லயன்.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாகும்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் கூறியதாவது:

    10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது. எங்களுடைய சொந்த மண்ணில் விஷயங்களை திருப்புவதற்கு நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

    உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும். ஆனாலும் நாங்கள் விஷயங்களை திருப்பி கோப்பையை மீண்டும் வெல்வதற்கான பசியுடன் காத்திருக்கிறோம்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நாங்கள் வித்தியாசமான அணியாக இருப்பதாகவும் கருதுகிறேன்.

    நாங்கள் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியாக பயணித்து வந்துள்ளோம். தற்போது ஓரளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம்.

    இம்முறை இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அதிக பேச்சுகள் வருகின்றன. இதுவரை அவருடன் விளையாடவில்லை. நிச்சயம் அது எங்கள் அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியதை கவனமாக பார்த்தேன். நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான்.

    இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லியுடன் சில ஆலோசனை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் மற்றும் திட்டத்தை பின்பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது.

    எப்போதும் கிரிக்கெட்டை பற்றி ஆலோசிக்கவும், பேசவும் விரும்புவேன். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடும் வீரர்களுடன் ஆலோசிக்கும்போது அவர்களிடம் இருந்து எனக்கு தெரியாத சில விஷயங்கள் கிடைக்கும். கிரிக்கெட்டை பற்றி ஏராளமான தகவல் பலரிடமும் உள்ளது. அதனை கண்டறிந்து நாம் ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • இந்திய அணிக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று நீண்ட காலமாகிவிட்டது.
    • தற்போது அந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.

    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் ஜனவரி 8 வரை நடக்கவுள்ளது. ஒவ்வொரு 2 டெஸ்ட் போட்டிக்கும் இடையில் போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த அணியாலும் கம்பேக் கொடுக்க முடியும்.

    இதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த முறை விளையாடிய 2 முறையும் இந்திய அணி கோப்பையுடன் திரும்பியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பார்டர் கவாஸ்கர் கோப்பை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா அணி திண்டாடி வருகிறது. சொந்த மண்ணிலேயே தொடர்ச்சியக 2 முறை இந்திய அணியுடன் தோல்வியடைந்திருப்பதால், ஆஸ்திரேலியா அணி பழிதீர்க்க தீவிரமாக உள்ளது.

    இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று நீண்ட காலமாகிவிட்டது. தற்போது அந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். எதிர்வரும் டெஸ்ட் போட்டிகள் இரு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். இந்த தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்.

    இந்திய அணியும் எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள். அதேபோல் நாங்களும் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளோம். அதுதான் இம்முறை எங்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு கம்மின்ஸ் கூறியுள்ளார். 

    • பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
    • கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.

    அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்தியா தயாராகி வருகிறது. மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கேப்டன் ரோகித் சர்மா விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தம்முடைய சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளின் ஒன்றில் விடுப்பு கொடுக்குமாறு பிசிசிஐயிடம் ரோகித் சர்மா இப்போதே அனுமதி கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

    இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட விவகாரம் காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றை தவிர்க்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐயிடம் ரோகித் சர்மா தெரிவித்ததாக தெரிகிறது. ஒருவேளை தொடர் துவங்குவதற்கு முன்பாக அந்த சொந்த காரணம் தீர்க்கப்பட்டால் ரோகித் சர்மா 5 போட்டிகளிலும் விளையாடுவார். அது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.
    • காயத்தால் அவதிப்படும் கிரீன் 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட இயலாது.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ந்தேதி பெர்த்தில் தொடங்கு கிறது. ஜனவரி 7-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார்.

    முதுகுபகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட இயலாது.

    கேமரூன் கிரீன் விலகுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் 28 டெஸ்டில் விளையாடி 1377 ரன் எடுத்துள்ளார். 35 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 25 வயதான அவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக 174 ரன் குவித்து இருந்தார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. தற்போது 'ஹாட் ரிக்' தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 4 தொடரிலும் இந்தியா வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரபிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அபிமன்யு 127 ரன்கள் குவித்தார்.
    • தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.

    ரஞ்சி கோப்பை டிராபியில் உத்தர பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக சுதீப் சட்டர்ஜி சதம் விளாசினார். இதனையடுத்து உத்தரபிரதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ஆர்யன் ஜூயல் 92 ரன்கள் விளாசினார்.

    இந்நிலையில் 19 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 விக்கெட் மட்டும் இழந்து 254 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனால் உத்தரபிரதேசம் அணிக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 127 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அவர் அசத்தி உள்ளார். முதல் தர போட்டியில் இது அவருக்கு 27-வது சதம் ஆகும். இதனால் அவர் நிச்சயமாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பேக்-அப் இடத்திற்கு தகுதியானவராக இருப்பார் என அதிகாரிகள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் ரோகித் சர்மா முதல் 2 போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் விலக உள்ளதாக அந்த இடத்தை இவர் நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.

    • இந்த அணியில் 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் -கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற தயாராகி வருகிறது.

    அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதுபோக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பவுலிங் துறையில் கலில் அகமது, முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் சைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் தானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

    ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், டானுஷ் கோட்டியான்.

    • ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும்.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவை திரும்ப பெற தயாராக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 26 சதங்கள், 37 அரைசதங்களை விளாசியுள்ளார். இதில் மொத்தம் 8786 ரன்களை அடித்துள்ளார்.

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தான் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பினால் ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய டேவிட் வார்னர், "நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும். உண்மையைச் சொல்வதானால், பிப்ரவரியில் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து என் நண்பர்கள் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளனர்."

    "எனவே உண்மையாகச் சொன்னால், இந்த தொடருக்கு நான் உண்மையிலேயே தேவைப்பட்டால், அடுத்த ஷீல்ட் போட்டியில் விளையாடி, தொடரில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். சரியான காரணங்களுக்காக நான் ஓய்வு பெற்றேன். அவர்களுக்கு யாரேனும் தேவைப்பட்டால் என் கையை உயர்த்துகிறேன். நான் அதிலிருந்து விலகி செல்லப் போவதில்லை," என்று கூறினார்.

    • பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், துருவ் ஜுரல், அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்

    ஹர்ஷித் ரானா மற்றும் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

    ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

    புஜாரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • பார்டர் கவாஸ்கர் தொடரில் நிச்சயம் முகமது சமி இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்சித் ரானா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் டெஸ்ட்டில் அறிமுகமாகி உள்ளனர். இந்த தொடரில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம் பெறுவாரா என்பது சந்தேகத்தில் இருந்தது.

    காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது சமி, குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு பந்து வீசி வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனால் பார்டர் கவாஸ்கர் தொடரில் நிச்சயம் முகமது சமி இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம் பெறாறது குறித்து பிசிசிஐ மற்றும் ரசிகர்களிடம் முகமது சமி மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது முயற்சிகளை மேற்கொண்டு, எனது பந்துவீச்சு உடற்தகுதியை நாளுக்கு நாள் மேம்படுத்துகிறேன். போட்டிக்கு தயாராகவும், உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடவும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ மன்னிக்கவும். ஆனால் மிக விரைவில் நான் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.

    • தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது.
    • அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

    இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்சித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது. இந்தியா வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்தையும் நீங்கள் பார்த்தால், அதில் ஏதேனும் ஒரு அறிமுக வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

    இதனைத் தற்போது எல்லா அணிகளும் செய்து வருகின்றன. அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், ஹர்சித் ரானா ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரு நல்ல தேர்வு என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும்.

    இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2024 -25 பார்டர் -கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. அத்தொடரில் இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றிகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இம்முறை என்ன தான் இந்தியா போராடினாலும் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் சொல்வேன். அதே சமயம் வெற்றிக்காக இந்திய அணி சவால் கொடுக்கும் என்றும் நான் சொல்வேன். தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பதியப்பட்ட பிட்ச்கள் (ட்ராப் இன்) இருக்கின்றன. அது முந்தைய இயற்கையான பிட்ச்களை விட சவாலாக இருக்கும்.

    ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும். அங்கே 3, 5-வது போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கே வித்தியாசமான கலவையுடன் விளையாட நேரிடலாம். அப்படி மாறுபட்ட பிட்ச் சூழ்நிலைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் அதிக சாதகம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

    என ஹைடன் கூறினார். 

    ×