என் மலர்
நீங்கள் தேடியது "Breakfast Scheme"
- குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
- பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
உலகளவில் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். பல மில்லியன் ஃபாளோயர்களை கொண்டிருக்கும் மிஸ்டர் பீஸ்ட் தான் உருவாக்கும் வீடியோக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். யூடியூப் மட்டுமின்றி பல்வேறு செயல்களில் ஆர்வம் கொண்டவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற ஜிம்மி டொனால்டுசன்.
அந்த வரிசையில், யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது அறிவித்து இருக்கும் திட்டம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதன்படி ஆப்பிரிக்கா பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குவதாக மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கோகோ தோட்டங்களில் பணியாற்ற வைக்கப்படும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
கோகோ தோட்டங்களில் பணியாற்றும் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைத்தால் அவர்கள் பள்ளுக்கு செல்வர் என்று டொனால்டுசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் ஆப்பிரிக்க சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
- இந்தத் திட்டத்தில் கூடுதலாக 10 பள்ளிகளை சேர்த்து வழங்க ஒருங்கிணைந்த சமையற்கூடம் அமைத்து செயல்படுவதற்கு நிர்வாக அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசிய தாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் கூடுதலாக 10 பள்ளிகளை சேர்த்து வழங்க ஒருங்கிணைந்த சமையற் கூடம் அமைத்து செயல்படுவதற்கு நிர்வாக அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
எனவே முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாநகராட்சியின் 10 பள்ளிகளில் படிக்கும் 1,819 மாணவ மாணவிகளுக்கு உணவு தயார் செய்து வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுதியா னவர்களுக்கு ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு திறனை அதிகரிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும், நாட்டின் அன்றாட நிகழ்வுகளை அறிந்திடவும் சமூக உணர்வினை வளர்த்திடவும் அரசு தேர்வுகளுக்கு தயார் செய்திட ஏதுவாக தினசரி நாளிதழ்கள் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் மூலம் மழைநீர் முள்ளக்காடு ஓடையை அடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து புதிய திட்டங்க ளுக்கு ஒப்புதல் வழங்குவது, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழு தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ்ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சி லர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அலுவலர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன்,சேகர், ஹரி கணேஷ் ராஜபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
- வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாமக்கல்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்றிரவு நாமக்கல்லுக்கு வந்தார். அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் நளா ஓட்டலில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் அழகு நகரில் உள்ள நகராட்சி பள்ளிக்கு திடீரென சென்றார். தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்தார்.
அப்போது அருகில் இருந்த மாணவ-மாணவிகளிடம் போதுமான அளவு சாப்பாடு வழங்கப்படுகிறதா, அந்த உணவு சுவையாக உள்ளதா, ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் இந்த உணவை வழங்க வேண்டும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பான ரெக்கார்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துடன் கூடிய உணவு கிடைக்கும் வகையிலும், மாணவர்கள் கால தாமதமாக வருவதை தடுக்கும் வகையிலும், வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கலெக்டர் ஸ்ரேயாசிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- காலை உணவு திட்டம் மூலம் சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
- வரும் நாட்களில் இந்த திட்டத்தால் பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் குறிக்கோள் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது, பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகையை உயர்த்தி தக்க வைப்பதுதான் ஆகும். தற்போது இந்த காலை உணவு திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் காரணமாக மாணவர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருகையானது அதிகரித்துள்ளது மாநில திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட திட்டக்குழு பகுப்பாய்வின்படி தமிழகத்தில் 217 பள்ளிகளில் வருகை முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் இந்த திட்டத்தால் அனைத்து மாவட்டங்களிலுமே மாணவர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் அங்குள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முழு சதவீதமான 100 விழுக்காடை எட்டியுள்ளது இந்த திட்டத்திற்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் காலை உணவு திட்டம் வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் 98.5 சதவீதமும், கரூர் 97.4 சதவீதமும், நீலகிரி 96.8 சதவீதமாகவும் காணப்படுகிறது.
இதுதவிர இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள பள்ளிகளில் 1,086 பள்ளிகளில், மாணவர்கள் வருகை என்பது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 22 பள்ளிகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதுகுறித்து மாநில திட்டக்குழு அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது 1,543 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது என்பதை அறிய நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம்.
எங்கள் ஆய்வானது திட்டம் செயல்பாட்டில் உள்ள 1,543 பள்ளிகளில் உள்ள வருகை பதிவேடுகள் மற்றும் புவியியல் ஒருங்கிணைப்புகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை, தொடர்ந்து 75 சதவீதத்திற்கு மேல் வருகை தருபவர்கள் ஆய்வில் எடுத்து கொள்ளப்பட்டனர். இதில் 72 பள்ளிகளில் வருகை என்பது நேர்மறையான போக்கினை காட்டியது.
இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 1.14 லட்சம் மாணவர் பயன்பெற்றனர். 2-வது கட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மொத்தத்தில் இந்த திட்டம் மூலம் சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சாப்பாட்டுக்கு 12 ரூபாய் 71 காசு செலவாகும்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, இந்தத் திட்டமானது மேலும் பல மையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்த திட்டத்தால் பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது நாங்கள் முதல் கட்ட ஆய்வினை மட்டுமே செய்துள்ளோம். தொடர்ந்து அடுத்தடுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடந்த ஆண்டு தனியார் பங்களிப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது.
- நடமாடும் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டு தினசரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி யின் 2023 -2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்று மாநக ராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதா வது:- திருப்பூர் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முதன்மை பெற்ற மாவட்ட மாக திகழும் இந்நேரத்தில் கல்வி வளர்ச்சியில் அதிகஅக்கறை கொண்ட தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை கல்விக்கா கவும், மாணவர் நலனுக்கா கவும் செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி க்கு உட்பட்ட 11 மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 49 கூடுதல் வகுப்ப றைகள் மற்றும்25 கழிப்பறைகள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 75 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 25 கழிப்பறைகள் பொது மக்களின்பங்களிப்புடன் கட்டுவதற்கு 2023-24 ம் நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சிப் பள்ளி களில் புதிதாக 50 ஸ்மார்ட் வகுப்ப றைகள் உரு வாக்க ப்படும். மேலும் கடந்த ஆண்டு தனியார் பங்களி ப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது. 2023-24ம் ஆண்டில் 200 கணி ணிகள்வழங்கப்பட்டு மாணவர்களின் தொழில்நுட்பத்திறன் மேம்படுத்தப்படும்.
2023-24ம் நிதி யாண்டில் மூன்று மாநக ராட்சி பள்ளி களி ல்மா ணவர்களின் கல்வித்திறன் மேம்பட தனியார் பங்களி ப்புடன் கூடியநூலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆண்டுதோறும் படிப்படியாக விரிவு படு த்தப்படும். நடமாடும் நூலகம் ஒன்றுஉருவா க்கப்பட்டு தினச ரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும். தமிழக முதலமைச்சர் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறி வித்துள்ளார். அதனடிப்ப டையில்2023-24 ம் நிதி யாண்டில் 102 மாநக ராட்சிப் பள்ளிகளில் பயிலும்19824 மாணவர்க ளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கிட 1.10 கோடிரூபாய் மதிப்பீட்டில் நான்கு இடங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் கட்டிடம் கட்டுவதற்குஎதிர்வரும் கல்வியா ண்டில்மாந கராட்சி பள்ளிகளில் துவங்கப்படும். திருப்பூர்மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றல் கல்வியினை தவிர்க்க ஏழைபள்ளிக் குழந்தை களின் பசியினை போக்க வும், கல்விச்சாலைக்கு வந்துகல்வியறிவு பெற்றிடவும், சமூகத்தில் முன்னேறி டவும்சிற்று ண்டி" வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமை ச்சருக்கு நன்றித்தெரி விப்பதில் பெருமை யடைகிறேன். மாநகராட்சி பள்ளி களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்விபயிலும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களில்அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறும் மாணவ ர்களுக்குஅவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளிக்கா சுகள் பரிசாக வழங்கப்படும்.
திருப்பூர் மாநகராட்சியில் நாம் பொறுப்பேற்ற பிறகு நமக்கு நாமேதிட்டத்தில் தமிழ கத்தில் 7-ம் இடத்திலிருந்து தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறோம். மக்களின் சுய உதவி சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பரவலாக்கவும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தில்" திருப்பூர் மாநகராட்சி தமிழகத்தில் முதலாவது இடம் பெற்றுள்ளது. வளர்ச்சிபணிகளுக்கான திட்டமிடுதலில் தொடங்கி,வள ஆதாரங்க ளைதிரட்டுதல் பணிகளை மேற்கொள்ளுதல்மற்றும் மேற்பார்வைசெய்தல் போன்ற அனைத்து பணிகளிலும் மக்கள் பங்களி ப்பினை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2022-23 ம் ஆண்டில் 41 பணிகள் நடைபெற்றுள்ளது.திருப்பூரில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10.73 கோடி ரூபாய் பொது மக்களின் பங்களிப்புடனும்,மாநில அரசின் 21.47 கோடி ரூபாய் பங்களிப்புடனும், புதியதாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் நிர்வாக அனுமதி பெற நகராட்சி நிர்வாகஇயக்குநர் அவ ர்களுக்கு கருத்துரு அனுப்ப ப்பட்டுள்ளது. 2023-24 ம் நிதியாண்டில் புற்றுநோய் மருத்துவமனைக்கு பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கு வதற்கு பொதுமக்கள் பங்களிப்பு மூலம் 20.00 கோடி ரூபாயும், அரசின் பங்களிப்பு மூலம் 40.00 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 60.00 கோடி ரூபாய்மதிப்பீட்டில் நிறுவவும்,பொது மேம்பாட்டு பணிகளுக்காக 20.00கோடி ரூபாய் திட்ட மதிப்பீடும் ஆக மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் செயல்படுத்தப்பட்டு தொடர்ந்து 2023-24 ம் ஆண்டிலும் நம் மாநகராட்சி முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாநகரில் தெருவிளக்கு 17.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8681புதிய தெரு மின்விளக்குகளும், 4755சோடியம் ஆவி விளக்குகளை மின்சிக்கன விளக்குகளாக 2023-24ஆம் ஆண்டில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் உயர்கோபுர மின்விளக்குகள் 28இடங்களில் அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். ஏற்கனவேசெயல்பாட்டில் உள்ள சோடியம் ஆவி விளக்குகளை பராமரித்திடசிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக மூலம் பிரித்து வழங்கி திருப்பூர்மாநகரத்தை ஒளிர வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாநகராட்சியில் ஏ.எம்.ஆர்.யூ.டி. திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணி 1120.57 கோடி ரூபாய் மதிப்பீ ட்டில்மேற்கொ ள்ளப்பட்டு 94 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில் நான்காவது குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டு சோதனைஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டம்கடந்த மாதத்தில்திருப்பூர் வடக்குப் பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு சோதனை ஓட்டமாககொண்டு வரப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்திற்குள்தெற்குப் பகுதிக்கு விரிவுப்படு த்தப்பட்டு விரைவில் செயல்பாட்டி ற்குகொண்டு வரப்படும். SCADA (Supervisory Control and DataAcquisition) மேற்பார்வை கட்டுப்பாட்டு தரவு கையகப்படுத்துதல்திட்டம், முதலில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனைஅடிப்படையில் செயல்பட்டு வருகிறது.இத்திட்டம் மேலும்விரிவாக்கப்பட்டு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக ளுக்கும் inflow and outflow 100 சதவீதம்மேற்பார்வை செய்யப்பட்டு குடிநீர் சீராக விநியோகம் செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்களுக்கு நீர்த்தட்டுப்பாடு இல்லாமல் மாநகராட்சிப் பகுதிகளில்நீராதாரத்தை ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய்கிணறுகள் அமைத்துசெய்யப்ப ட்டுள்ளது.மேலும் தேவைப்படும்தண்ணீர் வசதிபகுதிகளுக்கு புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்.தமிழகத்திலேயே முதன் முறையாகதிருப்பூர் மாநகராட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில்குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை"குறுஞ்செய்தி" (SMS) மூலமாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தெரியப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மாநகரில் சுகாதார பிரிவில் ஏற்கனவே 17 ஆரம்ப சுகாதாரமையங்கள் உள்ளது. மேலும் ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் குளத்துப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.14 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் மகப்பேறுசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 34 நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்படும். நமக்கு நாமே திட்டத்தில் மருத்துவ சேமிப்புகிடங்கு 27.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டி.எஸ்.கே.மருத்துவமனை வளா கத்தில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்டுள்ளது.மாநகராட்சியில் புதிதாக மருந்து கிடங்கு மங்கலம் சாலையில்அமைக்க ப்படவுள்ளது.எஸ்.ஆர்.நகர் பகுதியில்தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 51 துணை சுகாதார நிலையம் 60 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் மூன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு வரும்கர்ப்பிணித் தாய்மா ர்களுக்கு முன் பேறுகால பரிசோதனை கள்செய்வதற்கு தேவைப்படும் அல்ட்ரா சவுண்ட் இஸ்கேனர் (UltraSound Scanner) கருவி புதியதாக அமைக்கப்படும்.
இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொன்னம்மாள்ராமசாமி மகப்பேறு மருத்துவ மையம் (PRMH) மற்றும் வீரபாண்டிஆரம்ப சுகாதார நிலையங்களில் 60.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டும். மேலும் மூன்று ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கூடுதல் கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி வேண்டிகருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். "நடமாடும் இரத்த பரிசோதனை கூடம்" அறிமுகப்படுத்தப்படும்.
திருப்பூர் மாநகரில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் வீடு இல்லாத ஏழைகள் தங்குவதற்கு வசதியாக இரவு நேர தங்கும் விடுதி மற்றும் புதிய கழிப்பிடங்கள் 1.41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.மாநகராட்சிக்கு சொந்தமான மனைப்பிரிவுகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு நீச்சல் குளமும்அண்ணா காலனியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்
ஆண்டிபாளையத்தில் உள்ள குளத்தை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து படகு சவாரி மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .இந்த நிதி ஆண்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தொழில் நகரமான திருப்பூரில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் 64.20 லட்சம் மதிப்பில் பொருத்தப்படும்.
வளர்ந்து வரும் நம் திறன் மிகு திருப்பூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நொய்யல் நதிக்கரையின்இருபுறமும் 6.70 கி.மீ. நீளத்திற்கு தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இருபுறமும் 5 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் பாலம் மற்றும் நடராஜ் தியேட்டர் பாலம் மற்றும் தந்தைபெரியார் நகர் பாலம், சங்கிலிப் பள்ளம் ஓடையின் குறுக்கே புதியபாலங்கள் அமைக்க 36.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் புதிதாக ஒரு இரயில்வே மேம்பாலம் அமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்படும்.பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் சேதமடைந்த சாலைகளைபோர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுமார் 150 கோடிக்கும் குறையாமல் அரசு நிதி பெறப்பட்டு இந்த நிதியாண்டில் சாலைகள் புனரமைக்கப்படும்.
"சீர்மிகு நகரம் சிறப்பான நகரம் - நம் திருப்பூர் மாநகரம் "எல்லா நாடுகளிலும் நகரங்களின் வளர்ச்சியே பொருளாதாரவளர்ச்சிக்கு வினையூக்கியாக உள்ளது. ஒரு செயல்முறை அல்லது தொடர் நடவடிக்கைகள் மூலமாக நகரங்களைத் தொடர்ந்து வாழ தகுந்த மாநகரமாக மாற்றி, புதியசவால்களுக்கும் உடனடித் தீர்வு காணும் திறன் பெற்றதாக 986.05 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் இச்சீர்மிகு நகரத்திட்டத்தில்மதிப்பீட்டில் உத்தேசிக்கப்பட்ட 28 பணிகளில் 21 பணிகள்முடிவடைந்துள்ளது.
மீதமுள்ளஅனைத்துபணிகளும் விரைவில்முடிக்கப்படும். முடிவடைந்துள்ள பணிகளில் 7.19 கோடி ரூபாய்அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நம் திருப்பூர் சீர்மிகு வாழிடமாக மாறியுள்ளது என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 2 மூன்றாம் நிலை நகராட்சிகள் 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர்பகுதிகள் மற்றும் 8 ஊராட்சி பகுதிகளில் உள்கட்டமை ப்புகளையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட சிறப்பு நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
- முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (ஆதிதிராவிடர் பள்ளிகள் உட்பட) 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டமானது நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 15.07.2023 அன்று ஊட்டி வட்டாரத்திலும் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்திற்கு என ஊராட்சி, பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும், குறைந்த பட்சம் கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு வரை படித்தவராகவும், சமையல் திறன் கொண்டவராகவும் உறுப்பினர் பெயரில் ஆன்ராயிடு மொபைல்போன் வைத்திருப்பவராகவும், அவரது குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்று நர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தினை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனை வரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) பாலகணேஷ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுர துல்லா(கூடலூர்), வருவாய் உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார்(ஊராட்சிகள்), இப்ராகிம் ஷா(பேரூ ராட்சிகள்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோல்டிசாராள்(சத்துணவு), மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த ஆண்டு ரூ.404 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 980 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் ஏற்பட்டுள்ள நற்பயனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கேற்ப இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ரூ.404 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 980 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசு பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியர் பயனடைய உள்ளனர்.
- சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள்.
- 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை சிற்றுண்டி விரிவாக்கம் திட்டத்தை சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலை சிற்றுண்டியை குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது. காலை உணவு நன்றாக இருக்கிறதா? என்று குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.
மாணவர்களும் பெற்றோர்களும் இத்திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த திட்டமும் சிறந்ததாகும். மாணவர்களோடு நானும் ஒரு பயனாளியாக அமர்ந்து சாப்பிட்டேன்.
இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி உணவு பாது காப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள்.
இதற்கான பிரத்யேக ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு கொண்டு சென்று வழங்கும் வரை கண்காணிக்கப்படுகிறது. எங்காவது குறை இருந்தாலும் சரி செய்யப்படும்.
உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இது மிகப்பெரிய சாதனையாகும். சென்னை வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படும். 19 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் பல சாதனைகளை செய்வார்.
சந்திரயான்-3 வெற்றி எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. 3 தமிழர்கள் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாந்தோப்பு பள்ளியிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் மடுமாநகரில் உள்ள பள்ளியிலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மண்டலத் தலைவர்கள் மதன் மோகன், சரிதா மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.
- ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.
திங்கட்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா;
செவ்வாய்க்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி,
புதன்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்.
வியாழக்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா.
வெள்ளிக்கிழமை- காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.
மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.
- மாணவ -மாணவிகள் அனைவருக்கும் சேமியாகிச்சடி மற்றும் காய்கறி சாம்பார் மற்றும் இனிப்பு உணவாக வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி சேர்மன் கமால்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கப்பட்டது.
அதனை முன்னிட்டு ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம், ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாணவ- மாணவிகளோடு சேர்ந்து உணவு அருந்தி ஒன்றிய சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார்.
மாணவ -மாணவிகள் அனைவருக்கும் சேமியாகிச்சடி மற்றும் காய்கறிசாம்பார் மற்றும் இனிப்பு உணவாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி சேர்மன் கமால்தீன் மற்றும் துணைத் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட திட்ட அலுவலர் லீமாரோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம்லீலா, நாகராஜன், ஆத்தூர் நகரசெயலாளர் முருகானந்தம், விவசாய அணி துணைச் செயலாளர்கள் மாணிக்கவாசகம், கோபி, மாவட்ட பிரதிநிதி கணேசன், வார்டு செயலாளர் கொடிவேல், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முத்து, கமலசெல்வி, கோமதி, அசோக்குமார், பாலசிங், வசந்தி மற்றும் நகரத் துணைச் செயலாளர் செல்வராஜ், ஜேம்ஸ், பிரபாகரன், ஆறுமுகநயினார், பேச்சிராஜா, முருகன், பெரியசாமி உட்பட ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தலைமை ஆசிரியர் லாரன்ஸ் வரவேற்றார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் செந்தூர் மணி நன்றி கூறினார்.
- மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
- மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 819 மாணவ,மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.
தூத்துக்குடி:
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.
கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இப்பள்ளியில் மொத்தம் 125 மாணவ- மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.
கலந்து கொண்டவர்கள்
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் கவுரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன், தாசில்தார் பிரபாகரன், தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, அய்யனடைப்பு ஊராட்சி தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- காலை உணவு குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
- இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
நெல்லை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
திட்டம் தொடக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது.
முதல்-அமைச்சர்
அதனைத் தொடர்ந்து ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார்.
சபாநாயகர் தொடங்கி வைத்தார்
இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாய கர் அப்பாவு பேசியதாவது:-
காலை உணவு குழந்தை களின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, இரவு உணவுக்குப் பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. மேலும், காலை உணவினை தவிர்க்கும் நிலையில் உள்ள குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும், கவனிப்புத் திறன் குறைந்தும் காணப்படுவர் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
காலை உணவு சாப்பிடா மல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த இயலாமல் சோர்வடைந்து விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
40 தொடக்கப் பள்ளிகள்
நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 22 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2,246 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் என 18 தொடக்கப்பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்க்க ப்பட்டு, இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்து இன்று மாவட்டத்தி ற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் செயல்ப டும் 286 தொடக்க ப்பள்ளிகளில் பயிலும் 13,388 மாணவர்களும், பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 43 அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 2,894 மாண வர்களும், நகர்புற பகுதி களில் செயல்படும் 19 பள்ளி களில் பயிலும் 1,162 மாண வர்கள் என மொத்தம் 348 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17,444 மாணவ, மாணவிகள் பயனடை வார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்
வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தால் மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் பெரிய உயர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவே இது போன்று அற்புதமான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.