என் மலர்
நீங்கள் தேடியது "buffalo"
- 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் அவற்றை விற்பனை செய்து விடுகின்றனர்.
களக்காடு:
களக்காட்டில் ஸ்ரீகிருஷ்ணா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (பால் பண்ணை) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 538 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி
கோவில்பத்து, படலை யார்குளம், கருவேலங்குளம், புதூர், ஊச்சிகுளம், கடம்போடுவாழ்வு, பத்மநேரி உள்ளிட்ட 32 இடங்களில் கறவை கூடங்கள் அமைத்து பால் உற்பத்தி செய்து, 18 பணியாளர்கள் மூலம் களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்து வருகின்றனர். தினசரி 6 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
பருவநிலை மாற்றம்
இந்நிலையில் சமீபகாலமாக பால் உற்பத்தி குறைந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மாடுகளுக்கு பெரியம்மை, தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதுபோல மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் உரிமையாளர்கள் விற்பனை செய்து விடுகின்றனர்.
இதன் காரணமாக பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது பால் உற்பத்தி 6 ஆயிரம் லிட்டரில் இருந்து 5 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பால் உற்பத்தியில் களக்காடு கிருஷ்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.
கடந்த ஆண்டில் இருந்து இரண்டாமிடத்திற்கு சென்றது. தொடர்ந்து உற்பத்தி குறைந்ததால் பொதுமக்களுக்கு போதியளவு பால் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
தட்டுப்பாடு
இதற்கிடையே களக்காட்டில் இருந்து தினசரி 2 ஆயிரம் லிட்டர் நெல்லை ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருவதாக தெரிகிறது. மொத்தமுள்ள 5 ஆயிரம் லிட்டரில் 1,200 ஆயிரம் லிட்டர் நெல்லைக்கு அனுப்பி விட்டு எஞ்சிய 3,800 லிட்டர் பால் மட்டுமே களக்காடு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் களக்காடு பகுதியில் பண்ணை பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் பண்ணை பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே களக்காடு பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பண்ணை பால் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார்.
- அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதைபார்த்த கண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் மாட்டை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து கண்ணன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, சேற்றில் சிக்கிக்கொண்ட எருமை மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
- சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.
அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.
மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
- பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவிநாசி,ஜூலை.26-
அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
லாரியில் சென்ற எருமை மாடு கட்டப்பட்ட கயிறு துண்டாகி விட்டது. இதன் காரணமாக எருமை மாடு தடுமாறு ஓடும் லாரியிலிருந்து கீேழ விழுந்தது. மிகவும் வேகமாக சென்ற லாரியிலிருந்து கீழே விழந்த சமயம் பின்னால் லாரியை தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் எருமை மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதையறிந்த சமூக ஆா்வலா்கள், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
இதையடுத்து பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் எருமை உயிரிழந்தது.
- திடீரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.
- லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனை கட்டி மலைப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், காட்டுபன்றிகள், உள்ளிட்ட பல்வேறு வனவி லங்குகளும், பல்வேறு பறவைகளும் உள்ளன.
இவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்குள் இருந்து வெளியேறி, மலைப்பாதையில் சுற்றி திரிவது வழக்கம்.
எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு ஆனைகட்டி மலைப்பாதையில் டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீ ரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.
பின்னர் அந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றன.
காட்டெருமைகள் சாலையை கடக்க முயற்சிப் பதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார்.
ஆனால் அதற்குள்ளாகவே லாரி காட்டெருமைகள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு காட்டெருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டெருமை காயத்துடன் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.
- எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவையை ஆளும் என்.ஆர் பி.ஜே.பி கூட்டணி அரசு ஆட்சி அமைத்த போது விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.
ஆட்சி அமைந்து 2 1/2 ஆண்டு காலம் கடந்த பிறகும் இதுவரை அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் மீண்டும் கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு போரா ட்டங்கள் நடத்தப்பட்டது.
கடனை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தும், விவசாய கூட்டுறவு கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் கடற்கரை சாலை சிங்காரவேலர் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி காமராஜர் வீதி வழியாக வந்து காமராஜர் நிர்வாக வளாகத்தை வந்தடைந்தது அங்கு எருமை மாட்டுக்கு அகில இந்திய விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.
- எருமை மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருவொற்றியூர் சோமசுந்தர் நகரைச் சேர்ந்தவர் மதுமதி (38). இவர் அதே பகுதியில் உள்ள தனது நாத்தனார் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த எருமை மாடு அவரை முட்டியுள்ளது. இதில் அவரது ஆடை மாட்டின் கொம்பில் சிக்கிக்கொண்டது. அந்த பெண்ணை எருமை மாடு அந்தரத்தில் தூக்கி சுற்றியது.
மேலும், மாடு மதுமதியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். படுகாயம் அடைந்த மதுமதிக்கு மருத்துவர்கள் 40 தையல் போட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது. மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் பெண்ணை முட்டிய எருமை பிடிக்க தீவிர காட்டி வந்தனர். அதை தொடர்ந்து எருமை மாட்டை பிடித்தனர். எருமை மாடு குறித்து இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.
எருமை மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையின் மாட்டின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "திருவொற்றியூர் பகுதியில் பெரும்பாலானோர் மாடு வளர்க்கின்றனர். அவர்களுக்கு மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பிலும், சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடயை மாட்டை பிடித்துவிட்டோம். அதை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் பராமரித்து வருகிறோம். அதன் உரிமையாளரை தேடி வருகிறோம். இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
- தூய்மையான வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் எருமை கன்றை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமாக திரண்டனர்.
- நாட்டு இன எருமை மாடு தற்போது தான் முதன் முறையாக குட்டியை ஈன்றுள்ளது.
எருமை மாடுகள் மிகவும் கருப்பாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் கரவுளி பகுதியில் எருமை மாடு ஒன்று பால் போன்ற வெள்ளை நிறத்தில், அழகாக ஒரு குட்டியை ஈன்றுள்ளது. பார்க்க பசு கன்று போல தோற்றமளிக்கும் இந்த கன்றுக்குட்டியின் உடலில் ஒரு சிறு அளவில் கூட கருப்பு நிறம் இல்லை.
தூய்மையான வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் இந்த எருமை கன்றை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமாக திரண்டனர். அவர்கள் இந்த கன்றுக்குட்டியை அதிசயமாக பார்த்து வருகின்றனர். இதுபற்றி எருமையின் உரிமையாளர் நீரஜ்ராஜ்புத் கூறுகையில், கடந்த 17-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு எருமை கன்றுக்குட்டி ஈன்றது. அப்போது வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக்குட்டியை பார்த்ததும் நாங்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தோம்.
கன்றுக்குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருக்கிறது. அதன் தாய் குட்டியை மிகவும் அரவணைத்து பார்த்து கொள்கிறது என்றார். இந்த நாட்டு இன எருமை மாடு தற்போது தான் முதன் முறையாக குட்டியை ஈன்றுள்ளது. மரபணு கோளாறு காரணமாக இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
- இருதரப்பினர் கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ளது, பொம்மனஹால் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, ஆந்திர மாநிலம் மெட்டஹால் கிராமம். இந்தநிலையில் பொம்மனஹால் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 5 வயது நிரம்பிய எருமையை கிராம தேவதைக்கு பலி கொடுக்க வளர்த்து வந்தார். அந்த எருமை கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. அதனை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
விவசாயி அந்த எருமை மாட்டை தேடி வந்தார். இந்த நிலையில் மெட்டஹால் கிராமத்தில் அந்த மாட்டை விவசாயி கண்டுபிடித்தார். அந்த எருமை மாட்டை அவர் அழைத்து வர முயன்றார். ஆனால் இதற்கு மெட்டஹால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இந்த எருமை மாடு எங்களுக்கு சொந்தமானது. நாங்கள் அந்த எருமை மாட்டை எங்கள் கிராம தெய்வமான சக்கம்மா தேவி கோவிலுக்கு பலி கொடுக்க வளர்த்து வருவதாகவும், இது அம்மனுக்கு சொந்தமானது என்றும், இதன் தாய் மாடு எங்களிடம் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த விவசாயி, அந்த மாடு எனக்கு சொந்தமானது. நான் வளர்த்து வந்த மாடு திருடப்பட்டுள்ளது. அது தான் இது. இந்த மாட்டை எங்கள் கிராம காவல் தெய்வத்துக்கு பலியிட நேர்த்திக்கடனாக விட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். இருப்பினும் மெட்டஹால் கிராம மக்கள் அந்த மாட்டை கொடுக்க மறுத்தனர்.
இதனால் அந்த விவசாயி, தனது கிராம மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு மெட்டஹால் சென்றுள்ளார். அந்த எருமை மாடு தனக்கு சொந்தமானது என வாதிட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. மேலும் கைகலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் ஆந்திரா மோகா போலீஸ் நிலைய கதவை தட்டியது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே மாட்டுக்கு இரு கிராமத்தினரும் சொந்தம் கொண்டாடி வருவதால் போலீசாரே இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இதற்கிடையே இரு கிராம மக்களும், அந்த எருமை மாடு யாருக்கு சொந்தமானது என்பதை கண்டறிய அதன் தாய் மூலம் மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொம்மனஹால், மெட்டஹால் கிராமங்களில் ஜனவரி இறுதியில் கிராம தேவதைக்கு திருவிழா நடக்க இருப்பதும், அதில் அந்த எருமை மாட்டை பலியிட முடிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- பல மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
- நர்சிங்கி சந்தை வரலாற்றில் சாதனை விற்பனையாக அரசு கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், நர்சிங்கியில் வேளாண் சங்கராந்தி கால்நடை திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் நர்சிங்கியை சேர்ந்த ரித்து முக்தார் என்பவர் துலியா வகை எருமையை கொண்டு வந்தார். அதனை நல்கொண்டாவை சேர்ந்த வெங்கட் ரெட்டி என்பவர் ரூ.4.50 லட்சத்திற்கு வாங்கினார். இந்த துலியா எருமை தினமும் 25 லிட்டர் பால் தரும் என தெரிவித்தனர்.
இது நர்சிங்கி சந்தை வரலாற்றில் சாதனை விற்பனையாக அரசு கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் 4 துலியா எருமைகள் தலா ரூ. 2 லட்சத்திற்கு விற்பனையானது. குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜாப்ரா வாதி எருமைகள் தலா ரூ.2 லட்சத்திற்கும், ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 10 குஜரன் வாலா எருமைகள் தலா ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.
- காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
- காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது.
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது.
இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ஒரு குட்டியும் வந்தது.
காட்டெருமைகள் மேய்ந்து கொண்டே சென்றன. அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தது.
இதனை அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பார்த்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனசரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், விரைந்து வந்தனர்.
கம்பி வேலியில் சிக்கி தவித்த காட்டெருமை குட்டியை மீட்டு அதற்கு தேவையான பால் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் குட்டியை தாயுடன் சேர்க்க முடிவு செய்து, தேயிலை ேதாட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.அப்போது சிறிது தொலைவில் காட்டெரு மைகள் கூட்டமாக நிற்பதை பார்த்தனர். இதையடுத்து அருகில் கொண்டு காட்டெருமையை குட்டியை விட்டனர். தாயிடம் காட்டெருமை குட்டி சேரும் வரை அங்கு நின்று கண்காணித்தனர்.குட்டி தாயிடம் சேர்ந்து உற்சாகத்துடன் சென்றதை பார்த்து விட்டு வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.