என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullet"

    • சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
    • மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உக்கடை உள்ளது. நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் டீ குடிக்க வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் காரில் மர்ம கும்பல் வந்தனர். அவர்களை கண்டதும் டீக்கடைக்குள் புகுந்து பின்பக்கம் வழியாக 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை மர்ம கும்பல் துரத்தியபோது ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் அவர் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார்.

    அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து டீக்கடை உரிமையாளர் பார்த்தபோது அங்கு 3 துப்பாக்கி குண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்தட வந்து 3 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தோட்ட நிரப்பும் ஹண்டில் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் போலியானது என்பது விசாரணையில் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய 2 வாலிபர்களும் யார்? அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிரவி சாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கரை ரவுடி கும்பல் வெடி குண்டை வீசி ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. ரவுடி கும்பல் துப்பாக்கியுடன் வலம் வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரவடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புல்லட்’.
    • இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

    'டைரி' பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புல்லட்'.இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிக்கிறார்.


    விறுவிறுப்பான ஆக்ஷன், த்ரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    புல்லட் போஸ்டர்

    இந்நிலையில், 'புல்லட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    நடிகர் சுனில், ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • பாதுகாப்பு அதிகாரிகள் பயணி விஜய கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.
    • சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக விஜய் கிருஷ்ணாவிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பினர். அப்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 35) என்ற பயணியின் கைப்பையை ஸ்கேனில் பரிசோதித்த போது, அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது.

    இதனால் பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணியின் கைப்பையை தனியே எடுத்து சென்று பரிசோதித்தனர். அந்த கைப்பைக்குள், துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அது 9 எம்.எம் ரகத்தை சேர்ந்த குண்டு ஆகும். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பயணி விஜய கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது விஜய கிருஷ்ணா, 'தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், காலையில் லண்டனிலிருந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, தற்போது டிரான்சிட் பயணியாக மதுரை செல்ல உள்நாட்டு விமான நிலையம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தான் அமெரிக்காவில் ரைபிள் கிளப் உறுப்பினர். எனவே எனது சொந்த உபயோகத்திற்காக துப்பாக்கி குண்டுகளை, அமெரிக்காவில் இருக்கும்போது, ஆன்லைனில் வாங்கினேன், அதில் ஒரு குண்டு தவறுதலாக இந்த பையில் இருந்திருக்கிறது. நான் அந்தப் பையை கவனிக்காமல் எடுத்து வந்து விட்டேன்'என்று தெரிவித்தார்.

    ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள் விஜய கிருஷ்ணாவின் பயணத்தை ரத்து செய்து, அவரையும், துப்பாக்கிக் குண்டையும், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

    சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக விஜய் கிருஷ்ணாவிடம் மேலும் விசாரணை நடத்தினர். அதன்பின்பு, துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்த போலீசார், பயணி விஜய கிருஷ்ணாவை, விசாரணைக்கு அழைக்கும் போது, மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நேற்று இரவு அனுப்பி வைத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசலால், வழிவிட இயலவில்லை என ஆட்டோ ஓட்டுநர் விளக்கம்.
    • தாக்குதல் நடத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு.

    டெல்லியில் வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநரை சாலையில் வைத்து இளம்பெண் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புல்லட்டில் சென்ற இளம்பெண்ணிற்கு ஓட்டுநர் வழிவிடவில்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் திடீரென ஓட்டுநரைத் தாக்க ஆரம்பித்தார். இளம்பெண் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

    வீடியோ வைரலானதை அடுத்து, தாக்குதல் நடத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    போக்குவரத்து நெரிசலால், வழிவிட இயலவில்லை என இந்த சம்பவத்திற்கு அடுத்து ஆட்டோ ஓட்டுநர் விளக்கம் அளித்தார்.

    • இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பைக்கின் பெட்டாலியன் பிளாக் எடிசன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

    பழைய புல்லட் பைக்கின் ரெட்ரோ லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக்கில் முன்பக்க பிரேக்கிற்கு 300 மிமீ டிஸ்க்கும் பின்பக்க பிரேக்கிற்கு 153மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

    • திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் அவர் நடித்து வரும் புல்லட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார்.

    இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • ஒரு தோட்டா ஓட்டுநர் சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.

    பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ஜீப் ஓட்டுநர் ஒருவர், தனது வயிற்றில் புல்லட் காயம் ஏற்பட்ட போதிலும், பல கிமீ வாகனத்தை இயக்கி பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது .

    ஜீப் ஓட்டுநர் சந்தோஷ் சிங், 14 பயணிகளுடன் "திலகம்" விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது ஒரு தோட்டா சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.

    அப்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மரமா நபர்களிடம் இருந்து தப்பிக்கவும் பல தாங்க முடியாத வழியிலும் பல கிமீ ஜீப்பை ஓட்டி சென்று பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.

    இதனையடுத்து இது தொடர்பாக பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோஷ் சிங்கை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிங்கின் வயிற்றில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ராகவா லாரன்ஸ் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

    இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது .இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். #DelhiMetroStation #PistonBullet
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் முக்கியமானது காசியாபாத் ரெயில் நிலையம் ஆகும். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அதன்பின்னர் அவரை பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  #DelhiMetroStation #PistonBullet

    ×