என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus"

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
    • பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஐபிஎல் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் கே.கே.ஆர்.- ஆர்.சி.பி. போட்டியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஐ.பி.எல் போட்டியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் டேக் செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார். 

    • அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சின்னக்கரையை கடந்து செல்லும்போது அவர் மயக்கமடைந்தார். சக பெண் பயணிகள் இது குறித்து கண்டக்டர் சக்திவேலிடம் தெரிவித்தனர்.

    அவர் ஆம்புலன்சை தொடர்பு கொண்டதில், தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். பஸ்சில் உள்ள பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கிளை மேலாளர் உத்தரவிட்டார்.

    அதன்படி பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர். பயணித்த சில பெண்கள் மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச்செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து துரிதகதியில் செயல்பட்ட டிரைவர் ராசு கண்ணன், அரசு பஸ்சை ஆம்புலன்சாக கருதி வேகமாக இயக்கினார். அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    • பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
    • ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரைக்குடி:

    திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.

    தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • வாலிபர்கள் கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
    • வாலிபர்க்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளிப்புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி(வயது 27) .இவர் நேற்று கோவை சென்று விட்டு பல்லடம் வருவதற்காக கோவை - சிவகாசி அரசு பஸ்ஸில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள், இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அருகே வரும்போது இவர்களுக்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அந்த இரண்டு வாலிபர்களும் கார்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட, பஸ்சிற்குள் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் ஓட்டுநர் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பஸ்சை நிறுத்தினார். காயம் பட்ட கார்த்தியை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ்(19) , சேது (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
    • மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 15 மாதத்தில், 6.85 கோடி பேர் இலவச பஸ்கள் மூலம் பயணித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் கிளை 1ல் இருந்து, 43, கிளை, 2ல் இருந்து 27, பல்லடத்தில்இருந்து 51, காங்கயம், 45, தாராபுரம், 31, உடுமலை, 57 என மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.

    கடந்தாண்டு ஜூலை முதல், நடப்பாண்டு செப்டம்பர் வரையிலான 15 மாதத்தில் இந்த பஸ்களில், 6கோடியே, 81 லட்சத்து 59 ஆயிரத்து 815 பெண்கள், 3லட்சத்து 69 ஆயிரத்து 502 மாற்றுத்திறனாளிகள், 25 ஆயிரத்து 877 மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள், 38 ஆயிரத்து 186 மூன்றாம் பாலினத்தவர் எனமொத்தம், 6 கோடியே 85 லட்சத்து 93 ஆயிரத்து 380 பேர் பயணம் செய்துள்ளனர் எனமாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரு மாணவி–களையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.
    • இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள் நேற்று மாலை திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் ஏறி வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் செல்ல பயணச்சீட்டு கேட்டுள்ளனர்.

    அப்போது கண்டக்டர் இளநகரில் பஸ் நிற்காது என கூறி அந்த இரு மாணவிகளையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து அந்த மாணவிகள் இளநகரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இனி இளநகரில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
    • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளதால் அரசு பேருந்தில் செ ல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் வரும் அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தோன்றியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கண்ட நபர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஒரு சில பேருந்துகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அந்த நேரத்தில் பள்ளிக்கு தாமதம் ஏற்படும் என ஒரே பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் பேருந்துகளில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாலான வழித்தடத்தில் மாணவர்கள் இதுபோன்று படியில் தொங்கி பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட பள்ளி நேரத்தில் அதிக அளவிலான அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன் பாதுகாப்பான பயணத்தி னை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
    • இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும், இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்திட வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்ல வேண்டும் , பஸ்சில் செல்லும் மாணவர்களிடம் நடத்துனர் தகாத வார்த்தையில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இன்று தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட துணை தலைவர்பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பா ட்டத்தில் கோரி க்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர்.
    • அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.

    மாநகர, நகராட்சியில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

    உள்ளூர் வாசிகள் தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல டவுன் பஸ்களில் பயணம் செய்யும்போது அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சுதாரித்துக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் இறங்கி விடுவார்கள். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு டவுன் பஸ்களில் பயணம் செய்தால், அவர்கள் இறங்க வேண்டிய இடம் எங்கு இருக்கிறது? என தெரியாமல் தடுமாறுவார்கள்.

    பக்கத்தில் அமர்ந்திருப்ப வர்களிடம், இந்த ஸ்டாப் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கண்டக்டரிடம் முன்கூட்டியே சொல்லி விடுகின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் மனதில் தோன்றுவது எப்போது நாம் இறங்கும் இடம் வரும்? அல்லது கடந்து விட்டோமா? என்ற பதட்டம் வேறு வரும்.

    கண்டக்டரை பார்த்து கேட்கனுமா? அவர் வேறு முன்னாடியே நின்னுக்கிட்டு இருக்காரு. இறங்க வேண்டிய நாம் முன்னால் அமர்ந்திருந்தால் கண்டக்டர் பின்னாடி இருப்பார். இந்த படபடப்பு தினந்தோறும் வெளியூரில் இருந்து நகரத்திற்கு வரும் பயணிகளின் மனதில் அன்றாடம் இருக்கத்தான் செய்கிறது.

    பஸ்சில் தூக்கம்

    மேலும் ஒரு சில டவுன் பஸ்களில் கண்டக்டர் பேருந்து நிற்கும் இடத்தின் பெயரை சொல்வார். ஆனால் அது அவருக்கே கேட்காது. காரணம் பஸ் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் தான்.

    ஒரு சிலர் பஸ்சில் ஏறியதும் தூங்கி விடுகிறார்கள். சிலர் பயணத்தின்போது கவனக்குறைவாக இருக்கி றார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க வேண்டி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் நலன் கருதி அடுத்து வரும் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படுகிறது. மின்சார ரெயில்கள், பயணிகள் ரெயில்களில் டிஸ்பிளேயில் காண்பிக்கப்ப டுகிறது.

    ஜி.பி.எஸ்.கருவி

    இந்த நடைமுறையை பின்பற்றி தமிழகத்தில் உள்ள நகர பஸ்களிலும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சேலம், நெல்லை, மதுரை கோட்ட நகர பஸ்களில் முதல் கட்டமாக 100 பஸ்களில் ஸ்பீக்கர் பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    தற்போது இது விரிவுப்ப டுத்தப்பட்டு, மேலும் பல டவுன் பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக டவுன் பஸ்களில் ஜி.பி.எஸ் கருவியுடன் கூடிய ஸ்பீக்கர் டிரைவரின் அருகிலும், நடுப்பகுதி, பின் படிக்கட்டின் எதிரில் என 3 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

    பஸ்சை இயக்கியவுடன் பஸ் புறப்படும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரை நிறுத்துமிடம் குறித்து ஒலி பெருக்கியில் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நிறுத்தம் நெருங்கும் முன்பாக பஸ் நிறுத்தம் குறித்து அறிவிக்கிறது. குறிப்பாக நாம் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு முன்பாகவே அடுத்து வருவது அண்ணா பூங்கா என்று, ஒவ்வொரு இடம் வருவதற்கு முன்பாக ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கிறது.

    15 பஸ்களில்...

    சேலம் மாநகரில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்சன், ஏற்காடு அடிவாரம் வரை இயங்கும் சுமார் 15 பஸ்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பஸ்களில் ஸ்பீக்கர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய வசதி பயணிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
    • கண்டக்டர் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

    விழுப்புரம் :

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பில் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் பெங்களூருவில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது. வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றார். ஆனால் அவர் இறங்காமல் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றார். அப்போது கண்டக்டர் பிரகாஷ் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் சாலையில் விழுந்தார். பின்னர் அந்த பஸ், வந்தவாசி போக்குவரத்து பணிமனைக்கு சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில், அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதுபற்றி அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரி விசாரணை மேற்கொண்டு, பஸ்சில் இருந்து பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டதாக கண்டக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது.
    • சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை.

     திருப்பூர் : 

    சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, பழனியில் இருந்து பம்பை, குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    தற்போது வரை ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை. மாறாக கேரள மாநில விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன.

    இது குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தங்கள் இருப்பிடத்தில் இருந்து சபரிமலைக்கு குழுவாக சென்று திரும்ப பக்தர்கள் விரும்பினால், பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. வழக்கமாக கி.மீ., க்கு பெறப்படும் கட்டணங்களே பெறப்படும். பஸ்களை முன்பதிவு செய்ய, 94450 14435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

    • திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.
    • இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர்.

    நாமக்கல்:

    ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பேப்பர் மில், காவேரி ஆர்.எஸ், ஆயக்காட்டூர் கார்னர், ஓட பள்ளி, கொக்கராயன் பேட்டை வழியே அரசு டவுன் பஸ் திருச்செங்கோடு வரை செல்கிறது. இந்த பஸ்சில் திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.

    பேப்பர் மில் காலனி ரோட்டில் செல்லாமல் ஓட பள்ளி ரோட்டில் பஸ் சென்றது. இதனை கவனித்த திருச்செங்கோடு செல்லும் பெண்கள் சிலர், பஸ் வேறு பாதையில் செல்வதால், பஸ்சை நிறுத்துமாறு சத்தமிட்டனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் கண்டக்டரை திட்டினார்.

    அப்போது அந்த பெண்கள், நாங்கள் திருச்செங்கோடு செல்ல வேண்டும், ஆனால் பஸ் நேராக செல்கிறது என்றனர். இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு பெண்களுக்காக இலவச பஸ்களை இயக்குகிறது. ஆனால் சில கண்டக்டர்கள் அவர்களை மதிக்காமல் நடுவழியில் கீழே இறக்கி விடுவது வேதனையாக இருப்பதாக பெண் பயணிகள் தெரிவித்தனர்.

    ×