என் மலர்
நீங்கள் தேடியது "caste census"
- காலதாமதத்தால் ஏராளமான மக்கள் நிலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- 1981ஆம் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லிகார்ஜூன கார்கே மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், "காலதாமதத்தால் ஏராளமான மக்கள் நிலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. போர், எமர்ஜென்சி மற்றும் மற்ற நெருக்கடியான நேரங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
1931 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பே, மகாத்மா காந்தி நமது உடல்நிலையை மதிப்பிடுவதற்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுவதுபோல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான பரிசோதனையாகும் எனக் கூறியிருந்தார்" என கார்கே தெரிவித்துள்ளார்.
- 5 மாநில தேர்தல்களை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
- 4 காங்கிரஸ் முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பினர் என்றார் ராகுல்
அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் வெல்ல இந்திய தேசிய காங்கிரஸை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்ட "இந்தியா கூட்டணி" தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் வரும் நவம்பர் இறுதிக்குள் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, இந்திய தேர்தல் ஆணையம், இத்தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 5 அன்று வெளியிடப்படும்.
இந்த 5 மாநில தேர்தல்களிலும், அடுத்த வருட அகில இந்திய தேர்தலிலும் வெற்றி காண அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
இப்பின்னணியில் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
காங்கிரஸ் காரிய கமிட்டி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முழு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளது. ஏழைகளை முன்னேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முன்னேற்ற பாதையாக அமையும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இக்கணக்கெடுப்பை நடத்தும் திறன் படைத்தவரல்ல. காங்கிரஸின் 4 முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள 10 முதலமைச்சர்களில் ஒருவர் மட்டுமே ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். பிரதமர் ஓபிசி மக்களின் நலன்களுக்காக உழைக்கவில்லை. அவர்களின் கவனத்தை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், அம்மாநிலத்தில் 36 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் 27 சதவீதம் என்றும் பொதுப்பட்டியலில் 15 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
- பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது.
- ஆந்திரா சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது.
அமராவதி:
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதேநேரம் பீகார் அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது.
இந்த வரிசையில் ஆந்திராவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது. அங்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும் என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தார்.
- காங்கிரஸுக்கு பணம் கிடைத்தது என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்து.
- பிரதமர் மோடியின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "டெம்போவில் கோடீஸ்வரர்களிடமிருந்து" பெற்ற நோட்டுகளை பாஜக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சமத்துவத்தை உறுதிசெய்ய காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்று கூறினார்.
அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து டெம்போக்களில் காங்கிரஸுக்கு பணம் கிடைத்தது என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் கோட்டீஸ்வரர்களிடம் இருந்து பெற்ற 'நோட்டுகளை' எண்ணுகிறார்கள். நாங்கள் 'சாதிக் கணக்கெடுப்பு' மூலம் நாட்டை எக்ஸ்ரே செய்வோம். ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமான பங்களிப்பை உறுதி செய்வோம்.
அதானியும் அம்பானியும் கறுப்புப் பணத்தை அனுப்பினார்களா என்பது குறித்து சிபிஐ அல்லது இடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்" என்றார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அரசை எதிர்க்கும் கட்சி விளம்பரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சமூக- பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமரிடம் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜாதிகள் மற்றும் துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
- பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதலமைச்சர் ரூ.6100 கோடி மூதலீடு ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3440 கோடி ஒப்பந்தம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று தெரிவிக்கவேண்டும்.
வன்னியகளுக்கான இட ஒதுக்கீட்டில் தி.மு.க.வின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். 35 ஆண்டுகால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். தகவல்களின் கால அவகாசம் ஒரே மாதிரி இல்லை. இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த தி.மு.க. தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்சநீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கவேண்டும்.
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கான தமிழைத்தேடி என்று சென்னை முதல் மதுரை வரை பயணம் செய்தேன். அப்போதே அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் பலகை தமிழில் உள்ளதை அரசு உறுதி செய்யவேண்டும்.
சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாரின் சோதனையில் 10 ஆயிரம் கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சொல்லப்பட்டும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது. காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.
மீனவர்கள் 22 பேரில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை 3 பேருக்கு தலா ரூ 40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை அரசின் இந்த தண்டனை கண்டிக்கத்தக்கதாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் காலங்காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
கந்து வட்டி கொடுமையால் திருப்பத்தூரில் தாய் , மகள் இருவர் தற்கொலை செய்து கொண்டார். இவரின் கணவர் ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும்.
தமிழகத்தின் உண்மையான மேம்பாடும், அமைதியையும்பெற அனைத்து சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். இதுவே வலிமையான, வளமாக, அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும்.
இட ஒதுக்கீடு ஆணையத்திற்கு காலக்கெடு நிர்ணயித்து இருப்பது பம்மாத்து வேலையாகும். வக்பு வாரிய சட்டம் திருத்தம் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
- பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வேணுகோபால், பூபேஷ் பாகெல், அஜய் குமார், அஜய் மக்தான், சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்துகிறது. சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மற்றும் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் ஆதரவு.
- மக்களை தொகை கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக் கொள் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.
ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள.
இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை.
- அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கானது.
- அது ஏழை மக்கள், தொழிலாளர்களால் பாதுகாக்கப்படுகிறது என்றார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்.
இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர்.
அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.
90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை.
இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி.
அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது.
அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தார்.
- நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
- 85 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் நவம்பர் 30-ந்தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பல்வேறு சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள், அறிவார்ந்த நபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அவர்களுடைய கருத்துகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1993-ம் சட்டத்தின்படி இதற்கு முன் கல்வி, வேலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து சாதியினரின் சமூகப் பொருளாதார விவரங்களை சேகரிக்கும்.
இந்த பணியில் 48 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட இரக்கிறார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் தொடக்க பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும். ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று தரவுகளை பெறுவார்கள். சமூகம், கல்வி, வேலை, பொருளாதாம், அரசியல் போன்ற தரவுகளை சேகரிப்பாளர்கள். மொத்தமாக 85 ஆயிரம் பணியில் ஈடுபடுத்தபட இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சாதிவாரி கணக்கெடுப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நீதியை உறுதி செய்வதாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
- எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொதெல்லாம் நாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- மைனாரிட்டிகளை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும். எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பொதெல்லாம் நாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மைனாரிட்டிகளை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வருமானம் எவ்வளவு என்பது மத்திய அரசு வெளியிட வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக நமுது எல்லை சுருங்கிக் கொண்டு வருகிறது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
- தெலுங்கானாவில் பட்டியல் சமூகத்தினர் 17.43% பேரும் பழங்குடியினர் 10.45% பேரும் உள்ளனர்.
- தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையில் முற்பட்ட வகுப்பினர் (OC) 13.31% பேர் உள்ளனர்.
பீகார் மற்றும் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திற்குப் பிறகு தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தெலங்கானாவில்கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு 50 நாட்கள் நடைபெற்றது.
தெலுங்கானாவில் 3,54,77,554 பேர் மற்றும் 1,12,15,134 குடும்பங்களிடம் வீடு வீடாகச் சென்று சமூக-பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் புள்ளிவிவரங்கள் மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
தெலங்கானா மக்கள் தொகையில் மொத்தம் 56.33% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர்களில் முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08% பேரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 46.25% பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர் 17.43% பேரும் பழங்குடியினர் 10.45% பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையில் முற்பட்ட வகுப்பினர் (OC) 13.31% பெரும் முஸ்லிம்களில் முற்பட்ட வகுப்பினர் 2.48% பெரும் உள்ளது.
அம்மாநிலத்தில் மொத்தமாக 50.51% ஆண்கள் மற்றும் 49.45% பெண்கள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
- எங்களுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.
- எங்களுடைய அரசு நிச்சயமாக அமல்படுத்தும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
கர்நாடக மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதில் கர்நாடக மாநில அரசு உறுதிப்பூண்டுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகைapy "என்னுடைய அரசின் நோக்கத்தை மக்கள் சந்தேகிக்க வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு அறிவியல் ரீதியாக நடத்தப்பட்டுள்ளது. எங்களுடைய அரசு நிச்சயமாக அமல்படுத்தும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
எங்களுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் அமல்படுத்தப்படும்" என்றார்.
2015-ம் ஆண்டு முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஹெச். கந்தராஜு தலைமையில் அமைக்கப்ப்டது. சுமார் 169 கோடி ரூபாய் செலவில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.
2020-ல் பாஜக அரசு ஜெயபிரகாஷ் ஹெக்டேவை தலைவரான நியமித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி ஹெக்டே இறுதி அறிக்கையை சித்தராமையா அரசிடம் தாக்கல் செய்தார்.