search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cement Road Works"

    • பாபநாசம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பள்ளியில் பயிலும், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல் நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகள் குறித்தும், தொடக்க பள்ளியில் பயிலும், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், சக்கரப்பள்ளி ஊராட்சியில், வாலன் சுலைமான் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும், ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணிகள் குறித்தும், அய்யம்பேட்டை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அங்காடியில் வழங்கப்படும் உணவு பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும், கடன் உதவி குறித்தும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பத்தப்பட்ட அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டாச்சியர் பூங்கோடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நாசர், சக்கராப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா நஸ்ரின், ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ரெஜியா சுல்தானா, பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் முருகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சவேரியானா மைதானம் பின்புறம் உள்ள வடிகால் தூர்ந்து போய் கிடந்தது.
    • போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சவேரியானா மைதானம் பின்புறம் உள்ள வடிகால் தூர்ந்து போய் கிடந்தது.

    பல ஆண்டுகளாக வடிகாலின் வழியாக நீர் செல்வதற்கு மணல் திட்டுகளும், அமலைச் செடிகளும் தடையாக இருந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது அங்கே புதிய வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும் இடத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதேபோல் கருத்த பாலம் முதல் வட பத்திரகாளியம்மன் கோவில் வரை நடைபெற்று வரும் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும் மற்றும் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார். இதே போல மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால்,குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பணிகள் நிறைவடைந்த பண்டு கரை சாலையினை பார்வையிட்டார். அங்கு போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.

    மேலும் அந்த சாலையில் தேவையான இடங்களில் அகலப்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ்,பிரபாகரன்,ஜாஸ்பர், மாநகர கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள். உடன் இருந்தனர்.


    ×