என் மலர்
நீங்கள் தேடியது "Chain flush"
- பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து துணிகரம்
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார்.
அந்த பங்க் கடைக்கு பைக்கில் 2 பேர் வந்தனர். அப்போது மகேஸ்வரியிடம் பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை திடீரென பறித்தனர்.
அவர் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மின்னல் வேகத்தில் பைக்கில் 2 மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மகேஸ்வரி அவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
- பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் சென்னையில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலைபார்க்கிறார்.இவரது மனைவி பிரவினா (வயது 25).
இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரவினா மற்றும் அவ ரது அத்தை பூத்தானம் அம் மாளுடன் காஞ்சீபுரம்- வந்த வாசி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந் தார்.
அப்போது எதிரில் மோட் டார் சைக்கிளில் வந்த 2 மர் மநபர்கள் பிரவினா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரவினா தூசி போலீசில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
- பைக்கில் வந்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புது ஓட்டல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். அரசு போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 40).இவர் மொபட்டில் நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
பக்கிரிதக்க அடுத்த ஏலகிரி ஏரிக்கோடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அடையாளம் தெரியாத 2 பேர் மோட்டார் பைக்கில் வந்தனர். அவர்கள் திடீரென செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதில் செல்வி நிலை தடுமாறு கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். செயினை பறித்த மர்மகும்பல் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து செல்வி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ேபாது சம்பவம்
கரூர்
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பாலவிடுதி காவல்சரகம் ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது80). இவர் தனது கழுத்தில் 2 தங்க சங்கிலிகளை அணிந்து கொண்டு தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அழகம்மாள் அணிந்து இருந்த 2 பவுன் தங்க தங்கிலியை அறுக்க முயன்று உள்ளார். இதனால் சுதாரித்தக் கொண்ட அழகம்மாள் ஒரு கையால் தனது தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அழகம்மாள் அணிந்து இருந்த மற்றொரு ஒன்னரை பவுன் தங்க சங்கி லியை மர்ம நபர் அறுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து அழகம்மாளின் உறவினர் தண்டபாணி பால விடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அழகம்மாளின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- கோவிலுக்கு சென்று திரும்பியபோது கைவரிசை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்தவர் விமலா (வயது 58). இவரது உறவினர் குமாரி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை திருத்தணி முருகன் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அரக்கோணம் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் இரவு 8.30 மணியளவில் வந்த போது இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விமலா அணிந்திருந்த 3½ பவுன் தாலி செயினை திடீரென பறித்தனர். அப்போது அதிர்ச்சி அடைந்த விமலா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் விமலா புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- குளித்தலை நர்சிடம் மர்ம நபர் செயினை பறித்தார்
- இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
குளித்தலையை அடுத்த, வதியம் பஞ்சாயத்து நடுவதியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மாலினி (வயது 22). இவர், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் மாலினியிடம் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.இதுகுறித்து, மாலினி கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பவுன் நகை, பைக் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம் இவரது மனைவி சரஸ்வதி (வயது 61). இவர், நேற்று முன்தி னம் விருபாட்சிபுரத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக பஸ்சில் சென்றார்.
பஸ்சிலிருந்து இறங்கிய போது அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் மாயமாகி இருந்தது. பஸ்சில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பஸ்சில் பயணித்தபோது மர்ம நபர்கள் அவரது செயினை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல், வேலூர் துத்திப்பட்டு எடப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் கண் ணன். இவரது மனைவி ஜீவா (65). இவர், நேற்று முன்தினம் வேலப்பாடியில் இருந்து துத்திப்பட்டு செல்வதற் காக அரசு பஸ்சில் பயணித்தார். பஸ்சிலிருந்து இறங்கியபோது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசில் ஜீவா புகார் செய்தார்.
இதுதொடர்பாக பாகாயம் போலீசார் தனித்தனியே வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாகாயம் போலீசார், விருபாட்சிபுரம் பகுதி யில் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் காட்பாடி வண்டறந்தாங்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதம் (24) என்பதும், பஸ்சில் மூதாட்டிகளிடம் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கவுதமை போலீசார் கைது செய்து, அவரிட மிருந்து 4 பவுன் நகை, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்தும், மற்றொரு பெண்ணை வழிமறித்தும் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது
- இச்சம்பவங்கள் குறித்து நவல்பட்டு, திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சியை அடுத்த குண்டூர் ஆஞ்சநேய நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (வயது 80). இந்த மூதாட்டி ஆஞ்சநேய நகர் எம்.ஐ.இ.டி. பஸ் நிறுத்தம் பகுதி–யில் நடந்து சென்று கொண்டி–ருந்தார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டி மோட்டார் சைக்கி–ளில் வந்த ஒரு மர்ம நபர் மூதாட்டி அருகில் மோட்டார் சைக்கிளை கொண்டு போய் நிறுத்தி உள்ளார். மிகவும் பழக்கமானவர் போல் பேசி உதவி செய்வதாகவும் தெரி–வித்தார். பின்னர் அவரிடம் பேச்சு கொடுத்தவாறு வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறேன்,
மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் என கூறியுள்ளார். மூதாட்டியும் அவரை நம்பி மோட்டார் சைக்கிளில் ஏறி உள்ளார். ஆனால் அந்த நபர் மூதாட்டி வீட்டுக்கு செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றார். பின்னர் அங்கு வைத்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக நவல்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை தேடி வரு–கின்றனர்.
திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் காந்தி ரோடு 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. இவரது மனைவி இந்திரா (58). இவர் அங்குள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது ஸ்கூட்டி மாடல் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரை வழிமறித்து இந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றார்.
மேற்கண்ட ஆரோக்கியம் மாள் செயினை பறித்த அதே நபர்தான் இந்திரா–விடமும் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தே–கிக்கப்படுகிறது. இது–குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் மேற்கண்ட பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பைக்கில் தப்பிய கொள்ளையன்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது 75). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆண்டாள் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் வசிக்கும் மகன் வீட்டிற்கு நடந்து சென்றார். திரவுபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆண்டாள் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட் டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
இதுகுறித்து ஆண்டாள் பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
- போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடுமலை:
உடுமலை யசோதா ராமலிங்கம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 80). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். ராஜம்மாள் கடந்த 12-ந்தேதி காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ராஜம்மாள் உடுமலை போலீசில் புகார் செய்தார்.
கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. பதிவுகளை வைத்து தலைமறைவான மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி., பதிவுகளும் அவர்களுடன் ஒத்துப்போனது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சரவணன்(31), கண்ணன்(20) என்பதும் ராஜம்மாளிடம் தங்கச் செயினை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பீரோவை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுவேதா (வயது 22).
இவர் தனது மாமனார், மாமியாருடன் பறையம்பட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுவேதா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு நகைகள் ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தனர்.
ஆனால் நகைகள் ஏதும் பீரோவில் இல்லை. இதனையடுத்து பக்கத்து அறையில் படுத்திருந்த சுவேதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சுவேதா கூச்சலிட்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பீரோவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- பைக் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் எஸ் ஆர் கே பகுதி மற்றும் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மங்கம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 22) என்பதும், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிபில்ஸ்பேட்டை பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
பின்னர் கோடீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் போலீசார் செய்தனர்.