என் மலர்
நீங்கள் தேடியது "Chennai"
- நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தானே:
சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள இரானி பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
சென்னையில் கொள்ளையன் ஜாபர் கொல்லப்பட்டதையடுத்து இரானி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இரானி கும்பலை சேர்ந்தவர்கள் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க இரானி பகுதிக்கு போலீசார் செல்லும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- காலை 6 மணி முதல் 7 மணி வரை நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
- நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்தது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரானபோது அவர்கள் 2 பேரையும் சுற்று வளைத்த போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
காலையில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒரே நேரத்தில 7 இடங்களில் நடைபெற்றுள்ள நகை பறிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
- மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.
2024-ம் ஆண்டில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களில் 4-ல் ஒரு பங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் ஆவார்கள் என்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
நாய்க்கடி பாதிப்புக்கு மருந்து இருக்கிறது என்றாலும், வெறிநாய்க் கடியால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் பிழைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதாவது, நாய்க்கடியால் பாதிக்கப்படும் ஒருவர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் இருந்து மீண்டு விடுகிறார்.
ஆனால் அதுவே நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் கிருமிகள் (வெறிநோய்) நேரடியாக மூளையை தாக்கும்போதுதான் அந்த நபர் மரணத்தை தழுவும் சூழல் ஏற்படுகிறது. இதனை வெறிநாய்க்கடி பாதிப்பு என்றும் சொல்கிறார்கள்.
இப்படியாக உலகளவில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடி பாதிப்பால் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாய்க்கடி பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி, இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.
நாய்க்கடி பாதிப்பில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 2024-ம் ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 54 ஆக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் 50 ஆகவும், 2022-ம் ஆண்டில் 21 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை பணி நாளாக செயல்படும்.
- வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் ((அரசு/ அரசு உதவிபெறும் / ஆதி திராவிட /சென்னை/ தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ) நாளை (மார்ச் 22) அன்று பணி நாளாக செயல்படவும் மற்றும் வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது.
- கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் மொத்தம் 19 ரெயில்வே மண்டலங்கள் உள்ளது. இங்கிருந்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் அம்ரித் பாரத், வந்தே பாரத் ஆகிய ரெயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக ரெயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் ரெயிலை உற்பத்தி செய்ய மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஹைட்ரஜன் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஹைட்ரஜன் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெயிண்ட் அடிப்பது, ஹைட்ரஜன் சிலிண்டர்கள் இணைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைய உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலானது அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில்தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ரெயிலில் 1,200 எச்.பி. திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ரெயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரஜன் ரெயில் என்ஜினின் முழுத் தோற்றத்தை படத்தில் காணலாம்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரெயில் உலகில் அதிக திறன் கொண்ட ரெயிலாகும். மற்ற நாடுகளில் அதிகபட்சம் 5 பெட்டிகள் வரை இருக்கும். ஆனால், முதன்முறையாக இந்தியாவில் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. இது உலக நாடுகளுக்கே ஒரு முன்னுதாரணம். ஒவ்வொரு ரெயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில்தான் முதல் ரெயில் வடக்கு ரெயில்வேயில் இயக்கப்பட உள்ளது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ரெயில்வேயில் கார்பன் உமிழ்வுவை பூஜ்ஜியமாக மாற்றும் முயற்சியில் இந்த ஹைட்ரஜன் ரெயில் முன்னோடியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.
- கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட பொருட்களை அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தவும் கண்காட்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2023-24-ம் ஆண்டு மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.
இந்த மேளாவில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த கைவினை பொருட்கள், எம்பிராய்டரி துணி வகைகள், ரெடிமேடு ஆடைகள், பரிசு பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பூவகைகள், தரமான ஊதுபத்தி, தேன், மூலிகை பொருட்கள், அலங்கார சங்கு பொருட்கள், கைப்பைகள், உணவு பொருட்கள், சணல் பொருட்கள் மற்றும் பல பொருட்களை இந்த கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்–படும்.
மண்டல அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் அறை எண்.305-ல் வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளரை 97901 64775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- சென்னை வானிலை மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது.
- சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து நகரில் வெப்பம் தணிந்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை செண்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல், முகப்பேர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
- பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்படும்.
- சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.
சுவாமிமலை:
சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கல்யாணசுந்தரம் எம்.பி., அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்று மேற்கண்ட பஸ்சை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடந்தது. இதில் சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ராமலிங்கம் எம்.பி., தமிழக அரசின் தலைமை கொறடா செழியன், சண்முகம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜவாஹிருல்லா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், பொது மேலாளர் ஜெயராஜ் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்யாணசுந்தரம் எம்.பி. பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் அய்யாராசு, அரசு வக்கீல் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் நன்றி கூறினார்.
இந்த பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னையை சென்றடையும். இதேபோல், சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.
- நாகூர் தர்காவில் கந்தூரி விழா வருகிற 19-ந் முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
- நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும், காரைக்காலுக்கு மாலை 3.50 மணிக்கும் சென்றடைகிறது.
திருவாரூர்:
நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து வரும் சிக்கல் சிங்காரவேலர் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகிய மூன்றும் மும்மாதத்திற்கான ஆன்மீக தளம் மட்டுமன்றி சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது.
இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடாகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இந்த சிங்காரவேலர் கோயில் வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகியவகைகளில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின் போது வழக்கத்திற்கு மாறாக கூடுதலான அளவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும்.
இது போன்று நடைபெறும் திருவிழாக்களின் போது சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இதனையொட்டி நாகூர் தர்கா(சின்ன ஆண்டகை) கந்தூரி விழாவானது வரும் 19-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவானது 21-ம் ேததி இரவு நடைபெறுவதையொட்டி அந்த விழாவில் சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளும் வகையில் 21-ம் தேதி காலை 8.15 மணி அளவில் சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயிலானது புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும் மற்றும் காரைக்காலுக்கு மாலை 3.50 மணி அளவிலும் சென்றடைகிறது.
இதே ரயிலானது மீண்டும் 22-ம் ேததி காலை 6.00 மணியளவில் காரைக்காலில் இருந்து புறப்படும் மதியம் 1.30 மணி அளவில் தாம்பரத்தை சென்றடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.
- காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக இருந்தது
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்க கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது.
இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது.
பின்னர் 1640-ல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுதல் என்பது கற்பக விருட்சத்திற்கு வேண்டுவது மாதிரி என்கிறார் காளிதாஸ் சிவாச்சாரியார். ''ஒரு முறை வந்து அம்பாளை வழிபட்டாலே வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணரமுடியும்.
கேட்ட வரம் கிடைப்பதால்தான் கடவுள் இல்லை என்று வெளியே சொல்கிறவர்களும் அம்பாளை வழிபடுகிறார்கள்.
அம்பாளை வேண்டுவதன் மூலம் திருமணத்தடை நீங்குகிறது. அதனால் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளை வணங்கிவிட்டு அவள் பாதத்தில் வைத்து எடுத்த மஞ்சளை தினமும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீரில் கலந்து உட்கொண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அப்படி புத்திர பாக்கியம் பெற்றவர்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்'' என்கிறார்.
இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர். இப்பெயர் வந்த வரலாறு ஒரு புராணச் செய்தியை உள்ளடக்கியது.
கைலையில் உமா, மகேஸ்வரன் இருவரில் அழகில் சிறந்தவர் யார் என்று சிவ பெருமான் தெரிந்துகொள்ள விரும்பினார்.
இக்கேள்விக்கு எந்த விடையை அளித்தாலும் அது இருவரில் ஒருவரை வருத்தப்படுத்தும் என்பதால் கேள்விக்கு விடையளிக்க ஒருவரும் முன்வரவில்லை.
அதற்கு அவர் தான் ஏற்படுத்தியுள்ள ஒரு தாமரைத் தடாகத்திற்கு சென்று அதன் எழிலைக் கண்டு வருமாறு பின்னர் விடையளிப்பதாகவும் கூறினார். பெருமானும் இறைவியுடன் சென்று பார்த்தபோது அந்த சூழல் தவம் மேற்கொள்ளத் தகுந்த இடமாக தோன்றவே சிவபெருமான் அங்கமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
இறைவி எழில் மிக்க அந்த சூழலால் கவரப்பட்டு அங்குள்ள மலர்களாலும் மற்றும் பட்டுத் துகிலாலும் தன்னை மேலும் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டாள்.
இருவரும் புறப்பட்டு வரும் வழியில் பரப்ரம்மத்தால் சிருஷ்டிக்கப்பட்ட பெரியதொரு நிலைக்கண்ணாடியில் அவர்கள் தங்கள் உருவத்தை பார்க்க நேரிட்டது.
அதில் பாம்பணி, சுடலைப்பொடி, வெள்ளெருக்கு மாலை, புலித்தோல் என்றிந்த விதமான தன் தோற்றத்தைக் கண்டவுடன் பரப்ரும்மம் எவ்வளவு அழகாகத் தம்மை தர்மசங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்பது புரிந்தது.
பரப்ரம்மம் நிலையில்லாத அழகின்மேல் ஆசை கொண்ட மனம் அருவுருவமாக `லிங்க' வடிவில் அமைவதாக என்று கூறினார்.
கமம் என்றால் நிறைவு (தொல்காப்பியம் கூறும் பொருள்) ஆன்மாக்களுடன் அருவருவாய் லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்ற பொருளில் கமடேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் கோவில்களுள் ஒன்றாக தற்போது விளங்கி வருகிறது, திருவந்தபுரம் பத்ம சுவாமி கோவில். அதற்குக் காரணம் கோவிலில் இருக்கும் தங்கப் புதையலே ஆகும்.
இருப்பினும் பத்மநாப சுவாமியின் அளப்பெரிய சக்திக்கு அரசர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கை தான்இந்தப் பொன்னும் பொருளும் என்றால் அது மிகையாகாது. இந்த ஆலயத்தின் கருவறையில் முதலில் மூல விக்கிரகம் தான் இருந்து வந்தது. அது மரத்திலிருந்து தோன்றிய விக்கிரகம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த விக்கிரகத்திற்கு தான் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
நிர்வாகப் பிரச்சினை காரணமாக 1673 -ம் ஆண்டு முதல் 1677 -ம் ஆண்டு வரை கோவிலில் பூஜை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினை நடைபெறுவதற்கு முந்தைய நாளில் பூட்டிய அறையில் இருந்து ஒரு பெரிய நாகப் பாம்பு வெளிப்பட்டதாகவும் அதுவே வரப்போகும் சம்பவத்திற்கு எச்சரிக்கையாக அமைந்ததாகவும் தெரிய வருகிறது.
அதன் பின்னர் 1678 -ம் ஆண்டு கோவில் நடை திறக்கப்பட்டு மீண்டும் பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றன. இதற்கு இடையே 1680-ம் ஆண்டு இறுதியில் ஆலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கோவில் கர்ப்பகிரகத்தின் மேற்கூரையில் தீ வேகமாக பரவி எரிந்தது.
இதில் இலுப்ப மரத்தால் செய்யப்பட்ட பத்மநாப சுவாமியின் மூல விக்கிரகத்தின் மீதும் தீ விழுந்தது. இதில் பெருமானின் இடது கையில் உள்ள மூன்று விரல்களும் இடது காலில் உள்ள விரல்கள் முழுவதும் தீக்கரையாகின. அதிர்ஷ்டவசமாக பெருமானின் திருமேனியும் மற்ற பாகங்களும் தீயிலிருந்து தப்பின.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்
திருவனந்தபுரம் ஆலயம் தீயில் சேதமடைந்ததைத் தொடர்ந்து 1729- ஆம் ஆண்டு விஷ்ணு பக்தரான ராஜா மார்த்தாண்ட வர்மா ஆலயத்தைப் புதுப்பித்து 30 மீட்டர் உயரம் கொண்ட ஏழுநிலை கோபுரத்தைக் கட்டினார். பின்னர் கருவறையில் புதிய விக்கிரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.
அதன்படி கோவிலில் பாம்பனையில் 18 அடி நீளத்தில் பத்மநாப சுவாமி பள்ளி கொண்டுள்ளது பான்ற அழகுமிக்க சிலை வடிவமைக்கப்பட்டது. நேபாளத்தில் கண்டகி நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 12,000 சாலிக் கிராமம் கற்களால் பத்மநாப சுவாமி சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மீது டு சர்க்கரா யோகம் என்ற ஆயுர்வேத ரசாயனமும் பூசப்பட்டுள்ளது. இதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. எனவே அருகில் திசனரி அபிஷேக பூஜைக்காக மற்றொரு தங்க விக்கிரகரத்தை வைத்துள்ளனர்.
மும்மூர்த்திகள்:- விக்கிரகத்திற்குள் சாலிக்கிராமங்களை நிரப்பி விட்டால் தனியாக சக்தி பிரதிஷ்டை செய்ய வேண்டாம் என்ற மரபு உள்ளது. 12 சாலிக்கிராமங்களை ஒரு சேர பூஜித்தால் ஒரு சேத்திரத்தின் கோவில் மகிமை வந்து சேரும் ஒர விக்கிரகத்தில் 120000 சாலிக் கிராமங்கள் அடங்கி இருப்பதால் ஆயிரம் மஹா சேடத்திரங்கள் மகிமை கொண்டதாகும்.
பத்மநாப சுவாமியை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் மூன்று வாசல் வழியாகத்தான் பாரக்க் வேண்டும். முதல் வாசல் வழியாக பகவானின் தலையையும் மற்றும் அவரது கரங்கள் சிவலிங்கத்தின் மீது இருப்பதையும் தரிசிக்கிலாம்.
மகாலட்சுமி, திராகரமுனி, பகவானின் தொப்புளில் புறப்பட்ட தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மா, தினசரி அபிஷேகம் செய்யப்படும் தங்க விக்கிரகம் உற்சவ வேளையில் அருள் பாலிக்கும் வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை, இரண்டாவது வாசல் வழியாகவும் பகவானின் பாதக் கமலத்தையும், கவுண்டியன் முனிவரையும் மூன்றாவது வாசல் வழியாகப் பார்த்து தரிசிக்கலாம்.
ஆதிசேஷனின் ஐந்து தலைகள் உள்முகமாக வளைந்துள்ளன. விஷ்ணுவின் வலது கரம் சிவலிங்கத்தின் மீது உள்ளது. பகவான் இரு தேவியருமான ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருகில் நிற்கின்றனர்.
பகவான் விஷ்ணு இடது கரத்தில் தங்கியுள்ள தாமரை மலரின் நறுமணத்தை ஆதிசேஷன் நுகர்கின்றார். சிவன், பிரம்மா விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒரு சேர இங்கு அமைந்துள்ளதால்... சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாய் இந்த ஆலயம் விளங்கி வருகிறது.
பலராமம் தரிசித்த புனித தலம்:& பிரமாண்ட புராணமும் அனந்த சயன மகாத்மியமும், ஸ்ரீமத் பாகவதமும் இந்த பத்மநாப சுவாமி கோவில் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில் அனந்தனின் அவதாரமான பலராமர் திரவனந்தபுரம் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை தரிசித்து விட்டு, பிராமணர்களுக்கு 10 ஆயிரம் பசுக்களை தானம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கலியுகத்தின் முதல் கோவில்:& இந்தக் கோவில் கலியுகம் பிறந்த முதல் நாளில் அதாவது சுமார் 5000 வருடங்களுக்கு மன்பு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. அதாவது குமரி மாவட்டம் திரவட்டாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் திரேதாயுகத்தில் கட்டப்பட்டது.
அந்த கோவில் கட்டப்பட்டு 1084 ஆண்டுகளுக்குப் பிறகு பத்மநாப சுவாமி கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதனால்தான் பத்மநாப சுவாமியின் மூத்த சகோதரர் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் என்றும் அடுத்த மூத்த சகோதரர் கேரளத்தில்உ ள்ள வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தனன் சுவாமி என்றும் நம்பப் படுகிறது. 12 ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூலில் இந்த ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியக்களான பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் கூட பத்மநாப சுவாமி கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதிசய நிகழ்வுகள்:- திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பாற்காலில் அனந்தசயனத்தில் பள்ளி கொண்டிருப்பது பாற்கடலின் மேல் என்று நம்பப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த காலங்களில் சில அற்புத அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
1563 -ம் ஆண்டு ஆதித்ய வர்மா ஆட்சிக்காலத்தில் கோவில் முன் மண்டபத்தின் பால் வழிந்ததாகவும், அடுத்த ஆண்டு மண்டபத்தின் தெற்கு பாகத்தில் பால் வழிந்ததற்காகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து மண்டபத்திற்கு அருகே தரையில் பால் பொங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.