என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chhatrapati Shivaji"

    • நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல சிவாஜி மறு அவதாரம் எடுத்துள்ளார்
    • பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி முந்தைய பிறவியில் புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று என்று பாஜக எம்.பி. பிரதீப் புரோகித் மக்களவையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதீப் புரோகித், "பிரதமர் மோடி அவரது முந்தைய பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று ஒரு துறவி என்னிடம் கூறினார். பிரதமர் மோடி உண்மையிலேயே சத்ரபதி சிவாஜி தான் என்றும், மகாராஷ்டிராவையும் நாட்டையும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அவர் மறு அவதாரம் எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டார் என்று பாஜக எம்.பி.க்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்தது.
    • தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது.

    மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில், 35 உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது.

    கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

     


    சத்ரபதி சிவாஜி சிலை சேதமுற்று கீழே விழுந்த நிலையில், கள சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேதம் பற்றிய ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



    கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.


    • பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது.
    • ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை.

    மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

    கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜி சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

    சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளது

    அந்த பதிவில், "பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை" என்று பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், சிவாஜி சிலையை மோடி திறந்து வைத்தது மற்றும் சிலை உடைந்து விழுந்தது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.

    • சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
    • மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் நடனமாடுகிறார்.

    லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லரில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விக்கி கௌஷலின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படம் வெளியாகி உள்ளது.

     

    ஆனால் டிரெய்லரில் , மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சமந்த், ' சாவா ' படத்தில் நடனக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தில் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. இயக்குநர் இந்தப் பகுதியை நீக்க வேண்டும்.

     

    படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும், முழு படத்தையும் பார்த்த பின்பே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும்.

    இல்லாவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய நடன காட்சிகளை நீக்குவதாகப் படக்குழு உறுதி அளித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
    • புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே டிரெய்லரில் , மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சமந்த், ' சாவா ' படத்தில் நடனக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். படத்தில் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. இயக்குநர் இந்தப் பகுதியை நீக்க வேண்டும்.



    படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும், முழு படத்தையும் பார்த்த பின்பே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும்.

    இல்லாவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய நடன காட்சிகளை நீக்குவதாகப் படக்குழு உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.



    இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கௌஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் நாளை வெளியாக உள்ளது.
    • புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதையொட்டி ஷீரடி சாய்பாபா கோவிலில் படக்குழுவினருடன் ராஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    முன்னதாக, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கௌஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி.
    • சத்ரபதி சிவாஜியின் தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.

    முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது.

    இவரது ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு இவர் சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.

    மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவரது வீரம் மற்றும் தொலைநோக்கு தலைமை சுயராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைத்தது, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.

    வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அவர் நம்மை ஊக்குவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    ×