என் மலர்
நீங்கள் தேடியது "college student missing"
- கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறை என்பதால் வீட்டில் அவர் திடீரென மாயமானார்.
- நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தேனி:
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் சுதா (வயது18). இவர் நிலக்கோட்டையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.
அப்போது அவர் திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே நந்தவனம் 3வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் கார்த்தியாயினி (வயது20). இவர் போடி தனியார் கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரி சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் செல்வக்குமார் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- 40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது.
- மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். அந்த நபர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த பீட்டர் மகள் மைதிலி ஆண்ட்ரியா (வயது 19). இவர் திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார்.
- மாணவியின் சகோதரருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகள் தேவதர்ஷினி (வயது 19). மதுரையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே காட்டூரைச் சேர்ந்த விக்னேஸ்குமார் என்ற வாலிபர் மாணவியின் சகோதரர் பாலக்குமாருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்
- போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்
தேனி:
தேனி அருகே அப்பிபட்டியை சேர்ந்த அய்யர் மகள் சுபிதா(24). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஆடிட்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யரின் மனைவி மற்றும் மகன் வெளிவேலையாக சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த சுபிதா மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பெரியகுளத்தை சேர்ந்தவர் நிஜாம் மகள் அப்ரா. இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாததால் உத்தமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அப்ரா திடீரென மாயமானார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே திருமாணிக்குழி சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்ஜினீயரிங் 3ம் ஆண்டு மாணவர் வீட்டுவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை.
- புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் மாணவரை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி புதுக்காலனி 3வது தெருைவ சேர்ந்த பிரசாத் மகன் நரேந்திரன் (வயது20). இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
விடுமுறை என்பதால் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் மாயமானார்.
இது குறித்து அவரது தாய் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
தேனி:
கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கருப்பதேவன் மகள் ஜீவிதா(19).
இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ஜீவிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவன் மாயமானதால் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
- இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதியன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாக்கான்குடி அருகே உள்ள புளியங்குடி கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் இவரது மகன் ஆகாஷ் (18 ) , இவர் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ.படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதியன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இவரது தந்தை சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.