என் மலர்
நீங்கள் தேடியது "committed suicide"
- கணவர் கண்டித்ததால் விபரீத முடிவை எடுத்தார்.
- கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்
கோவை,
கோவை காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்.இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த பெண் மது குடித்தார். அப்போது அவரது கணவர் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவி மது குடிப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து தகராறு செய்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.
இதன்காரணமாக மன வேதனை அடைந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கணவர் கதவை தட்டினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.
வீட்டிற்குள் தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மது பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஷம் அருந்தி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது44). கூலித்தொழிலாளியான இவர் குடி பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் மனமுடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சேதுராஜா மனைவி மாரியம்மாள் (39). இவர் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 5 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது.
- குடிபோதையில் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
கோவை,
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 26). டிரைவர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணகுமாரை அவரது மனைவி பிரிந்து சென்றார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவருக்கு குன்னூரை சேர்ந்த கணவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் 2 பேரும் கோவை வந்தனர். கிருஷ்ணகுமார் கருமத்தம்பட்டி அருகே உள்ள எம்.ராயர் பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.
சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் மனைவியை தாக்கி வெளியே அனுப்பினார்.
பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணகுமாரின் உடல் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறகு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 34 வயது இளம்பெண் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
- ஜவுளிக்கடையில் வேலை பார்த்த திருமணமான வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது
கோவை,
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 34 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து கிணத்துக்கடவில் வசித்து வந்தார். பின்னர் இளம்பெண் கோவையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது அந்த ஜவுளிக்கடையில் வேலை பார்த்த திருமணமான வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
பின்னர் அந்த வாலிபர் தனது மனைவிக்கு தெரியாமல் இளம்பெண்ணுடன் கிணத்துக்கடவு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து திருமணம் செய்யாமல் அவருடன் கடந்த 4 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் வாலிபர் இளம்பெண்ணை சரியாக கவனிக்காமலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதன்காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அந்த பெண் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இளம்பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
- தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒடையகுளத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (36).
இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராவிற்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி மதுகுடித்து வந்தனர்.
சம்பவத்தன்று வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் வீட்டில் மதுகுடித்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் கருப்புசாமி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ெசன்று அருகில் உள்ள மோட்டார் அறையில் படுத்து தூங்கினார்.
இதனை நினைத்து மனவேதனை அடைந்த சித்ரா விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் மதுகுடித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் தனியாக இருந்த சிறுமி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதி யை சேர்ந்த வயது 17 சிறுமி ஒருவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் செல்போனில் இன்ஸ்ட்ரா கிராம் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவரது பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி ஒரு அறையில் பேன் கொக்கியால் தனது தாயாரின் சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.
இதை கண்ட அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாசு திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பைரவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 52). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் இரு ந்தது. அவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வாசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மற்றும் தெரிந்த வர்களிடம் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கினார். ஆரம்பத்தில் கடன் கட்டி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படு கிறது.
இதையடுத்து வாசு அவருக்கு சொந்தமான விவசாய வயலை விற்றார். அந்த பணத்தை கொண்டு கடனை அடை த்தார். இதை தொடர்ந்து அவர் கடனுக்காக தனது விவசாய தோட்டத்தை விற்று விட்டோமே என புலம்பி கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் மன வேதனையில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் வாசு திடீரென விஷம் (பூச்சி மருந்து) குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாசு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இற ந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
- வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதிக்கு உட்பட்ட கார்சிலி பகுதியில் வசித்து வருபவர் ராபர்ட். இவரும் இவரது மனைவியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் கவுதம் கோத்தகிரி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ராபர்ட் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கவுதம் வீட்டின் சமையல் அறையில் டி.வி. கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
அதிர்ச்சியடைந்த ராபர்ட் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். பின்பு அவர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதம் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோத்தகிரி கெர்பேட்டா எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மகன் ஸ்ரீனிவாசன் (22). இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இரவு வீட்டில் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசிவிட்டு தூங்க சென்றுள்ளார்.
காலை 5 மணிக்கு செல்வராஜ் வேலைக்கு புறப்பட எழுந்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் ஸ்ரீனிவாசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
பெத்தானியாபுரம் பாத்திமாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (49).இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
பி.பி.குளம் முல்லைநகர் மாரிமுத்து மகன் வினோத்குமார்(30).இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாயார் சுமதி கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
- பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர்
- மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சின்ன களியூர், பகவதி நகரை சேர்ந்தவர் மாதன்(70). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக மாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பக்கத்து தெருவை சேர்ந்த உறவினருக்கு திருமணம் என்பதால் மாதன் மனைவி அவரது மகள் பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் மாதன் மட்டும் தனியாக இருந்தார்.
இந்நிலையில் மாதனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.
இது குறித்த அவரது பேரன் அக்கம் பக்கத்தினர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து மாதன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயஸ்ரீ பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார்.
- டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. மழவராயனூர் கிராமத்தைச் ேசர்ந்தவர் யேசுடையான் மகள் ஜெயஸ்ரீ (வயது 16). திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார்.
இந்நிலையில் வீட்டில் ஜெயஸ்ரீயின் அண்ணன் சமையல் செய்யவில்லை என ஜெயஸ்ரீயை திட்டினார். இதனால் மனம் உளைச்சலில் இருந்த இவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கீேழ விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவாக்ள் ஜெயஸ்ரீயை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது.
- இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சங்கர்(35). இவர் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து சங்கருக்கு உத்தரவு வந்தது. ஆனால் அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்குதெரு காலனியை சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(63). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.