என் மலர்
நீங்கள் தேடியது "cooking"
- தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
* வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.
* கடல் பாசி காய்ச்சும்போது இறுதியாக சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் கடல் பாசி கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.
* அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.
* ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.
* தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.
* பருப்புக் குழம்பில் இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.
* வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.
* சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
* மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
- பெண் மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.
- திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
போரூர்:
சென்னை கே.கே.நகர் அடுத்த விஜயராகவபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 85). தனியாக வசித்து வரும் மூதாட்டி காந்தியின் வீட்டிற்கு நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். மேலும் தன்னை உறவுக்கார பெண் என்று கூறி மூதாட்டி காந்தியிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
இதை உண்மை என்று நம்பிய காந்தி அவரை வீட்டிற்குள் அனுமதித்தார். பின்னர் அந்த பெண், மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.
பின்னர் அந்த பெண் அவரது அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி காந்தி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.
- கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை சமையல் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பாக ராஜா முத்து திருத்தங்கள் பகுதியில் உள்ள உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி களை சமையலுக்கு பயன்படுத்த வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது 46 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சில ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 ஓட்டல்க ளுக்கு தலா ரூ.2000 அபரா தமும்,5 ஓட்டல்களுக்கு ரூ.5000 ஆயிரம் என மொத்தம் ரூ.39 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து கூறும் போது, ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான சமையல் பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- சிறப்பு வாய்ந்த திட்டமாக செயல்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் முதலமைச்ச ரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு பணி மேற்கொள்ளும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுக்கான சமையல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று பயிற்சி பெற வந்துள்ள மகளிர்குழுவை சேர்ந்த உறுப்பினர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு வழங்கும் திட்டம் பிற மாநிலங்களே போற்றுகின்ற வகையிலும் தமிழகத்தில் அனைத்து மக்களின் வரவேற்பை பெற்ற சிறப்பு வாய்ந்த திட்டமாக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய திட்டம் முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வந்த நிலையில் மேலும் நகராட்சி, பேரூராட்சி களிலும் இத்திட்டம் செயல் பட உள்ளன. இப்பணியில் ஈடுபட உள்ள மகளிருக்கு சிறந்த சமையல் கலைஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படு கிறது. அதன்படி நீங்கள் சிறந்த முறையில் உணவு களை தயாரித்து குழந்தை களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், கடலாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முத்துலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.
- நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
சேலம்:
சேலம் நாச்சியப்பா தொழிற் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையமானது, தேசிய தொழிற்சார் பயிற்சி கழகம் புதுடெல்லி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஓராண்டு சமையல் கலை - உணவு தயாரித்தல் பயிற்சியை 2008-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதுபோன்ற தொழிற் பயிற்சிகளை அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தவிர இதர நிறுவனங்களில் படிக்க வேண்டுமெனில் அதிகமாக பயிற்சி கட்டணம் செலுத்தவேண்டி வரும். நமது நாச்சியப்பா கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிது. பயிலும் போது பகுதி நேர
வேலை வாய்ப்பு ஏற்படுத்தி
தரப்படுகிறது. இப்பயிற்சி யினை நிறைவு செய்பவர்களு க்கு கப்பல் நிறுவனங்கள், ரெயில்வே துறை சமையலர், விமான துறை சமையலர், மத்திய, மாநில அரசு விடுதி சமையலர், உணவு உற்பத்தி துறை, மருத்து
வமனை சமையலர், நட்சத்திர ஓட்டல்களில் அதிக சம்ப ளத்தில் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் நெய் பிஸ்கட்.
- ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
நெய் - ஒரு கப்
கோதுமை மாவு-ஒரு கப்
நாட்டு சர்க்கரை - ஒரு கப்
உப்பு -ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 4 நம்பர்
செய்முறை:-
ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் நெய் சேர்த்து அதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும். அதனையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நிறைய நேரம் கிளர வேண்டாம்.
அடித்து வைத்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை கட்டி இல்லாமல் சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி அதனை ஒரு தட்டில் வைத்து, அதனை பிஸ்கட் வடிவத்திற்கு உருட்டி தட்டையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி அதனை 5 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த பிஸ்கட்களை ஒரு தட்டில் வைத்து அதனுள் வைத்து 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்துக்கொள்ளவும். நெய் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பரிமாறலாம்.
இந்த நெய் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீட்டுக்கும் வந்ததும் கொடுக்கலாம். செய்து பாருங்கள். https://www.maalaimalar.com/health
- பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
- சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:-
பாசி பயறு - 200 கிராம்
நாட்டுச்சர்க்கரை 250 கிராம்
வேர்கடலை - 100 கிராம்
ஏலக்காய் - 4 நம்பர்
உப்பு -ஒரு சிட்டிகை
நெய் - 3 கரண்டி
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health
- சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்
வெல்லம் -300 கிராம்
வேர்கடலை - 200 கிராம்
ஏலக்காய்- 4 நம்பர்
நெய் - தேவையான அளவு
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:-
ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.
90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.
- குழந்தைகள் ஸ்கூலுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்ல ஏற்றது.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு -கால் கப்
கோதுமை மாவு - கால் கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
கோகோ பவுடர்- 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடன் -1 ஸ்பூன்
நெய்- 100 கிராம்
முந்திரி - 10 நம்பர்
காய்ச்சாத பால் - 100 மி.லி
செய்முறை:-
ஒரு வாய் அகன்ற பாத்திரத்திரத்தில் கோதுமை மாவு கால் கப், ராகி மாவு கால் கப், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், ஏலக்காய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு டம்ளர் பாலில், 100 கிராம் நெய் சேர்த்து கலந்து இரண்டையும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் சேர்க்கவும். இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறுது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மூடி போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
அதன்பிறகு மாவுக்கலவையை எடுத்து அதனை உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட் அச்சு இருந்தால் அதிலும் வடிவமாக தட்டிக்கொள்ளலாம். அதன் நடுவே முந்திரிகளை உடைத்து அலங்கரித்துக்கொள்ளலாம்.
பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி இதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு தயாராக வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஸ்டாண்ட் மீது வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கட் தயார். ஓவனில் பேக் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் பேக் செய்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் எடுத்து பரிமாறலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்பதற்கு ஒரு சிறந்த ஸ்நாக்காக இந்த ராகி பிஸ்கட் இருக்கும். சுகர் நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம். செய்து பாருங்கள்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா- ஒரு கப்
முட்டை- 1
உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
பால்- அரை கப்
தேங்காய் பால்- ஒரு கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
நெய்- தேவையான அளவு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.
- சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம்.
- ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு- ஒரு கப்
ராகி மாவு- அரை கப்
உப்பு- ஒரு சிட்டிகை
தேங்காங் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
வேர்கடலை பொடித்தது- கால் கப்
பொடித்த வெல்லம்- அரை கப்
வாழை இலை-1
செய்முறை:-
முதலில் கொலுக்கடை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூரணம் செய்வதற்கு ஒரு சிறிய பவுளில் துருவிய தேங்காய், வறுத்து பொடித்த வேர்கடலை பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பூரணம் ரெடி செய்துகொள்ள வேண்டும்.
இந்த மாவு கலவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி வட்டமான வடிவில் தட்டி அதன் நடுவே ஏற்கனவே நாம் செய்து வைத்துள்ள பூரண கலவையை வைத்து வாழை இலையுடன் அதனை மடித்து எடுத்துக்கொள்ளவும்.
ரெடியாக உள்ள மடித்து வைத்துள்ள வாழை இலை அடையை ஒரு இட்லி பாத்திரத்தில் நீர் உற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இலை அடை தயார்.
ஆவியில் வேக வைத்து எடுத்த உணவு என்பதால் அனைவரும் இதனை உண்ணலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம். பள்ளி சென்றுவிட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமான ஸ்நாக்கு களை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர். நீங்களும் செய்து பார்த்து பதில் சொல்லுங்க.
- வயதுக்கு வந்த பெண்கள் முதல் வயதானவர்கள் வரை உண்பதற்கு ஏற்றது.
- கருப்பு உளுந்தஞ்சோறு எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
இன்றும் பல கிராமங்களில் உளுந்தஞ்சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது. உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
அரிசி மற்றும் உளுந்து கொண்டு செய்யப்படும் உளுத்தம் சோறு தமிழகத்தின் பராம்பரிய உணவு. இன்றும் பல கிராமங்களில் உளுத்தம் சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது. பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்து சோறு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி- ஒரு கப்
கருப்பு உளுந்து (உடைத்தது)- அரை கப்
பூண்டு- 10 பல்
தேங்காய் துருவல்- கால் கப்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
கருப்பு உளுந்தை ஒரு கடாயில் 5 நிமிடம் சிறிது நிறம்மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அரிசியையும், உளுந்தையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி (பூண்டு நிறம் மாறக்கூடாது) அதனுடன் அரிசி ஒரு பங்குக்கு 3 பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
பின்னர் ஒரு கொதி வந்தது. தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதையடுத்து குக்கரை மூடி 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் சிறிதளவு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சாப்பிடுவதற்கு முன்னர் சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். இதற்கு நாட்டுக்கோழி குழம்பும், கறிக்குழம்பும் அல்லது எள்ளு துவையல் சேர்த்து சாப்பிடுவது சூப்பரான காமினேஷன்.