என் மலர்
நீங்கள் தேடியது "Cooking oil"
- மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
- போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாக போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்குள்ள கால்வாய்களில் ரத்தம் வழிந்து ஓடிய கறைகள் படிந்திருந்தது.
மேலும் அப்பகுதியில் மாட்டு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அங்கு பயங்கரமாக துர்நாற்றம் வீசியது. போலீசார் வருவதைக் கண்டு அங்கிருந்த கும்பல் தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்குள்ள குடோனுக்குள் சென்று சோதனை நடத்தினர்.
அங்கு மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த கும்பல் மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சமையல் எண்ைணயை மறுசுழற்சி செய்து பயோ டீசலாகவோ, லூப்ரிகண்டாகவோ பயன்படுத்தும் திட்டம்.
- பொது நிகழ்வுகளில் கைப்படாத உணவு உபரியாக இருப்பின் 9087790877 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
சுந்தராபுரம், வடவள்ளி உழவர் சந்தைகளுக்கு சுத்தமான காய்கறி, பழச்சந்தை சான்று பெறப்பட்டுள்ளது.
இதுதவிர ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், குறிச்சி உழவர் சந்தைகள் இதேபோன்று சான்று பெற நடவடிக்கை எடுக்க வேளாண் வணிக துணை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவகங்கள், ஓட்டல்கள், இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், தொழிற்சாலை கேண்டீன்களில் உணவு பொருட்களை தயாரிக்கும் போது சில இடங்களில் சமையல் எண்ணையை பலமுறை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
இதனால் உணவு செரிமான தன்மை குறைவு, கெட்ட கொழுப்பு, குடல் பாதிப்புகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே உபயோகித்த சமையல் எண்ணை உணவு பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்று மறுசுழற்சி செய்து பயோ டீசலாகவோ, லூப்ரிகண்டாகவோ பயன்படுத்தும் திட்டம் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 2022 ஏப்ரல் 2023 பிப்ரவரி வரை 3.79 லட்சம் லிட்டர் உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணை பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு பதிவு செய்து வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் முகவர்களை தொடர்பு கொள்ளலாம். உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோர் திட்டம், நோ புட் வேஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே திருமண விழாக்கள் உள்ளிட்ட வீட்டு விஷேசங்கள், பொது நிகழ்வுகளில் கைப்படாத உணவு உபரியாக இருப்பின் 9087790877 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
தரம் குறைவான உணவு, கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணை, அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணம் கலந்த உணவுகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு,பிச்சாண்டி பேசியதாவது:-
மணிலா உற்பத்தியில் இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மணிலாவை எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் மழை நீரை சேமித்து ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை விளைவித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
விவசாயிகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் அதிக விளைச்சலுடன் அதிக லாபத்தையும் ஈட்டலாம். திருவண்ணாமலையில் டான்காப் என்ற ஆலை ஆரம்பிக்கப்பட்டது. அது பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது.
தற்போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் தெள்ளானந்தால் கிராமத்தில் சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துல் மற்றும் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் இன்று திறக்கப்பட்டுள்ள மையம் குறித்து துண்டு பிரசுரம் அச்சிட்டு விநியோகித்தால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
இந்த மையத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும் அதற்கு நல்ல விளை கிடைப்பதற்காகவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் பேரினார்.
இதில் கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், துணை இயக்குநர் சிவக்குமார், விற்பனை குழு செயலாளர் சந்திரசேகர், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே நோய்களிலிருந்து விடுபடலாம்.
- தினமும் உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும்
புதுடெல்லி:
புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் குழுமியிருந்த அக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மாறிவரும் வாழ்க்கை சூழல், உடற்பயிற்சி இன்மை, துரித உணவு பழக்கங்களால் நம் நாட்டில் உடன் பருமன் உள்ள நபர்கள் அதிகரித்து வருகின்றனர். சமையல் எண்ணெயை அதிகமாக உட்கொள்வது, உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது. முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் கூட இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்றாட உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொண்டாலே உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.
ரேஷனில் கிடைக்கும் 2 லிட்டர் எண்ணெயின் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்தாலே போதும் நாம் பலவிதமான நோய்களிலிருந்து விடுபடலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் சமச்சீரான மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
கடுகு எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது.
கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் என்று ஒவ்வொரு முறையும் சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் எனவும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவுறுத்தி உள்ளன.
2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு செய்துள்ளது. 20 லட்சம் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதியை உறுதி செய்த குவாட் அமைப்பு
- பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டன.
- 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உடுமலை :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், கோடீஸ்வரன், பாலமுருகன், சிரஞ்சீவி, ரகுநாத் ஆகியோர் உடுமலையில் கல்பனா ரோடு, பழனி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் பேக்கரிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்த பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கெட்டுப்போன சாயம் ஏற்றப்பட்ட 4 கிலோ கோழி இறைச்சி மற்றும் 10 கிலோ சரியான லேபில் இல்லாத உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட ஒரு உணவகம் ,இரண்டு பேக்கரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு பயோடீசல் தயார் செய்வதற்காக உரிய விலைக்கு வழங்க வேண்டும்.
சமையல் எண்ணெயை, சில்லறை விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பில் புத்தகத்தில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அச்சிட்ட பேப்பரை உணவுகளை மடித்து கொடுக்கும்போது சூடான உணவுப் பொருளில் அதில் உள்ள கெமிக்கல் கலந்து வயிறு தொடர்புடைய பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதே பிளாஸ்டிக் மூலப்பொருள் உருகி மனித உடலில் கலந்து கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளன. எனவே அவற்றை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தனர்.