என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corporation"

    • குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
    • பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    கே.பி.அக்ரஹாரா:

    பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மாகடி ரோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கே.பி.அக்ரஹாரா, மாகடி ரோட்டை சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் விளையாடி வருகிறார்கள். இங்கு பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது அந்த மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்து கிடப்பதுடன், செம்மண் நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

    மேலும் பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது. சில கம்பிகள் சரியான பிடிப்பு இல்லாமல் உள்ளன. இதற்கிடையில் இரவு நேரத்தில் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதுடன், கஞ்சா புகைக்கின்றனர். இதனால் கல்வி நிலையம், விஷமிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கிடக்கும் மதுபான பாக்கெட்டுகள், சிகரெட்டுகளை பார்த்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், இருக்கையையும் சீரமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
    • மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    மும்பை:

    மும்பை மலபார்ஹில் பகுதியில் அரபிக்கடலையொட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.

    அடர்ந்த மரங்களுக்கு இடையே கடல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் இந்த மரப்பாலம் ரூ.25 கோடி செலவில் 470 மீட்டர் நீளத்தில் 2.4 மீட்டர் அகலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.

    இந்த பாலம் அமைக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் இது பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் மரப்பாலத்தில் நடந்தபடி இயற்றை அழகை ரசிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    மரப்பால திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமாக இருக்கும். பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.

    • சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    மும்பை:

    மும்பையில் ஆண்டு தோறும் மழைக்காலத்துக்கு முன் சாக்கடை கால்வாய்கள், மித்தி நதியை மும்பை மாநகராட்சி தூர்வாரி வருகிறது. இந்த பணிக்காக அதிகளவில் நிதி செலவிடப்படுகிறது. எனினும் பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

    இதன் காரணமாக மாநகராட்சி அதிக செலவு செய்து தூர்வாரும் பணியை மேற்கொண்டும், சாக்கடை கால்வாய்களில் குப்பை குவிந்து கிடப்பதால் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

    இதையடுத்து பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், கரையோரங்களில் தடுப்பு வேலி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாாி ஒருவர் கூறுகையில், "சாக்கடை கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள், சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. வலை, இரும்பு தகடு மூலம் சாக்கடை கால்வாய் ஓரம் 10 அடி உயரம் வரையில் வேலி அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.

    தடுப்பு வேலி வலை திருட்டை தடுக்க, அவை பழைய இரும்புக்கு விற்பனை ஆகாத அல்லது மறு விற்பனை ஆகாத பொருட்கள் மூலம் செய்யப்பட்டதாக இருக்கும். முதல் கட்டமாக அதிகளவில் குப்பை கொட்டப்படும் இடங்களில் தடுப்பு வேலி அமைக்க உள்ளோம். அதன்பிறகு மற்ற இடங்களில் வேலி அமைக்கப்படும்" என்றார்.

    • சந்திப்பு பஸ்நிலையத்தின் ஒரு பகுதி முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது.
    • கீழ்தளத்தில் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.78.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கோரிக்கை

    பஸ் நிலையத்தில் 144 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒரு பகுதி பஸ்நிலையம் முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது. அங்கு 17 பஸ்கள் நிறுத்து வதற்காக நடை மேடையும், கீழ்தளத்தில் 106 கார்கள், 1,629 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.

    2 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க அடிமட்ட தூண்கள் கட்டப்பட்டு உள்ளது. மேல்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்ல லிப்ட் வசதிகள், டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட வேண்டியதுள்ளது.

    நகரின் முக்கிய பகுதியாக திகழும் சந்திப்பு பகுதியில் பஸ் நிலையம் இல்லாததால் வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் பயணிகளும் அவதி யடைந்து வருகிறார்கள்.

    எனவே கட்டுமான பணி கள் முடிந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    முற்றுகை

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேர் இன்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களுடன் மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேசிய வியாபாரிகள், பல்வேறு தரப்பினரும் சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதி காரிகள் தரப்பில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பஸ் நிலையத்தை திறக்க மறுக்கின்றனர். எனவே உடனடியாக பஸ் நிலை யத்தை திறக்க வேண்டும் என்றனர்.

    அப்போது மேயர் சரவணன், மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சந்திப்பு பஸ் நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு கடந்த மாதம் 22ஆம் தேதி கொண்டுவரப்பட்ட அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசாணை காரணமாக சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 35,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 3,417 பணியிடங்களாக குறைக்கப்பட்டும். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 1285 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்படுவதோடு , மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் எனவே இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் தனியார் மயமாக்கப்படும் சூழல் ஏற்படுவதாகவும் எனவே தமிழக அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கான அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சங்கத்தின் தலைவர் சுஜாத் அலி, செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் முருகன், அமைச்சூர் சங்க செயலாளர் தங்கவேல், வருவாய் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரம ணியம் ஆகியோரிடம் மனு கொடு த்தனர்.

    • திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
    • கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. 4 மண்டலங்களிலும் கீழ்கண்டவாறு சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    மேலும் எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். இணையதள முகவரி Use Quick Payment" or Register & Login" to. https://tnurbanepay.tn.gov.in.

    இவற்றில் சொத்துவரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.92.16 கோடியும், காலியிட வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.7.82 கோடியும், தொழில் வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.18.44 கோடியும். குத்தகை இனத்தில் 2022-23ம் ஆண்டுக்குநிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.8 கோடியும் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது.

    திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.மேலும் 17.11.2022 அன்று அனைத்து மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • நெல்லை மாநகராட்சியின் புதிய நகர் நல அலுவலராக டாக்டர் சரோஜா இன்று பொறுப்பேற்று கொண்டார்.
    • டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கால சுகாதார நடவடிக்கைகள் மாநகராட்சி பகுதியில் மேம்படுத்தப்படும் என புதிய நல அலுவலர் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் புதிய நகர் நல அலுவலராக டாக்டர் சரோஜா இன்று பொறுப்பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே மாநகர நல அலுவலராக நெல்லையில் பணியாற்றியவர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட டாக்டர் சரோஜா மீண்டும் நெல்லை மாநகர நல அலுவலராக நியமிக்கப்பட்டார்.

    இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அவர் நிருபர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சுகாதாரம் தொடர்பான மழைக்கால முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்படும். டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கால சுகாதார நடவடிக் கைகள் மாநகராட்சி பகுதியில் மேம்படுத்தப்படும் என்றார். முன்னதாக அவர் கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி, மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகி யோரை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார்.

    • வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    நெல்லை:

    வட கிழக்கு பருவ மழையை யொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியின் 4 மண்டல பகுதி களிலும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு

    இந்நிலையில் பருவமழையையொட்டி சில இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 24-வது வார்டு பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    டவுன் பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெரு உள்ளிட்ட இடங்களில் சிறுவர்- சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மருத்துவ முகாம்

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர், தனது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்று இன்று 24-வது வார்டு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதனை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, கவுன்சிலர் ரவீந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ெபாது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு 24-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    • குற்றாலம் ரோடு லாலுகாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது.
    • ஈசிஜி., ஸ்கேன், பல், சித்தமருத்துவம், ரத்தம் பரிசோதனை, ரத்த அழுத்தம், தாய் சேய் நலம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி குற்றாலம் ரோடு லாலுகாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற சிறப்பு மருத்துவமுகாம் காலை 9 மணிமுதல் ெதாடர்ந்து நடைபெற்றது.

    முகாமில் ஈசிஜி., ஸ்கேன், பல், சித்தமருத்துவம், ரத்தம் பரிசோதனை, ரத்த அழுத்தம், தாய் சேய் நலம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் சத்து உணவுகள் குறித்து கண்காட்சி நடைபெற்றது. நகர்நல அலுவலர் சரோஜா முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் பிரித்தவ்சி, ராணி, ரஞ்சித் மற்றும் செவிலியர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வை யாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார அலுவலர் இளங்கோ முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    • மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
    • சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது.

    நெல்லை:

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    புழுதி பறக்கும் சாலைகள்

    குறிப்பாக பழைய பேட்டை முதல் தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை, எஸ்.என்.ஹைரோடு வரை சாலைகள் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனை அவ்வப்போது தற்காலி கமாக சீரமைத்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலைகள் மீண்டும் மோசம் அடைந்தது. இதனை உடனடியாக சீரமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே எஸ்.என்.ஹைரோட்டில் செல்லும் போது கடுமையான புழுதி பறக்கிறது. இதனால் ஆஸ்மா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வியா பாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நெல்லை மாநக ராட்சி பகுதியில் நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்தமான 112 கிலோமீட்டர் தூர சாலை உள்ளது. இதில் பழையபேட்டை முதல் கே.டி.சி.நகர் வரையிலான சாலைகளும் அடங்கும். இந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் தான் சீரமைக்க வேண்டும்.

    மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியினை கொண்டு நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுகிறது.

    முதல் கட்டமாக ரூ.10.66 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக ரூ.17.92 கோடி மதிப்பீட்டிற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்படுகிறது. வருகிற வாரம் இதற்கான பணிகள் தொடங்கும்.

    இதன்படி சந்தி பிள்ளை யார் கோவில் முதல் காட்சி மண்டபம் வரை சாலைகள் போடப்பட்டது. இதேபோல் டவுன் சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட சாலைகளிலும் புதிதாக பணிகள் நடை பெற்றுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவனந்தபுரம் சாலை, தாழையூத்து பகுதிகளில் சாலைகள் புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாநகராட்சி தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட 1-வது வார்டில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணி களை மேற்கொண்டு வருகிறார்.
    • அவரது சொந்த வார்டில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட 1-வது வார்டில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணி களை மேற்கொண்டு வருகி றார்.

    அவரது சொந்த வார்டில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இன்று இந்திராநகர், செல்வ விக்னேஷ் நகர், கணபதி மில் காலனி, மல்லிகை தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண் டார். அந்த பகுதியில் குடியி ருக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட வசதிகளை கேட்டறிந்தார். பின்னர் சாக்கடை நீர் தொய்வின்றி செல்வதற்கு ஏதுவாக வாறுகால்கள் அமைக்கும் பணி, புதிதாக வாறுகால் தேவைப்படும் இடங்கள் உள்ளிட்டவைகளை துணை மேயர் ராஜு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு பணியின் போது உதவி ஆணையாளர் வாசுதேவன், உதவி செயற்பொறி யாளர் லெனின், உதவி பொறியாளர் நாகராஜன், மேஸ்திரி ஜானகிராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
    • டவுன் தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர்.

    நெல்லை:

    கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். கொசு புழுக்களால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் மாநகர பகுதியில் உள்ள தெருக்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும், வீடு வீடாக சென்று குடிதண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கமிஷனரின் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுரைப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி டவுன் ரத வீதிகள் மற்றும் அதனை சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர். இந்த பணியின் போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கொசு மருந்து அடித்ததோடு, வீடு வீடாக சென்று தண்ணீரின் தரத்தையும் ஆய்வு செய்தனர்.

    ×