என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "curfew"

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 ஆயிரத்து 367 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். 75 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.
    வெல்லிங்டன்:

    கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நியூசிலாந்துக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் சிறப்பு மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ் இதனை அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “கொரோனா தொற்றில் இருந்து நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருத்தக நாம் எடுத்த முதல் தீர்க்கமான நடவடிக்கை நமது எல்லைகளை மூடுவது. அதே போல் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவதில் நமது கடைசி நடவடிக்கை எல்லைகளை திறப்பது ஆகும்” என்றார்.

    மேலும் அவர் “ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முழுயைாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து பிரஜைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் நியூசிலாந்து வரலாம். அதே போல் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30-ந்தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என கூறினார்.

    மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குழந்தைகளின் அனைத்து விதமான நலன் மற்றும் பாதுகாப்பிற்காக தமிழக அரசு எப்போதுமே சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது.

    கொரோனா  வைரஸ்


    மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக பாதுகாப்பு இயக்குநர் எஸ்.வளர்மதி உள்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் என்ற இலக்கோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தற்போது 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் ஜெனரேட்டரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) டாக்டர் ஜெமிலா ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி


    நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் என்ற இலக்கோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். தற்போது 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும். டெங்கு காய்ச்சலால் இதுவரை 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 513 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனாவுக்கு எதிராக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 21 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரத்து 916 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. வீடுகள்தோறும் தடுப்பூசி திட்டத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 131 கோடியே 62 லட்சத்து 3 ஆயிரத்து 540 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    இவற்றில் பயன்படுத்தியது போக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 21 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரத்து 916 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    தமிழகத்தில் தற்போது 8,484 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று  744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 22 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 8,484 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,624 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 782 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 77 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,415 ஆக உயர்ந்துள்ளது.

    ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 81,26,376 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    மாஸ்கோ:

    உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 25.93 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 51.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 94,34,393 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,240 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.

    ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 81,26,376 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10,40,198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று  741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 8,536 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,00,817 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 808 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,401 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, ஹங்கேரி, நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது.

    இதையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது.

    அமெரிக்கா அரசு தங்களது நாட்டு குடிமக்களுக்கு வெளி நாடுகளுக்கு பயணம் செல்வது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதில், கொரோனா பாதிப்பை நான்கு பிரிவுகளாக வகுத்துள்ளது.

    அதில் 4-வது பிரிவு மிகவும் மோசமான கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளை குறிக்கும். இந்த 4-வது பிரிவில் தற்போது ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், கிரீஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த இரு நாடுகளும், மோசமான கொரோனா பாதிப்பை குறிக்கும் 4-வது பிரிவில் வைக்கப்பட்டுள் ளது.

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதிப்பை தடுக்க ஐரோப்பிய நாடுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    இதையும் படியுங்கள்... அ.தி.மு.க. அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

    நீலகிரியில் 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. 256 நிலையான மையங்கள் மற்றும் 20 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் 45 வயதுக்கு மேல் 220 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 434 பேர் என 654 பேருக்கு செலுத்தப்பட்டது. 2-வது டோஸ் 45 வயதுக்கு மேல் 6 ஆயிரத்து 695 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 6,412 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 107 பேருக்கு போடப்பட்டது. 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 19-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43 ஆயிரத்து 350 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 79 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    ×