என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death sentence"

    • 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர்.
    • கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி ஒரு சமுதாயத்தினர், மற்றொரு சமுதாயத்தினரின் தெருவில் பட்டாசு வெடித்தனர்.

    இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முன்விரோதமாக மாறி கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்குடன் அதே ஆண்டு 1-6-2014 அன்று உடப்பன்குளம் கீழ தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 55), கோவை துடியலூரை சேர்ந்த வேணுகோபால்(42), முருகன்(42) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் உடப்பன்குளத்தை சேர்ந்த 25 பேரை வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் கைது செய்தனர். வழக்கு விசாரணை நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, உலக்கன், தங்கராஜ், வேலுச்சாமி மகன் கண்ணன், பால முருகன், முத்துகிருஷ்ணன், வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீலான சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு நேற்று இரவு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குட்டிராஜ், கண்ணன், மற்றொரு கண்ணன், பாலமுருகன், உலக்கன் ஆகியோருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீல் சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டது. மேலும் 11 பேருக்கும் அபராதங்களும் விதித்து தீர்ப்பளித்த பின்னர் நீதிபதி சுரேஷ் குமார் பேனாவை உடைத்தார்.

    காலையிலேயே தீர்ப்பை வாசித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர். இதனால் மாலையில் அறிவிப்பதாக தீர்ப்பை தள்ளி வைத்தார். தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்கும் என்பதை அறிந்த தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கு நேற்று காலையில் திடீரென உயர் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    எனினும் நீதிபதி உத்தரவின்பேரில் அவர்களும் மாலையில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு காலையில் கோர்ட்டுக்கு வராத நிலையில், நீதிபதி உத்தரவின்பேரில் அவரும் மாலையில் நேரில் ஆஜராகினார்.

    இந்த நிலையில் தான் பரபரப்பான தீர்ப்பை வழங்க அவர் தயாரானார். அப்போது புகார்தாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அவர்கள் இன்று நல்லபடியாக தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று விட்டனர். எனவே தீர்ப்பை வாசித்துவிடுமாறு அரசு வக்கீல் கந்தசாமி தெரிவித்தார்.

    ஆனால் வழக்கு தீர்ப்பை அவர்கள் பார்க்கவேண்டும். வீடியோ கால் செய்து பார்க்க செய்யுங்கள். அதன்பின்னர் நெல்லையப்பர் கோவிலில் வந்து சாமி கும்பிட சொல்லுங்கள் என்றார். எனினும் அதற்கான வழிவகை இல்லா காரணத்தினால் தீர்ப்பை வாசிக்க நீதிபதி முடிவு செய்தார்.

    அப்போது குற்றவாளிகள் நீதிபதியை நோக்கி இருகரம் கூப்பியபடி, கதறி அழுதனர். எங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றனர். ஆனால் உங்கள் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு விட்டது. பேசாமல் இருங்கள் என்று நீதிபதி கூறிவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு புகார் தாரரின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்டணை பெற்றவர்களின் குடும்பத்தினர் கதறி துடித்தனர். தொடர்ந்து கண்ணீருடன் குற்றவாளிகள் இரவோடு இரவாக பாளை மத்தியச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

    நெல்லை கோர்ட்டில் ஏற்கனவே 2 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ளது 3-வது தூக்கு தண்டனையாகும். கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு 2-வது கூடுதல் அமர்வு நிதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி அப்துல் காதர் குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகளான சங்கரநாராயணன், செல்லம்மாளுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி நெல்லை பேட்டையை சேர்ந்த 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகம் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்தார். தற்போது 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் 150 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரங்கள் அடங்கிய ஆவணத்தை குற்றவாளிகள் 11 பேருக்கும் கோர்ட்டு ஊழியர்கள் வழங்கினர்.

    • 2022-ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு மாணவி சத்ய பிரியா தள்ளிவிட்டு கொல்லப்பட்டார்.
    • சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.

    சென்னை:

    2022-ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு மாணவி சத்ய பிரியா தள்ளிவிட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, சதீஷும், சத்யாவும் காதலித்து வந்ததாகவும் பிறகு சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு பிரிய துவங்கியிருக்கிறார் சத்யா. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனினும் சத்யப்ரியா சதீஷின் காதலை ஏற்கவேயில்லை. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இதனை தொடர்ந்து கைதான சதீஷ் பல முறை ஜாமினுக்கு முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து சதீஷ் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டதாகவும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 27ஆம் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து கடந்த 27 தேதிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார். சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் 30-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
    • எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயிற்சி மருத்துவர், 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் இரவு பணியின் போது மருத்துவமனையின் கருத்தரங்கு அறைக்குள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் குற்றவாளியான சஞ்சய் ராயின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர், அவர்களின் (பாதிக்கப்பட்ட பெண்ணுடைய பெற்றோரின்) வலியை நான் புரிந்துகொள்கிறேன். அவனுக்கு தகுதியான தண்டனை கிடைக்கட்டும். அவனை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறினாலும், அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராயின் மூத்த சகோதரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சட்டம் என் சகோதரனை குற்றவாளி என கண்டறிந்துள்ளது. அதன்படி அவர் தண்டிக்கப்படுவார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார்.

    சஞ்சய் ராய்க்கு நாளை நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனையாகவோ அல்லது ஆயுள் தண்டனையாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தீர்ப்புக்கு பின்னர் இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தான் இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் ராய் கூறியது குறிப்பிடத்தக்கது.

    சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் பிரபல அறிஞர்கள் ஆவர். இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு ஐ.நா சபையும் மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
    தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. #Thailandlovers

    பாங்காக்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவரும் பிட்காயின் முதலீட்டாளர் ஆவார்.

    கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதன் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் இது உள்ளது. எனவே தாய்லாந்தின் இறையான்மையை மீறவில்லை. என சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்தார்.

    எனது காதலி சுப்ரானே எங்காவது சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினார். அவருக்காக வித்தியாசமாக கடலுக்குள் வீடு கட்டினேன் என்றும் அவர் கூறினார். தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

    துபாயில் கொலை வழக்கில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட கணவரை தஞ்சாவூரை சேர்ந்த பெண் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் மாலதி. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவரது கணவர் அர்ஜுண் ஆத்திமுத்து துபாயில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் துபாயில் வசித்துவந்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல்வாஜித் என்பவரை கொலை செய்த வழக்கில் அர்ஜுண் ஆத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. முடிவில் அர்ஜுண் ஆத்திமுத்துவுக்கு கோர்ட்டு மரணதண்டனை விதித்தது. இது அவரது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    துபாய் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் கொலையாளியை தாங்கள் மன்னித்துவிட்டதாக கூறினால் அவரால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.

    இதுபற்றி தெரிய வந்ததும் மாலதி மலப்புரத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு தனது கணவரை மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர்களும் மாலதியின் கணவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

    அதன்படி துபாயில் கொலையுண்ட அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது அவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.30 லட்சம் கொடுத்தால் மன்னிப்பு வழங்குவதாக சமரசம் ஏற்பட்டது.

    ஆனால் ரூ.30 லட்சத்தை கொடுக்கும் அளவுக்கு மாலதிக்கு வசதி இல்லாததால் அவருக்கு உதவிகள் குவிந்தது. மலப்புரம் பகுதி மக்களும், வெளிநாடு வாழ் இந்திய மக்களும் இந்த பணத்தை வழங்கினார்கள். அந்த பணம் துபாயில் கொலையுண்டவர் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். அந்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது அர்ஜுண் ஆத்திமுத்துவின் மரணதண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவர் போன் மூலம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசவும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலதி தனது கணவரை மரணத்தில் இருந்து காப்பாற்ற உதவிய கேரள மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து உள்ளார். தனது உருக்கமான பேச்சை வீடியோவாக பதிவு செய்து கேரள முஸ்லிம் அமைப்பினருக்கு அவர் அனுப்பி உள்ளார்.
    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ குடியுருப்பு பகுதிக்குள் கொலைவெறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மரண தண்டனையை ராணுவ தளபதி உறுதிப்படுத்தியுள்ளார். #PakistanArmy #hardcoreterrorists #deathsentence
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 2016-ம் ஆண்டில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகள், பள்ளிகளை சூறையாடியதுடன் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 34 பேரை ஈவிரக்கமின்றி கொன்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜமாத் உர் அஹ்ரார் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இப்ரார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட சில வழக்குகளில் தொடர்புடைய 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அந்நாட்டின் சட்டப்படி மேற்கண்ட பயங்கரவாதிகள் 15 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா இன்று உத்தரவிட்டார். #PakistanArmy #hardcoreterrorists #deathsentence #ChristianColony #suicideattacks 
    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #antiSikhriotscase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு டெல்லியில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.

    இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence
    சவுதி அரேபிய துணை தூதரகத்தில் நிருபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.#JamalKhashoggi

    ரியாத்:

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜமால் கசோக்கி (56). அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கடந்த அக்டோபர் 2-ந்தேதி நடந்தது.

    தொடக்கத்தில் அவர் மாயமானதாக கூறப்பட்டது. துருக்கி மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மயக்க மருந்து கொடுத்து கொலை செய்து பின்னர் அவர் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது தெரிய வந்தது.

    இந்த கொலையில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதை சவுதி அரேபிய அரசு மறுத்துள்ளது.

    இதுகுறித்து அரசு வக்கீல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஷாலன் அல்-ஷாலன் அமெரிக்க பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் இந்த கொலைக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இந்த வழக்கை சவுதி அரேபிய உளவுத்துறையின் துணை தலைவர் ஜெனரல் அகமது அல்-அஸ்சிரி தலைமையிலான குழு விசாரித்து வருகின்றனர்.

    இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் 21 பேர் போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்கப் படுவார்கள். அவர்களில் 11 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். #JamalKhashoggi

    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவி(வயது 56). திருப்பூர் ரூரல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    இதையடுத்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ரவி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை சிறையில் இருந்த ரவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சிறை ஊழியர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். 

    இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    திருவண்ணாமலையில் கடந்த 2000-ம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரத்தில், குற்றவாளிகள் 5 பேருக்கு மாவட்ட கோர்ட் விதித்த தூக்கு தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #MadrasHC
    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 2000ம் ஆண்டில், விஷம் கலந்த சாராயத்தை குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயபால், முருகன், காளியப்பன், தில்லைக்கண்ணு, குமார் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட கோர்ட் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டது. 

    மேலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேருக்கும் தலா, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தண்டனையை எதித்து குற்றவாளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் 5 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்தனர். 
    ×