என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP"

    • சிறுமி கொலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விளக்கம் அளித்தார்
    • வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி சீனிவாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார்.

    இவ்வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநர், டிஜிபி-யிடம் கேட்டறிந்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க டிஜிபி-யிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்.

    • தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
    • டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்து விட்டார். காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

    தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.

    இந்தச் செய்தி டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதிகாரிகளை அழைத்து வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு, தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • உடற்கூராய்வின் முடிவிலேயே காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து டிஜிபி விளக்கம்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    அப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்,

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், "உடற்கூராய்வின் முடிவிலேயே காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே 8 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேர் என மொத்தம் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இறந்தவர்களின் உடல்கள் காவல் துறையினரால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உயிரிழந்தவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாகவும், அடுத்து கண் பார்வை பறிபோனதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறுகின்றனர்.

    அரசு தரப்பில் இணை நோய் காரணமாக உயிரிழப்பு என்று கூறிய நிலையில், சிலருக்கு எந்தவித நோய்களும் இல்லை என உயிரிழந்தவர்களின் உறுவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து டிஜிபி தரப்பில் கூறுகையில்,"கள்ளக்குறீச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழப்பா என்பதை கண்டறிய மூத்த போலீஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    காவல்துறையின் உயர்மட்ட அளவில் தீவிர விசரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

    • மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் வசம் ஒப்படைப்பு.
    • மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில் குமார் மாற்றம்.

    மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்து ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
    • அனைத்து மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்தது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர, மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம், மற்றும் விளக்குகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால், மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என ஐ.ஜி.-க்கள், காவல் ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அனைத்து மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இத்துடன் சென்னையில் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காவல் ஐ.ஜி.க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    • சிறை வார்டன் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை.
    • வழக்கின் மீதான விசாரணை வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

    புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது.

    அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார்.

    மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.
    • உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த கல்லுப்பட்டியை சேர்ந்த கலாமணி(45), அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்த மாணிக்கம்(32) 2 பேரும், கடந்த 18-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள். அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.

    மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் 2 வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    • பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.
    • மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் தீ விபத்து சம்பவத்தில் நாசவேலை எதுவும் இல்லை என டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும் கூறிய அவர், "தீ விபத்து நடந்த அன்றே வழக்குப்பதிவு செய்து தடயவியல், மின்சார நிபுணர்கள் விரிவான ஆய்வு நடத்தினர்.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.

    மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ''சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TNUSRB) கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் உறுப்பினரான கல்பனா நாயக் ஐபிஎஸ் அவர்களிடமிருந்து 14.08.2024 அன்று தமிழ்நாடு காவல் துறை இயக்குநர்/காவல் படைத் தலைவர் மற்றும் சென்னை நகர காவல் ஆணையர் ஆகியோருக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

    விரிவான விசாரணை

    அதில் சென்னை எழும்பூரில் உள்ள USRB அலுவலகத்தில் உள்ள தனது அறையில் 28.07.2024 அன்று தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் சட்டவிரோத செயல் மற்றும் நாசவேலை நடந்ததாக சந்தேகிப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி, கடிதம் உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டது.

    தீ விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் தொடர்பான உண்மைகள் மற்றும் தெளிவுகள்

    இது தொடர்பாக, சம்பவம் நடந்த அதே நாளில் F2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரியம் (TANGEDCO), தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினார்.

    நாசவேலை காரணமில்லை

    இதையடுத்து, வழக்கு சென்னை நகர மத்திய குற்றப்பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டது, மேலும் கூடுதல் DCP, CCB-I விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது 31 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன, மேலும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல், தீயணைப்பு சேவைகள் மற்றும் மின் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

    தற்போது, நிபுணர் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான சான்றுகள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது. கூடுதலாக, தடயவியல் அறிக்கையில் மெல்லிய அடுக்கு குரோமடோகிராபி மற்றும் வாயு குரோமடோகிராபி அடிப்படையில், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதேனும் எரியக்கூடிய பொருட்கள் அங்கு கண்டறியப்படவில்லை. அவை இந்த தீ விபத்தில் சம்பந்தப்படவில்லை என்று கூறியுள்ளது.

    பெண் ஏடிஜிபி உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீ விபத்தில் வேண்டுமென்றே தீ வைப்பு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. கல்பனா நாயக்கின் உயிருக்கு எந்தவொரு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தலும் இல்லை.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதில் அளித்தது மேலும் வருத்தமளிக்கிறது.
    • மத்திய மந்திரியையும் இப்படிக் கேவலப்படுத்தினால், நம் மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நிலை என்ன?

    சென்னை:

    திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்குள்ள முருகன் கோவிலுக்கு இந்து அமைப்பினர் செல்வதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற மத்திய மந்திரி எல்.முருகனை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது எல்.முருகன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதன் பிறகு அவரை கோவிலுக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதித்தார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 17-ந்தேதி அன்று மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த மத்திய மந்திரி எல்.முருகனின் பாதுகாப்பை தமிழக போலீசார் தவறாகக் கையாண்டு வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை தமிழக பா.ஜ.க. சார்பில் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

    மத்திய மந்திரி எல்.முருகன் சுப்பிரமணிய சுவாமி கோவில், காசி விஸ்வநாதர் மலைக்கோவில் ஆகிய இரு தலங்களுக்கும் வருகை தரும் பயணத் திட்டத்திற்கு தமிழக போலீசாரிடம் முன் அனுமதி பெற்றிருந்தும், கோவிலின் நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

    மேலே குறிப்பிட்டுள்ள கோவில்களுக்கு உடனடியாக செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்து மத்திய மந்திரி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவரை கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதில் அளித்தது மேலும் வருத்தமளிக்கிறது.

    இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஒரு கட்டத்தில் அவர் விரும்பிய இடத்தில் வழிபடும் உரிமையைப் பறிக்கும் வகையில் போலீசாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அப்பட்டமாகப் பயன்படுத்தியதே ஆகும்.

    தமிழகத்தில் சமீபகாலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நடக்கும் குற்றச்செயல்களால் ஏற்கனவே பீதியில் இருக்கும் பொதுமக்களிடையே இது கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும், மத்திய மந்திரியையும் இப்படிக் கேவலப்படுத்தினால், நம் மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நிலை என்ன?

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    • கப்பலூர் தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல் தெரிவித்தார்.
    • 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கப்ப லுார் தொழிற் பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு கம்பெனியில் கடந்த 15-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம், மதுரை, தல்லா குளம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய தீயணைப்பு நிலைய ஊர்திகள் மூலம் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    தீயணைக்கும் பணியின் போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு நிலைய அலு வலர் பாலமுருகன், சிறப்பு நிலைய அலுவலர் பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக், கல்யாண குமார் ஆகியோர் தீ காயம் அடைந்தனர். 4 பேரும் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மற்றும் அலுவலர்களை தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் வீரர்களின் குடும்பத்தி னரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தீயணைப்பு வீரர்களுக்கு ரூ. 3லட்சத்து 50ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்க ளுக்கு, தீயணைப்பு நிலையங்க ளுக்கு அதிநவீன உபகரண ங்கள் வாங்க திட்டமிட ப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். தீபாவளி பண்டி கைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் கூடுவதால் தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் சிறப்பு குழு இயங்கும்.
    • வதந்தி பரப்புவோர் சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை.

    தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்காகவும் இந்த குழு பயன்படும். இதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழுவினை தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் கணினி திறன் மற்றும் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும். 

    குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்யும் வகையில் இந்த குழு செயல்படும். சாதி மத அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும் வகையிலும் இந்த குழு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழகத்தில் புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படும்.

    நெல்லை:

    தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மருதகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.

    இந்த பயிற்சியினை இன்று டி.ஜி.பி. ரவி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள அலுவலக கோப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம், கடலூர் மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மண்டல அலுவலகம் விரைவில் அமைக்கப்படும். தமிழகத்தில் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 9 இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் தமிழக தீயணைப்பு துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பபட்டு உள்ளது. 15-வது நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு ரூ.343 கோடி தீயணைப்புதுறைக்கு ஒதுக்கப்பட்டு நவீன மீட்புப்பணிக்கான எந்திரங்கள் வாங்கும்பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×