என் மலர்tooltip icon

    மகேந்திரசிங் தோனி | Mahendra Singh Dhoni (MS Dhoni) news updates in Tamil

    • சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர்.

    ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆர்சிபி அணி சார்பில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர். ஆட்டத்தின், 5வது ஓவரின்போது நூர் அகமதின் பந்து வீச்சில் பில் சால்ட் பேட்டிங் செய்தார்.

    அதிரடியாக விளையாடி வந்த பில் சால்டை, கீப்பராக நின்றுருந்த டோனி மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்து வெளியேற்றினார்.

    முன்னதாக, சிஎஸ்கே - மும்பை அணி இடையேயான ஆட்டத்தின்போது சூர்யா குமார் யாதவை இதேபோன்று டோனி அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை.
    • நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் இறுதி ஓவர்கள் வரை சென்று ரசிகர்களுக்கு விருது படைக்கிறது. இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி அமலில் இருக்காது என பல்வேறு தகவல்கள் வந்தது. ஆனால் 2027 வரை இந்த விதி இருக்கும் என பிசிசிஐ தெரிவித்தது.

    இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்பேக்ட் பிளேயர் விதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை வந்தபோது, ஐபிஎல் தற்போது நல்ல நிலையில் உள்ளது. இதற்குமேல் அதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போட்டிகளும் விறுவிறுப்பாகவே உள்ளன என கூறினேன்.

    ஆனாலும் அந்த விதி அமலுக்கு வந்தது. அந்த விதி எனக்கு உதவுகிறதுதான். ஆனாலும் நான் பேட்டிங்கும் செய்கிறேன். கீப்பிங்கும் செய்கிறேன். எனவே நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை. நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு எம்எஸ் தோனி கூறினார்.

    • நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
    • வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.

    மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.

    இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.

    இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.

    கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.

    என தோனி கூறினார்.

    • ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.

    எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.

    இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • 43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் ஆவார்.

    பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். தோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொளவதை ஒட்டி தக் லைஃப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், கமல்ஹாசன், எம்.எஸ்.தோனி ஒருபக்கமும் சிம்பு, ருதுராஜ் மறுபக்கமும் இடம்பெற்றுள்ளனர்.

    • இன்றைய முதல் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதோடு, தற்போது புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்த நிலையில், இன்று ஐ.பி.எல். தொடரில் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதனிடையே போட்டியை ஒட்டி இரு அணிகள் வீரர்களும் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, களத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எம்.எஸ். தோனியை கட்டியணைத்து அன்பை பொழிந்தார். மேலும், அவரின் கைகளை தொட்டுப் பார்த்து உரையாடிக் கொண்டிருந்தார்.

    மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் எம்.எஸ். தோனி கட்டியணைத்துக் கொண்டு, உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்றிரவு நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சீசனில் மெதுவான பந்து வீச்சால் அவருக்கு ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால் அவர் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழி நடத்துகிறார்.



    • மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
    • 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது.

    இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

    முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

    ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக 2 அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியின்போது எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜெயிலர் படத்தின் அலப்பறை கிளப்புறோம் பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4687 ரன்கள் அடித்துள்ளார்.
    • எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார்.

    18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். தோனி முறியடிக்க உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.

    ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.

    ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்.

    ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த ஐ.பி.எல். தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்று பேட்டி ஒன்றில் பிராவோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த பிராவோ, "கே.கே.ஆர். vs சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினால், கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். நான் அந்த அணியில் தான் ஆலோசகராக இருக்கிறேன்.

    இதனை எம்.எஸ்.தோனி புரிந்துகொள்வார். எனக்கு கொல்கத்தா அணியில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்னபிறகு தான் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனி மேல் வைத்திருக்கும் மரியாதை" என்று தெரிவித்தார்.

    • அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் தோனி நடித்துள்ளார்.
    • அந்த படத்தில் ரன்பீர் கபூரின் கெட்டப்பை தோனி அப்படியே பிரதிபலித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் தோனி நடித்துள்ளார்.

    மோட்டாரட் என்ற நிறுவனத்தின் விளம்பர படத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் படத்தின் ஒரு காட்சியை உருவாக்கியுள்ளார். அந்த படத்தில் ரன்பீர் கபூரின் கெட்டப்பை தோனி அப்படியே பிரதிபலித்துள்ளார். ரன்பீர் அந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் ரண்விஜய் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    எம்.எஸ். தோனி ஒரு காரிலிருந்து வெளியே வந்து தனது நண்பர்களுடன் ஒரு கேங்க்ஸ்டர் பாணியில் சாலையைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரன்பீர் கபூர் அனிமல் திரைப்படத்தில் செய்ததைப் போலவே தோனி செய்துள்ளார்.

    ஆனால், தோனியின் வீடியோவில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அவர் எலக்ட்ரிக் சைக்கிளுடன் சாலையைக் கடக்கிறார். இந்த வீடியோவில் வாங்கா மற்றும் தோனி இடையே உரையாடலும் நடந்தது. மேலும், இயக்குனர் தோனியின் நடிப்பைப் பாராட்டினார். மேலும், அவரது ஸ்டைல் அனைவருக்கும் பிடிக்கும் என்று இயக்குநர் கூறினார். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    • எம்.எஸ்.தோனி தலைமையில் திசாரா பெரேரா விளையாடியுள்ளார்.
    • ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடினார்.

    கொழும்பு:

    ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பையையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளார்.

    எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே. கேப்டனாக இருந்தபோது பல இளம் வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். தொடர்களில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா சமீபத்திய அளித்த பேட்டியில் பேசியதாவது:

    சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும்போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார். அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    நான் புனே அணிக்காக விளையாடிய போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். அந்தச் சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள் எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது.

    அப்போது என்னிடம் வந்த எம்எஸ், 'பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன். அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார்.

    அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள், கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடித்தேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார்.

    தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார் என தெரிவித்தார்.

    ×