என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster Response Team"

    • மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 475 பேர் வந்துள்ளனர்.

    ஏற்கனவே 8 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரு குழுக்கள் வர உள்ளன. மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 41 இடங்களில் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 பேர் தங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 9 முகாம்களில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 4,056 பேர் தங்கியுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 235 இடங்களில் மழை நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் தாமிரபரணி நீர் புகுந்துள்ளது. சில இடங்களில் குளங்கள் உடைந்து உள்ளன. அந்தப் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாநகரைப் பொருத்தவரையில் மேலப் பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.

    சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக் கூடிய இடங்களில் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • 4 ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து உணவு வினியோகித்து வருகின்றன.
    • அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரையும் மீட்டனர்.

    தூத்துக்குடியில் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் ஆபத்தான அளவுக்கு தண்ணீர் ஓடி கொண்டிருக் கிறது. இதனால் யாரும் அந்த கிராமங்களுக்குள் செல்ல முடியவில்லை.

    154 ராணுவ வீரர்கள் களத்தில் இருக்கிறார்கள். இது தவிர பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    ராணுவ வீரர்கள் சிறு சிறு ரப்பர் படகுகளில் உணவு, தண்ணீரை கொண்டு கிராமங்களில் வினியோகிக்கி றார்கள். ஆபத்தான இடங்களி லும் கயிறு கட்டி தண்ணீருடன் போராடி பணி செய்கி றார்கள். ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் உயிரை யும் பணயம் வைத்து சென்று உதவி வருவதை பொது மக்கள் பாராட்டுகிறார்கள்.

    தரை வழியாக ராணுவ வீரர்கள் உதவி வரும் நிலை யில் கடற்படை மற்றும் விமானப் படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர் களும் தொடர்ந்து உணவு வினியோ கித்து வருகின்றன.

    ஹெலிகாப்டர் சத்தம் கேட்டால் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தாழ்வாக பறந்து உணவு பொட்ட லங்களை போடுகிறார்கள்.

    ஒரு இடத்தில் காலியான பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நின்றனர். அந்த பகுதியில் காற்றின் வேகமும் குறைவாக இருந்ததால் கைக்கு எட்டுவது போல் ஹெலிகாப்டரை தாழ்வாக பறக்க செய்து வாசலில் இருந்த படி வீரர் ஒருவர் உணவு பொட்டலங்களை வழங்கினார்.

    வைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று மட்டும் 3.2 டன் உணவு பொட்டலங்களை வினியோகித்தனர். இன்றும் உணவு வினியோகத்தை தொடர்ந்து அவசர மருத்துவ உதவி தேவைப் பட்ட முதியவர் ஒருவரையும், கர்ப்பிணி பெண் ஒருவரை யும் மீட்டனர்.

    • நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
    • பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதற்கிடையே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.

    இன்று 2-வது நாளாக பெங்களூரு, குடகு, ஹாசன் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. யஷ்வந்த்பூர், வசந்தநகர், சாந்தி நகர், ஹெப்பாலா, சதாசிவநகர், ராஜாஜிநகர், விஜயநகர், பனசங்கர், மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது .

    பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள நெலமங்களா பகுதியிலும், பீன்யா, தாசரஹள்ளி, பாகல்குண்டே, ஷெட்டி ஹள்ளி மல்லசந்திரா உள்ளிட்ட பல இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

    குறிப்பாக குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் மொத்தம் 28 தாலுகாக்களில் மலைகளில் இருந்து பாறைகள் பெயர்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இது தொடர்பாக பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறையில் 32 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணியாளர்கள் உடனடியாக 18 இடங்களில் மரங்களை அகற்றினர்.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் 6 மாவட்டங்களில் பருவமழை பேரிடர்களை தடுக்க வருவாய் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறையின், பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

    • கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.

    விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.

    உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • 13 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளன.
    • பொது மக்கள் TN Alert செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை (27-ந்தேதி) கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சில இடங்களிலும் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்படக்கூடும்.

    மேலும், கனமழையினை எதிர்கொள்ளும் வகையில் பின்வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன

    22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளு மாறு மாவட்ட கலெக்டர்க ளுக்கு அறிவுரை வழங்கப் பட்டு உள்ளது.

    மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன் வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்களுக்கும் 23-ந்தேதி அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன.

    மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ், (94999 56205, 88006 56753)

    மயிலாடுதுறை மாவட் டத்திற்கு கவிதா ராமு, (90032 97303)

    திருவாரூர் மாவட்டத் திற்கு காயத்ரி கிருஷ்ணன், (73388 50002)

    கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ. ராமன் (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கவனிக்கின்றனர்.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களி லும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    இதுதவிர, தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.

    மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பின்வரும் எண்களில் தங்களது புகார் களை பதிவு செய்யலாம்.

    மாநில அவசர கால செயல்பாட்டு மையம் கட்ட ணம் இல்லா தொலைபேசி எண்-1070, வாட்ஸ்அப் எண்-94458 69848

    நாகப்பட்டினம்-கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233

    பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்க ளது புகார்களை தெரிவிக்கலாம்.

    மேலும், கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ளபாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், விவசாய பெருமக்கள், பயணம் மேற்கொள்ள திட்ட மிட்டிருப்போர் கனமழை எச்சரிக்கைக்கு ஏற்றவாறு தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்து மாறும் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
    • 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.


    தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.

    மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

    மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

    அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

    மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.

    இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.

    மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

    ×