என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ED"

    • கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரான ரவீந்திரன் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
    • ரவீந்திரனிடம் அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் லைப் மிஷன் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரான ரவீந்திரன் நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
    • மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கம் என கெஜ்ரிவால் காட்டம்

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீது நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக வெளியே வர முடியாத நிலை உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    மணீஷ் சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. சிபிஐ சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பணமும் சிக்கவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. விசாரணை முடிந்து மணீஷ் நாளை விடுவிக்கப்பட்டிருப்பார். இந்நிலையில் இன்று அமலாக்கத்தறை அவரை கைது செய்தது. ஒவ்வொரு நாளும் புதிய போலி வழக்குகளை உருவாக்குவதன் மூலம் மணீஷ் சிசோடியாவை உள்ளே வைத்திருப்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், மதுபான கொள்கையை திரும்பப் பெற்றிருக்காது என்று பாஜக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில்வே பணியிட ஒதுக்கீட்டில் மோசடி செய்து நிலம் பெற்ற வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவியிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பீகாரில் இன்று லாலு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    பீகாரில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. லாலு கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சோதனை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
    • ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதேபோன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், நேற்றே அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது அவரிடம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

    மணீஷ் சிசோடியா  விசாரணைக் காவலுக்கு அனுப்பப்பட்டதால், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

    • கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

    இதற்கிடையே இந்த வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகளும் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ந்தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

    டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது வீட்டு முன்பு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அதே போல் அமலாக்கத்துறை அலுவலகம் அருகேயும் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    காரில் இருந்து இறங்கிய கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்றார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    • டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 9 மணிநேரம் விசாரணை நடந்து முடிந்தது.
    • வரும் 16-ம் தேதி ஆஜராக கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

    இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் மகளும், பாரத ராஷ்டிரீய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ம் தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ம் தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஏறக்குறைய அமலாக்கத்துறை 9 மணிநேரம் அவரிடம் விசாரண நடத்தி, கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டது. அதன்பின் அவர் தனது வாகனத்தில் இரவில் விசாரணை முடிந்து புறப்பட்டுச் சென்றார்.

    இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை பணமோசடி வழக்கில் வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கவிதாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    • இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.
    • காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாக வாதம்

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மணீஷ் சிசோடியாவிடம் இன்னும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், எனவே இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது.

    'அமலாக்கத்துறை இதுவரை என்ன செய்தது? 7 மாதங்களாக வழக்கை விசாரித்து, மேலும் கஸ்டடி கேட்டால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் என்ன கிடைத்தது என்பதை அவர்கள் காட்ட வேண்டும். சிபிஐ நடத்த வேண்டிய விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதால் காவலை நீட்டிப்பதை நான் எதிர்க்கிறேன். அமலாக்கத்துறையானது குற்றச்செயல்கள் தொடர்பான வருமானத்தை மட்டுமே விசாரிக்க முடியும், குற்றத்தை அல்ல' என்று சிசோடியாவின் வழக்கறிஞர் வாதாடினார்.

    அதற்கு பதிலளித்த அமலாக்க இயக்குனரகம், 'சிபிஐ விசாரித்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சிசோடியா புகார் அளித்தார். எனவே, அவரிடம் அதிக நேரம் விசாரிக்கவில்லை' என்று தெரிவித்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சிசோடியாவின் கஸ்டடியை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிசோடியா தனது வீட்டு செலவினங்களுக்காக காசோலையில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 540 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராம் கோபால் வர்மா, கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் சுனில் அகர்வால் உள்ளிட்டவர்கள் பலரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.

    • மதுபான கொள்கையில் ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
    • ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி :

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மதுபான கொள்கை ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மதுபான கொள்கையில் வியாபாரிகளுக்கு சாதகமான அம்சங்களையும், சலுகைகளையும் சேர்த்து, பிரதிபலனாக ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான சதி என்று ஆம் ஆத்மி கட்சி கூறி உள்ளது. இருப்பினும் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் எனவும் தெரிவித்திருக்கிறது.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி கட்சி போன்று கடந்த 75 ஆண்டுகளில் எந்த கட்சியும் குறி வைக்கப்பட்டதில்லை. ஏனென்றால் எங்கள் கட்சிதான், மக்களின் ஏழ்மையை ஒழித்து அவர்களுக்கு கல்வி புகட்டுவோம் என்று நம்பிக்கை அளித்துள்ளது. இந்த நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்று நினைத்துத்தான் எங்களை குறி வைக்கிறார்கள்.

    சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். மணிஷ் சிசோடியா 14 செல்போன்களை அழித்து விட்டதாக அவர்கள் தவறாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல. அவற்றில் 4 செல்போன்கள் அமலாக்கத்துறையிடமும், ஒன்று சி.பி.ஐ.யிடமும் உள்ளன. பிற செல்போன்கள் எல்லாம் செயல்பாட்டில் உள்ளன. அவை தன்னார்வலர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

    ரூ.100 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே, அப்படியென்றால் அந்த பணம் எங்கே போனது? 400-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றன. பணம் எங்கே? பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக சொல்கிறார்கள். கோவாவில் ஒவ்வொரு வியாபாரியிடமும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    டெல்லி சட்டசபையில் கடந்த மாதம் நான் ஊழல் பற்றி பேசியபோது, அடுத்த குறி நான்தான் என்று கூறினார்கள். இப்போது சம்மன் வந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கெஜ்ரிவால் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், "பொய் சாட்சியங்களையும், தவறான ஆதாரங்களையும் கோர்ட்டுகளில் தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடருவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வும் பதிலடி கொடுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுபான கொள்கை ஊழலின் பிதாமகன் கெஜ்ரிவால்தான். கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள்தானே மதுபான கொள்கை ஊழல் சதிக்கான கூட்டத்திற்கு தலைமை தாங்கினீர்கள்? பிறகு ஏன் உங்கள் மீது குற்றம் சுமத்தக்கூடாது? மதுபான வியாபாரிகளுக்கும், உங்களுக்கும் என்ன உறவு என்பதை நீங்கள் பொதுவெளியில் சொல்லித்தான் ஆக வேண்டும். உங்கள் மதுபான கொள்கை சிறப்பானது என்றால் பிறகு ஏன் அது திரும்பப்பெறப்பட்டது?சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது கெஜ்ரிவாலுக்கு உதறல் எடுக்கத்தொடங்கி இருக்கிறது. உங்களுக்கு பயம் இல்லை என்றால் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராகுங்கள். எல்லாம் தெளிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
    • கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில், கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.

    • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.
    • சோதனையின் போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

    லாட்டரி அதிபர் மார்டின் மீது அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவில் இருந்து கோவை வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்டினுக்கு சொந்தமான வீடு உள்பட மூன்று இடங்களில் சோதனையை துவங்கினர்.

    சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது. சோதனையின் போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் வேறு யாரும் உள்ளே நுழையாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

     

    மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்திருக்கும் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    மார்டின் மற்றும் அவரின் இதர நிறுனங்களுக்கு சொந்தமான ரூ. 457 கோடி மதிப்பிலான அசையும்/அசையா சொத்துக்கள், வைப்பு தொகை, மியூச்சுவல் ஃபண்ட், அசையா சொத்து பத்திரங்கள் வடிவில் இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இதில், ரூ. 157.7 கோடி மதிப்பிலான வைப்புத் தொகை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்கள், ரூ. 299.16 கோடி மதிப்பிலான அசையா சொத்து பத்திரங்கள் அடங்கும். 

    • சோதனையின் போது ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
    • உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகை முடக்கப்பட்டது.

    இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஓட்டல் மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதில் பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிறுவனர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,

    "உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கென்று எவ்விதமான அசையா சொத்துக்களும் கிடையாது."

    "அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள ரூ. 36.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அமலாக்கத்துறை முடக்கிய ரூ. 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களை கொடுத்து, அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்." 

    ×