search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity tariff increase"

    • மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும்.
    • தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்தும் இன்று மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அ.தி.மு.க.வினர் தங்கள் கழுத்தில் மின்சார ஒயர்களை மாட்டிக் கொண்டும், அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 முறை மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தோடு, அபராத கட்டணம், நிலை கட்டணம், மின்விலை ஈடுகட்டுவதற்கான கூடுதல் வரி கட்டணம், காலதாமத கட்டணம் என்ற தலைப்புகளிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறது.

    மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 150 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி எதிர்காலத்தில் தனியாருக்கு மின்துறையை தாரை வார்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கவர்னர் இப்பிரச்சினையில் தலையிட்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமளா, மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • சிறு, குறு தொழில் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு
    • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டையிலும் நேற்று மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் சந்திரகாசன், செயலாளர் முரளி, துணைத் தலைவர் புனித வேல், பெல் அன்சிலரி அசோசியேசன் தலைவர் வாகிசன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு , சோளிங்கர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்களையும் நேரில் சந்தித்து கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதில் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. இவற்றில், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன.
    • தமிழக அரசு கண்டுகொள்ளாததால், தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பல்லடம்: 

    திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. இவற்றில், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு மற்றும் மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், சமீப நாட்களாக, விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காடா துணி உற்பத்தி சார்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு கண்டுகொள்ளாததால், தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:- பஞ்சு, நுால் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட வங்கி கடனுக்கான வட்டி விகிதம், 6.25-ல் இருந்து, 9.75 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் பரிதவித்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், தமிழக அரசு, இதுவரை இல்லாத அளவு, 430 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தியுள்ளது தொழிலை மிகவும் பாதித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால், துணிகளின் விலையை நிர்ணயிக்க முடியாமல், 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி நடந்து வருகிறது. உற்பத்தியை குறைத்துள்ளதால், தொழிலாளர்கள் பலரை பண்டிகைக்கு முன்னதாவே ஊருக்கு அனுப்பி விட்டோம். வரும் நாட்களில், மீதமிருக்கிற தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்வதால், தீபாவளி பண்டிகைக்குப் பின் தொழிலின் நிலை எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது.
    • தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வை குறைக்க கோரி சென்னையில் அக்டோபா் 16 -ந் தேதி உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளாது.

    இதுகுறித்து, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு மற்றும் நாடா இல்லா தறி நெசவாளா் சங்கத்தின் (சிஸ்வா) ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளா்கள் அண்டை மாநிலங்களுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சோலாா் உள்பட மின் கட்டணங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    ஆனால், இங்கு எங்களது சொந்த கட்டடங்களின் மேல் சோலாா் அமைத்து பயன்படுத்தவும் கட்டணம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது. தற்போது மின் கட்டண உயா்வால் தொழில்கள் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவன ஈா்ப்பு கோரிக்கையில் கொமதேக., பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கேட்ட கேள்விக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் தொழில் துறைக்கு எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது.ஏற்கெனவே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதையே மீண்டும் சட்டப் பேரவையில் அமைச்சா் அறிவித்துள்ளாா்.

    எனவே, இப்பிரச்சனையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தொழில் துறையினரைப் பாதுகாக்க வேண்டும். அதுவரை தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் போராட்டங்கள் தொடரும்.

    இந்நிலையில் அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அக்டோபா் 16 -ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும். இதில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    • சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை மின்சார பயன்பாட்டில் கிலோவாட்டுக்கான கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.154ஆக உயர்த்தப்பட்டது.

    மேலும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண சுமையிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மீண்டு வர முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தையும், பீக் அவர்ஸ் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும். 3பி மின் கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்ட ண நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வோர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை ( பல ஆண்டு கட்டணம்) உடனடியாக ரத்து செய்து, 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

    எல்டி கட்டண முறையில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 4ம் கட்டமாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காங்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதன் காரணமாக சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    • தமிழக அரசின் மெத்தன போக்கால் திருப்பூரின் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கனகசபாபதி, பொது செயலாளர் முருகானந்தம், மேற்கு மாவட்ட பிரபாரி கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புது பஸ் நிலையம் மற்றும் டவுன் ஹாலுக்கு தியாகிகள் பெயர் சூட்ட வேண்டும். பல்லடம் புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனே துவக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய பூ மார்க்கெட்டை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    திருப்பூர் வடக்கு பகுதியில் பெண்களுக்கு தனி மேல்நிலைப்பள்ளி, பெண்கள் கல்லூரி, அதிநவீன புறநோயாளிகள் மருத்துவமனை துவக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டம் மற்றும் அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் இடம்பெற வேண்டும். தமிழக அரசின் மெத்தன போக்கால் திருப்பூரின் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரோடுகள் தரமாக அமைக்காதபட்சத்தில், பா.ஜ.க, வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. தரமாக அமைக்க வேண்டும்.

    பின்னலாடை தொழில்துறையினருக்கு தேவையான மூலப்பொருள் தடையின்றி கிடைக்க வேண்டும். தமிழக அரசு மாநில அளவிலான பருத்தி கழகம் அமைத்து மாநிலத்தில் விளையும் பருத்தியை முழுமையாக வாங்கி ஜவுளித்துறைக்கு தடையின்றி வினியோகிக்க வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளா் சங்க நிா்வாகிகள் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளித்தனா்.இது குறித்து அவா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின் கட்டண உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இத்தொழிலில், மின் நுகா்வு என்பது மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகம்.

    எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், 8 மணி நேர பீக் ஹவா் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ. 7.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், யூனிட்டுக்கு மேலும் ரூ.1.88 உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணத்தை கிலோ வாட்டுக்கு ரூ.35இல் இருந்து ரூ.150ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

    ஹெச்.டி. இணைப்புக்கு நேரடி கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசாவும், பீக் ஹவா் கட்டணம் 8 மணி நேரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. நிலையான கட்டணம் ரூ. 350இல் இருந்து ரூ.550ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணமானது யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்டுதோறும் 6 சதவீத கட்டண உயா்வு என்பது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. இது போன்ற காரணங்களால் தொழில் மிகக் கடுமையான பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.

    சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறிகளைபோல, சிறு, குறு தொழில் வரிசையில் நாங்கள் உள்ளோம். எனவே மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன், விரைவில் மின் துறை அமைச்சருடன் பேசி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.

    • 2024 தேர்தலில், பா.ஜ., வை எதிர்த்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும்.
    • வடக்கு மாநகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாநகர மா.கம்யூ., சார்பில், சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம், எம்.எஸ்., நகரில் நடந்தது. வடக்கு மாநகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாலகிரு ஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மத நல்லிணக்கத்துக்கு, சமூக நல்லிணக்கத்துக்கு யார் இடையூறு ஏற்படுத்தி னாலும், அது எத்தகைய சக்தியாக இருந்தாலும், மா.கம்யூ., எதிர்த்துநிற்கும்.

    விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது; நுால் விலை உயர்ந்து ஜவுளித்தொழில் முடங்கியுள்ளது, எரிபொருட்கள் விலை உயர்ந்துகொண்டே செல்கி ன்றன. இதற்கு எதிராக போராட யாருமில்லை.

    வரும் 2024 தேர்தலில், பா.ஜ., வை எதிர்த்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும். மத்திய அரசுக்கு அடிபணியும் வகையில், மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது. இதனால், மக்கள் மத்தியில் தி.மு.க., அதிருப்தியை சம்பாதிக்கநேரிடும். பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தை இது, பலவீனப்படுத்தும். இவ்வாறு, அவர் பேசினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் எம். எஸ் .எம் .ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
    • ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம். எஸ் .எம் .ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில்மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் பிரனேஸ்,அன்புராஜ், முருகேஷ் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மங்கலம் பகுதி அ.தி.மு.க.வினர் உடுமலை ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர். மங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவரும்,அதிமுக. முன்னாள் மங்கலம் ஊராட்சி க செயலாளருமான சுப்ரமணியம், முன்னாள் பாசன சபை தலைவர் சௌந்தரராஜன், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் முத்துக்குமார், எம்.செட்டிபாளையம்-ஜெயம் என்.மகேந்திரகுமார்,நல்லிநகர் கிளைசெயலாளர் அங்காளம்மன் நடராஜ், சின்னப்புத்தூர் காளியப்பன்

    , ஜே. ஜே. நகர் சரவணன், மகேஷ் குமார், பெரியபுத்தூர் கோபால் ,சுப்ரமணி, மேட்டுபாளையம் மணி, ராமர், ஆனந்த், புக்குளிபாளையம் துரை, மூர்த்தி , தமிழ் , கண்ணன் , மங்கலம் எம்.ஆர்.எம்.பாபு, நாசர், மன்சூர், ரகுமான்அகமது, கத்தாபி, இந்தியன் நகர் சரவணன், ஆரோக்கியசாமி, ரோஸ் கார்டன் பெயிண்டர் சுப்பிரமணி , எம்ஜிஆர். சக்தி, செட்டிபாளையம் சுந்தரமூர்த்தி, கருப்புசாமி, லோகநாதன், ஆனந்தன், பத்மநாதன், வெங்கடேஸ்வரா நகர் ராமர், அஜித் கோவிந்தன், சத்யா நகர் ரவி, பாரதி நகர் பாலு, சுல்தான்பேட்டை ஆறுமுகம், மூர்த்தி, எம். மூர்த்தி, நீலி பிரிவு வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று மாலை 3மணிக்கு திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    • தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
    • லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மின் கட்டண உயா்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளா் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தோ்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயா்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை அமல்படுத்தாமல் தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. விசைத்தறி தொழில் ஏற்கெனவே நலிவடைந்துள்ள நிலையில் இந்த மின் உயா்வால் விசைத்தறியாளா்கள் பாதிப்படைவா்.எனவே, லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×