என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East Constituency"

    • அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்னும் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் பூத்து கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் துர்திஷ்டவசமானது என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கை காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு என பல பொருட்கள் விலை உயர்ந்து விட்டன. இதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்றார்.

    இதில் பகுதிச்செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயராஜ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்கல் மாவட்ட இணை செயலாளர் மாதையன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வினர் இந்த தொகுதியில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 6 மாத காலத்தில் 1973-ல் திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றி 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் ஆவார். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் துணிச்சலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    • தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 3½ ஆண்டுகளில் 3-வது தேர்தலை சந்திக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? இல்லை தி.மு.க. களம் இறங்குமா? என்பது 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் பலத்த கேள்வியாகவே இருந்து வருகிறது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகனான சஞ்சய்க்கு மேல்சபை எம்.பி. பதவியை கொடுத்து விட்டு தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். இதுபற்றி விரைவில் முடிவு எடுத்து போட்டியிடும் வேட்பாளரையும் அறிவிக்க உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான வீரகுமார், ஆற்றல் அசோக் குமார் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். நிர்வாகிகளுடன் கலந்து பேசி அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
    • 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    கோவை :

    கோவையில் முன்னாள் எம்.பி. மோகன் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தாரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் தி.மு.க. கூட்டணி போட்டியிடும்.

    * ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    * 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றார். 

    • தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் யாருக்கு சீட்டு கிடைக்கும்.
    • இரு கட்சியினர் மட்டுமல்ல தொகுதி மக்களும் காத்திருக்கின்றனர்.

    பெருந்துறை:

    2008ல் தொகுதி வரையறை செய்யப்பட்ட போது ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டு 2011ல் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியில் வேட்பாளராக களம் இறங்கிய தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

    2016-ல் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய வி.சி.சந்திரகுமார் தி.மு.க. வேட்பாளராகவும், கே.எஸ்.தென்னரசு அ.தி.மு.க. வேட்பாளராகவும் போட்டி யிட்டதில் தென்னரசு வெற்றி பெற்றார்.

    2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார். 2023-ல் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவெரா திடீரென காலமானார்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இளங்கோவனும் காலமான தால் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே தொகுதிக்கு 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெற போகிறது.

    இதுவரை நடைபெற்ற 4 தேர்தலில் தி.மு.க. 2 முறையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 முறையும் போட்டியிட்டதில் 1 முறை தி.மு.க.வும், 2 முறை காங்கிரசும், ஒரு முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

    2023 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    இந்நிலையில் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்காமல் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

    அண்மையில் ஈரோடு வந்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதை கலந்து பேசி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிச் சென்றார்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்பது உறுதியாகாத நிலையில் ஈரோடு கிழக்கில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக இப்போதே தி.மு.க.வின் முக்கிய அரசியல் கட்சியினர் மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

    இருப்பினும் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடுவதாக இருந்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-கடந்த 2023 இடைத்தேர்தலில் தனது உடல்நிலையை காரணம் காட்டி, தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.

    ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட்டு கேட்டு தான் முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தேன் என்று கூறிச் சென்றார்.

    ஆனால் இளங்கோவன் மீது கொண்ட அன்பினால், இந்த முறை நீங்களே வேட்பாளராக நில்லுங்க! உங்களை ஜெயிக்க வைப்பது எங்கள் கடமை" எனக் கூறி இளங்கோவனை போட்டியிட வைத்தார்.

    எதிர்பார்த்தபடியே இளங்கோவன் வெற்றி பெற்றார். எதிர்பாராத வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால் இந்த முறை தந்தை பெரியாரின் குடும்ப வழி தோன்றலான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட்டு கொடுக்க வாய்ப்புள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் சஞ்சய் சம்பத் மற்றும் அவரது தாயார் வரலட்சுமி இளங்கோவன் உள்ளிட்ட குடும்பத்தினர் இளங்கோவனின் மறைவினால் ஏற்பட்ட துக்கத்தில் இருந்து முழுமையாக இன்னும் மீளவில்லை.

    தமிழக அரசியலில் பெரியாரின் வழித் தோன்றலின் அடுத்த வாரிசாக கொள்ளு பேரன் சஞ்சய் சம்பத் உள்ளார். அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என இளங்கோவன் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ள காங்கிரசார், தி.மு.க. தலைமையிடம் கேட்டு வருகின்றனர்.

    ஆனால், தி.மு.க.வில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் நிலையில் உள்ளவர்கள் காங்கிரசுக்கு 2 முறை வாய்ப்பளிக்கப்பட்டு விட்டதால் இம்முறை இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரையே களம் இறக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு பதிலாக ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. சீட்டு தருவதாகவும் பேசி வருகிறார்கள்.

    ஆனால், தமிழக அரசியலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தார். இந்த முறை வாய்ப்பளிக்காவிட்டால் அரசியலில் இளங்கோவன் குடும்பத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது போல் ஆகும்.

    சஞ்சய் சம்பத்தை தவிர ஈரோடு கிழக்கில் வலுவான காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் மேலிடத்தில் கூற வாய்ப்புள்ளது. எனவே சஞ்சய் சம்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் போட்டிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவு காங்கிரஸார் கூறுகின்றனர்.

    ஒருவேளை சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான கோபி, முன்னாள் மாநகர் மாவட்டத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான இ.பி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தார் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டால் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் (தி.மு.க.) தான் போட்டியிட வேண்டும் என தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதற்கு தகுந்தபடி ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், தற்போதைய ஈரோடு தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் விவேக், மாநகரச் செயலாளர் சுப்பிரமணி, எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் உள்பட தி.மு.க.வினர் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.

    இத்தொகுதியை பொருத்தவரை முதலியார் சமூக வாக்குகள் அதிகம் உள்ளதால் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அந்த சமூகத்தை சேர்ந்த வி.சி.சந்திரகுமார், செந்தில்குமார், திருவாசகம், டாக்டர் விவேக் ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

    தே.மு.தி.க.வில் எம்.எல்.ஏ.வாக இருந்த வி.சி.சந்திரகுமார் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்ததும் 2016ல் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தபின் அவருக்கு மறு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    அண்மையில் நடைபெற்ற சந்திரகுமார் மகள் திருமணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தனர். கட்சித் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் தனக்கு சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறார்.

    அதேசமயம் நீண்ட காலமாக கட்சியில் உழைத்து வரும் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் இந்த முறை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

    கடந்த 2023-ம் ஆண்டு செந்தில்குமாரின் அண்ணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 555ஐ வழங்கி ஸ்டாலினை ஆச்சரியப்பட வைத்தார்.

    அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் குமாருக்கு உரிய நேரத்தில் உரிய பதவி தேடிவரும். அதுவரை காத்திருக்குமாறு கூறிச் சென்றார். எனவே இந்த முறை தி.மு.க. சார்பில் தனக்கு தான் எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கும் என்று செந்தில்குமார் எதிர்பார்க்கிறார்.

    இதேபோல செந்தில்குமாரின் அண்ணன் மகனான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

    டாக்டர் விவேக், மருத்துவ அணியின் மாவட்ட அமைப்பாளராக கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருவதால் தனக்கு தலைமை வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கிறார்.

    மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இரு கட்சியினர் மட்டுமல்ல தொகுதி மக்களும் காத்திருக்கின்றனர்.

    • 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு வராது. தேர்தலில் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒரு தணிக்கை குழு என மொத்தம் 5 வகையான குழுக்கள் செயல்படுகின்றன.

    இதில் நிலை கண்காணிப்பு குழு மட்டும் 10-ந் தேதி முதல் செயல்படும். மற்ற குழுக்கள் தற்போது இருந்தே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

    தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது. அப்படி ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.

    கடந்த முறை மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது.
    • வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது. இது தவிர 3 நிலை கண்காணிப்பு குழு, ஒரு கணக்கு தணிக்கை குழு ஆகியவை வேட்பு மனு தாக்கல் செய்யும் 10-ந் தேதி முதல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பறக்கும் படைக்குழுவில் எக்ஸிக்யூட்டிவ் மேஜிஸ்ட்ரேட் நிலை அதிகாரி ஒருவர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், ஒரு வீடியோ கிராபர் உள்ளனர். தலா 8 மணி நேரம் என 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனை சாவடி, காளை மாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மேற்கொண்டார்.

    இதில், முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறதா, ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறதா, பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை காவலர்கள் சோதனை செய்வதை தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் உறுதி செய்தார். விடிய விடிய இந்த வாகன சோதனை நடைபெற்றது. மேலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது.
    • காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கிற்கு 8 நாட்கள் என்றாலும் பொங்கல் அரசு விடுமுறை நீங்கலாக வருகிற 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 13-ம் தேதி (திங்கட்கிழமை) 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
    • மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் வரும் பிப்ரவரி 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டது.

    இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர்.மணிஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    கட்டுப்பாட்டு அறையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் கண்காணிப்பு பணிகள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் பதிவு செய்து அவற்றிற்கு நடவடிக்கை எடுப்பது, பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பரிசுகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் நடைபெறும்.

    மேலும் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு இங்கிருந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பறக்கும் படைக்கு உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவி த்தனர். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்த போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனான இவர் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமகன் ஈவேரா திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.

    அவர் 66 ஆயிரத்து 233 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 14-ந்தேதி அவர் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காலியானது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (10-ந்தேதி) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 17-ந்தேதி ஆகும்.

    என்றாலும் பொங்கல் விடுமுறை வருவதால் 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. சார்பில் இந்த தொகுதியில் களம் இறங்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் விரும்பினார்கள். இதற்காக இந்த தொகுதியில் கள ஆய்வு பணியினை மேற்கொண்டனர். ஆனால் அது காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் தாங்கள் களம் இறங்க விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

    மேலும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும், காங்கிரஸ் நிர்வாகிகளும் சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் தேர்வாகும் வேட்பாளர் பற்றி காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் முதல்கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்காளர் பட்டியலை வைத்து ஆய்வு செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கடந்த முறை வாக்காளிக்காதவர்களை குறி வைத்து தி.மு.க.வினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் சந்திர குமார் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று தெரியவந்து இருப்பதால் அங்கு களம் இறங்கப்போகும் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் அவரது பெயரை வேட்பாளராக பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இளங்கோவனின் மகன் சஞ்சய்சம்பத்தை வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஆதரிக்க தயார் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    அதுபோல தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவது தொடர்பாக மூத்த தலைவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒருசாரார் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    சிலர் மட்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறி வருகிறார்கள். வருகிற 11-ந்தேதி இதில் எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுத்து அறிவிக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்துகிறது. தோழமை கட்சிகளுடன் பேசிய பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
    • விக்கிரவாண்டியை போல இந்த தேர்தலையும் அ.தி.மு.க. புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடக்க தொடங்கி உள்ள நிலையில் அ.தி.மு.க. போட்டியிடுமா? போட்டியிடாதா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தமிழக சட்டசபைக்கு 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த 2 இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த போது தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் நேரடி பலப்பரீட்சை நடந்தது. தி.மு.க. தலைவர்கள் அங்கு வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்பதை கவுரவ பிரச்சனையாக மனதில் கொண்டு தீயாக வேலை பார்த்தனர்.

    இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இளங்கோவன் 66.82 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 25.75 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.

    இந்த தோல்வி காரணமாக அ.தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், "தி.மு.க. கூட்டணியினர் அதிகார பலத்தையும், பணப் பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்று விட்டனர்" என்று கூறினார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது அ.தி.மு.க. புறக்கணித்தது. தேர்தல் நியாயமாக நடக்காது. பணத்தை அள்ளி வீசி வாக்காளர்களை திசை திருப்புவார்கள் என்று கூறி அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டது.

    விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் அதிகம் என்பதால் பா.ம.க.வை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் புறக்கணிப்பு முடிவை அ.தி.மு.க. மேற்கொண்டது. எடப்பாடி பழனிசாமியின் அந்த முடிவு மாறுபட்ட விமர்சனங்களை உருவாக்கியது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் தேர்தல் வந்து இருப்பதால் அ.தி.மு.க. என்ன முடிவு எடுக்கும் என்ற சூழல் நிலவுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்க 11-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர்.

    பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஈரோடு கிழக்கில் மீண்டும் தோல்வியை தழுவினால் அது கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் இமேஜை பாதிக்கும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

    எனவே விக்கிரவாண்டியை போல இந்த தேர்தலையும் அ.தி.மு.க. புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

    ஆனால் சில மூத்த தலைவர்கள் அ.தி.மு.க. கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் வன்னியர்கள் அதிகம் இருந்ததால் அங்கு கள நிலவரம் வேறுவிதமாக இருந்தது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒப்பிடக்கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

    மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்கு நியாயமான எந்த காரணமும் தற்போது இல்லை என்றும் கூறி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றால் 2026 சட்டசபை தேர்தலை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தலைவர்களின் இந்த மாறுபட்ட கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். எனவே 11-ந்தேதி ஆலோசனைக்கு பிறகு அவர் இறுதி முடிவை வெளியிட வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 6 பேரிடம் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து வருகிறது. வருகிற 13-ந்தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவை வெளியிட இருக்கிறது.

    எனவே அந்த முடிவை பார்த்து விட்டு அ.தி.மு.க. போட்டியிடுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுப்பார் என்றும் சொல்கிறார்கள்.

    • வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள 13, 17-ந் தேதிகளில் என மொத்தம் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடைபெறும்.

    இதையடுத்து 18-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 20-ந் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மட்டும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

    முதல் நபராக தேர்தல் மன்னன் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (64) என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    நான் இதுவரை 246 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இது 247-வது தேர்தலாகும்.

    நான் இதுவரை 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 33 பாராளுமன்றத்தேர்தல், 76 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல், மாநகராட்சி மேயர் தேர்தல், கவுன்சிலர் தேர்தல் என போட்டிட்டு உள்ளேன்.

    வாஜ்பாய், நரசிம்மராவ், கருணாநிதி, ஜெயலலிதா, சினிமா நடிகர் சரத்குமார் என பலரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.

    கடைசியாக கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த எம்.பி. தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 286 வாக்குகள் பெற்றேன். தமிழகத்தில் கடைசியாக விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 16 வாக்குகள் பெற்றேன்.

    கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 வாக்குகள் பெற்றேன். தேர்தலில் அதிக முறை போட்டிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்.

    இன்னும் இந்தியாவில் எத்தனை தேர்தல் வந்தாலும் நான் உயிரோடு இருக்கும் வரை அனைத்து தேர்த லிலும் போட்டியிடுவேன்.

    தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து அதற்காக பிரசாரம் எல்லாம் செய்ய மாட்டேன். எனது நோக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மதியம் வரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களிடமிருந்து, தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் படிவம், இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் டெபாசிட்தொகை ஆகியவற்றை சரி பார்த்தனர்.

    அதன்பின்னர், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ், வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இந்த நடைமுறைகள் முழுவதும் மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டது.

    மேலும், வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலக நுழைவு வாசல் மற்றும் வளாகம் முழுவதும், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. முத்துக்கு மரன், இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×