என் மலர்
நீங்கள் தேடியது "exit polls"
+2
- மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
- ஜீ மேட்ரைஸ் மற்றும் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது.
பெங்களூரு:
கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறற்து. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி உள்ளது. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.
பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
- வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
ராய்ப்பூர்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா டுடே: பாஜக 36-40, காங்கிரஸ் 40-50
இந்தியா டிவி: பாஜக 30-40, காங்கிரஸ் 46-56
ஆஜ் தக்: பாஜக 36-46, காங்கிரஸ் 40-50
ஜன் டிவி பாஜக: 34-45 காங்கிரஸ் 42-53
இதையடுத்து, சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலைப் பிடித்துள்ளது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
- தெலுங்கானாவில் இன்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
- டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.
போபால்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது.
ரிபப்ளிக்: பாஜக 118-130, காங்கிரஸ் 97-107
டிவி 9: பாஜக 106-116, காங்கிரஸ் 111-121
ஜன் டிவி பாஜக: 100-123, காங்கிரஸ் 102-125
பி மார்க் பாஜக: 103-122, காங்கிரஸ் 103-122
சிஎன்என் பாஜக முன்னிலை
இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
- தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குகள் பதிவானது.
- மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
நியூஸ் 18: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10
ஆரா: பிஆர்எஸ் 41-49, காங்கிரஸ் 58-67, பாஜக 05-07
இந்தியா டிவி: பிஆர்எஸ்: 31-47, காங்கிரஸ் 63-79, பாஜக 02-04
சிஎன்என்: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10
இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓங்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கருத்துக் கணிப்பு முடிவு இவ்வாறு இருக்கும் சூழலில் வெற்றி யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி 1 மணி அளவிலேயே உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
- வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓங்கும் என தெரிகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மந்திரி கே.டி.ராமாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் சந்திரசேகர ராவ் முதல் மந்திரி ஆவார். கடந்த 2018- தேர்தலின் போது இதேபோன்று எங்களுக்கு பாதகமான கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் இம்முறையும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
- ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
- 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்
5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.
இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...
ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.
பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.
ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.
பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.
- நாங்கள் முழு மெஜாரிட்டி மட்டுமல்லாமல், அதிக இடங்களை பிடித்து ஆட்சியை அமைத்துள்ளோம்.
- பிப்ரவரி 8-ந்தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை 6 மணி வரை வாக்கு மையம் வந்தடைந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பதிவான மொத்த வாக்கு சதவீதம் இன்றிரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 27 வருடங்கள் கழித்து டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எப்போதும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முழு மெஜாரிட்டி மட்டுமல்லாமல், அதிக இடங்களை பிடித்து ஆட்சியை அமைத்துள்ளோம்.
இந்த முறையில் அதில் வேறுபாடு இருக்காது. சில கருத்து கணிப்பகள் நாங்கள் வெற்றி பெறுவதாக வெளியிட்டுள்ளன. என்றபோதிலும் பிப்ரவரி 8-ந்தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என கூற விரும்புகிறேன். மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார்.
இவ்வாறு பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி அமைக்கும் என வெளியீடு.
- கருத்து கணிப்பின்படி முடிவு அமைந்தால் 27 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை 6 மணி வரை வாக்கு மையம் வந்தடைந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பதிவான மொத்த வாக்கு சதவீதம் இன்றிரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 27 வருடங்கள் கழித்து டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா கூறுகையில் "பிப்ரவரி 8-ந்தேதி உறுதியாக டெல்லியில் தாமரை மலரும். நாங்கள் சிறந்த ஆட்சியை வழங்குவோம். யமுனை ஆறு சுத்தம் செய்யப்படும். வேலைவாய்ப்பு வழங்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறார் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்" என்றார்.
- டெல்லி சட்டமன்ற தேர்தல் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பை வெளியிட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை பிடிக்கும். அதுவும் தனி மெஜாரிட்டியுடன் பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும் என வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் இதுபோன்றுதான் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் கருத்து கணிப்பை பொய்யாக்கி ஆட்சியை பிடித்தோம் என ஆம் ஆத்மி கட்சி தலைவரகள் தெரிவித்துள்ளனர். அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் "ஆத்மி ஆத்மிக்கு எதிராக கருத்து கணிப்புகள் எப்போதும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி (நாளைமறுதினம்) வரை காத்திருக்க வேண்டும் என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது:-
மசாஜ், ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தை கருத்து கணிப்புகள் நடத்தினால், கணிப்பின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியும். பிப்ரவரி 8-ந்தேதி வரை காத்திருக்க வேண்டும் என எல்லோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். எங்களால் பேசிய விசயங்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில், பாஜக 35-40 இடங்களையும், ஆம் ஆத்மி 32-37 இடங்களையும், காங்கிரஸ் 0-1 இடங்களையும் வெல்லும் என்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 51-60 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 10-19 இடங்களையும், காங்கிரஸுக்கு 0 இடங்களையும் வெல்லும் என்றும் என்.டி டிவி கருத்து கணிப்பில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 தொகுதிகளில் வெல்லும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-1 இடங்களை பிடிக்கும் என்றும் டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் டெல்லியில் பாஜக 37-43, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 40-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-29 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் பி-மார்க் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-49 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 21-31 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் ஜேவிசி கருத்துக்கணிப்பில் பாஜக 39-45 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 22-31 இடங்களையும், காங்கிரஸ் 0-2 இடங்களையும் பெறும் என்றும் சாணக்யா கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-28 இடங்களும், காங்கிரசுக்கு 2-3 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.
இந்த தகவல் பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சற்று சஞ்சலத்தையும் சலசலப்பையும் உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில், சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் சுதாரிப்பாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

முன்னதாக, இதேபோல் காங்கிரசாருக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வகையில் பிரியங்கா காந்தியும் இதேபோல் ஆடியோ வடிவில் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்புகள் சரியானது அல்ல. அவை மாற வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கருத்து கணிப்புகள் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் தனது கருத்தை ஆடியோவில் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோ பதிவில் பிரியங்கா கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் தொண்டர்களே... எனது அருமை சகோதர, சகோதரிகளே... தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் தைரியத்தை உடைப்பதற்காகவே இத்தகைய வதந்தி பரவி உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் தைரியத்தை இழக்கக்கூடாது.
மிக முக்கியமாக இந்த சமயத்தில்தான் நீங்கள் மிகமிக உஷாராக இருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். உங்கள் கடின உழைப்பு நிச்சயமாக வீண் போகாது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உறுதியாக கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.

ராகுல்காந்தியும் கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். மாநில கட்சி தலைவர்களில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருத்து கணிப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை திசை திருப்புவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
கருத்து கணிப்பு என்ற பெயரில் பரபரப்பு வதந்தியை ஏற்படுத்தி விட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை தெரிவித்து உள்ளன. சில கருத்துக்கணிப்புகள் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது பணிகளை சிறப்பாக செய்து இருக் கிறார். அதைத்தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றபோதிலும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாக அமைந்து உள்ளன. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் புதிய அரசு அமையும். மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்கள் (43) இப்போதும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
பேட்டியின் போது அவரிடம், பிரதமர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த கேள்விக்கு நான் கிட்டத்தட்ட 50 தடவை பதில் அளித்து விட்டேன். பிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். எனவே அவரது தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும்” என்றார்.