என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "extortion"

    • சேலம் சீலநாயக்கன்பட்டியில் திடீரென அங்கு வந்தபவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுப்பட்டார்.
    • அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டம், பனம ரத்துப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கொத்தனார். இவர் நேற்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இரட்டைக் கோவில் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மூர்த்தியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கினார்.

    பின்னர் அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நிர்மல் தாஸ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தொழிலாளி-வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை தேடி வருகின்றனர்.
    • அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி 950 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    மதுரை

    மதுரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அழகர்(வயது21). இவர் சம்பவத்தன்று இரவு வில்லாபுரம் ஆர்ச் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி 950 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    இது தொடர்பாக அழகர், அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது கீரைத்துறையை சேர்ந்த சண்முகவேல் மகன் ரத்தினகுமார்(22), காமராஜபுரம், குமரன் தெரு குமரய்யா மகன் முனீஸ்வரன் (20) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஆனையூர் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது30). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை கே.வி.சாலையில் உள்ள மதுபான பாருக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி, 4500 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    இது தொடர்பாக செல்வ ராஜ், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது அருள்தாஸ்புரம், பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்ல பாண்டியன் மகன் சேக் என்ற ஜெயக்குமார்(24) மற்றும் தினேஷ் என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் டாலர் காலனியில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையை சேர்ந்த போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறி அவரை மிரட்டினர். பின்னர் 7 பேர் கொண்டு கும்பல் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து சஞ்சீவியை அவர்கள் கோவைக்கு கடத்தி வந்தனர். வரும் வழியில் அவரது டிரைவரை கரூரில் இறக்கி விட்டு வந்தனர். பின்னர் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது 7 பேர் கொண்ட கும்பலுடன் கேரளாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் என கூறி அங்கு வந்தார். அவருடன் கிப்சன், அலெக்ஸ் ஆகியோரும் வந்து இருந்தனர்.

    இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். ஆனால் அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கும்பல் பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்து இருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச் செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கி விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்கவும் என கூறி விட்டு சென்றனர். இது குறித்து சஞ்சீவி காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மிரட்டி ரியஸ் எஸ்டேட் அதிபரை கடத்தி 8 நாட்கள் சிறை வைத்து மிரட்டி 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வெற்றிலை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடம் இருந்து ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் செல்லப் பாண்டி(வயது 60). வெற்றிலை வியாபாரியான இவர் தினமும் நகரி வழியாக சித்தாலங்குடி, குமாரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

    அதன்படி சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெற்றி லைகளை ஏற்றிக்கொண்டு செல்லப்பாண்டி வியாபாரத்திற்கு புறப்பட்டார்.

    தோடனேரி விலக்கில் சென்றபோது, 3வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி செல்லப்பாண்டியிடம் இருந்த ரூ5,115 பணம் மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தேனூர் பாலத்தில் நேற்று போலீசார் வாகன சோதனை செய்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் செல்லப்பாண்டியிடம் பணம் மற்றும் செல்போன் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் தோடனேரியை சேர்ந்த ஜெயசூர்யா(வயது24), சமயநல்லூர் அமீர்(18) மற்றும் 16வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இளநீர் வாங்குவது போல் நடித்து மாணவரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிதாகபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகன் மரம்பதி(வயது17). பிளஸ்-2 மாணவர். இவர் கோடை விடுமுறையில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் உள்ள வல்லாளபட்டி பகுதியில் நேற்று இளநீர் விற்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இளநீர் வாங்குவது போல் நடித்து மரம்பதி சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் இளநீர் விற்ற பணம் ரூ.3 ஆயிரத்து 220 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி முத்தழகன் மேலவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் பணம் பறித்த மேலூரைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    • கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர்.
    • இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே காடகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டிலிருந்து திருக்கோவிலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்தி ற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.திருக்கோவிலூர் -விழுப்புரம் சாலை காடகனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வடகரை தாழனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கார்முகிலன், விநாயகமூர்த்தி ஆகிய 2 பேரும் ஸ்ரீராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். இதனையடுத்து கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர். மேலும் ஸ்ரீராம் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 1000 பணத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஸ்ரீராம் அரங்கண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கார்முகிலன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருக்கு தப்ப முயன்ற கார்முகிலனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்முகிலன் மீது அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மில் உரிமையாளரை தாக்கி ரூ.4 லட்சம் நகை-பணம் பறிக்கப்பட்டது.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள செவல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது30). இவருக்கு சொந்தமான மில் கட்டிடம் கொத்தங்குளத்தில் உள்ளது.

    கடந்த சில வருடங்களாக மில் இயங்காமல் இருந்துள் ளது. இந்த நிலையில் உதயகுமாரும், அவரது நண்பர் சஞ்சய் பாபுவுடன் மில்லுக்கு சென்றார். அப்போது மில் வளாகத்தில் அமர்ந்து 7 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த உதயகுமாரும், சஞ்சய் பாபுவும் இங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதுபோன்று இங்கு வந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அதைக்கேட்ட அந்த வாலிபர்கள் கோபமாக அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் இருவரும் சேர்ந்து அங்கு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் 2 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் பெரிய வாளுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி உதயகுமாரை நோக்கி வந்தார்.

    அவர் உதய குமாரையும், சஞ்சய் பாபுவையும் வாளை திருப்பி வைத்து தாக்கினார். மேலும் இருவரையும் மிரட்டி உதயகுமார் வைத்தி ருந்த வைர மோதிரம், 3½ பவுன் தங்க செயின், வெள்ளி பிரைஸ்லெட், 2 மொபைல்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார்.

    இது குறித்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை கடத்தி சென்று செக்ஸ் டார்ச்சர் செய்து பணம் பறிக்கப்பட்டது.
    • 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு தெற்கு மடத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மண்எண்ணை கண்ணன் (வயது44). இவர் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கண்ணன், அவரது மனைவி பிரேமா, உறவினர்கள் செல்வி, பாலா, காதர், அருள், மணி சங்கையா ஆகிய 7 பேரும் அந்த பெண்ணை கடத்திச்சென்று அவரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்து 500-யை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி பணம் பறித்த 7 பேரையும் கைது செய்தனர்.

    • மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
    • ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர்.

    தாம்பரம்:

    சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (40). இவர், நேற்று காலில் சிகிச்சை பெறுவதற்காக ஒமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவற்காக சென்ட்ரலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.

    தாம்பரம் சானட்டோரியம் அருகே ரெயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் கூகுள் பே மூலம் ரூ.1400 பெற்றனர். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மெதுவாக சென்றபோது கொள்ளையர்கள் 4 பேரும் குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

    • மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.
    • மூர்த்தி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சரவணம்பட்டி,

    கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி(51). இவர் சத்தி-விளாங்குறிச்சி ரோட்டில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.

    இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், டிபன் கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி மோர் மார்க்கெட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(18), 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    • ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    சேலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாரசிராம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு சேலம் டவுன் தாதுபாய்குட்டை அருகே உள்ள ஒரு ஓட்டலில் தன் நண்பர்கள் அண்ணாதுரை, சுரேஷூடன் சாப்பிட சென்றார்.

    அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    பூ வியாபாரி

    இதேபோல், சேலம் பொன்னம்மாபேட்ைட வாசக சாலை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). பூ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் பழைய நிலையம் அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்கள், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி மெயின்ரோடு காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரவிக்குமார் என்கிற போலீஸ் ரவி (32), கோவிந்த சாமி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரசாத் (25) ஆகியோரை கைது செய்து பணம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

    • காரியாபட்டி அருகே கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி பொக்லைன் எந்திரத்துக்கு தீவைக்கப்பட்டது.
    • இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலகல்லங்குளம் கிராமத்தில் பிரதீப் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் சக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தமுருகன்(40) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக அதே பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஆனந்தமுருகன் பணம் தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார்.

    தொடர்ந்து 4 பேர் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். சம்பவத்தன்று கல்கு வாரிக்கு வந்த அவர்கள் ஆனந்த முருகனிடம் தகராறு செய்து பணம் கொடுக்கவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய தோடு அங்கு நிறுத்தியிருந்த 2 பொக்லைன் எந்திரத்துக்கு தீவைத்தனர். மேலும் ரூ.22 ஆயிரம் பணத்தையும் அபகரித்து கொண்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் சமூகவிரோதிகள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடும் சம்பவம் அதிகரித்துள்ளது.இதனால் வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

    தினமும் ரவுடிகளுக்கு கப்பம் கட்டும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×