என் மலர்
நீங்கள் தேடியது "fever"
- நெல்லை மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி பகுதியில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இன்று 73 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத் தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மற்றும் மக்கள் அதிகம் கொண்ட தெருக்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் முகாம் நடந்தது.
இதனை கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நடமாடும் முகாம்கள் மூலம் அதிகம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை, மாலை என இரண்டு வேளைகளாக பிரிக்கப்பட்டு மருத்துவ முகாம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு முகாம்களிலேயே தேவை யான மருந்து, மாத்திரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் சளி பரிசோதனை செய்ய வும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இது தவிர சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர், ஓ.ஆர்.எஸ். குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் அருண் தலைமையில் சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட நடமாடும் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
காய்ச்சல் பாதிப்பு உள்ள 2 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமினை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவனேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், வினோத் பாபு, ஆங்கல்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
- மருந்து மற்றும் மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் ஆணையாளர் வெங்கடேஷ்வரன் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி காங்கயம் நகராட்சி மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று காலை காங்கயம் நகரம், அண்ணா நகர் பகுதியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குண்டான மருந்து மற்றும் மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. இந்த முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வட்டார சுகாதார ஆய்வாளர் ரகுபதி, நகராட்சி கவுன்சிலர் சிலம்பரசன், டாக்டர்கள் மோகன், கிருத்திகா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் நகர பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
- பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
பல்லடம் :
தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியும் நடைபெற்றது. இதில் சுகாதார மேற்பார்வை யாளர் தமிழ்ச்செல்வி, வார்டு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சுகாதாரப் பணியா ளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடுமலை :
கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லைகளில் தகுந்த பரிசோதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக செல்கின்றனர். இதில் எலி காய்ச்சல், டெங்கு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது கேரளாவில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே உடுமலை, ஆனைகட்டி உட்பட தமிழக, கேரள எல்லையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் நபர்களை உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும்.
எல்லைகளில் மருத்துவ முகாம்களை அமைத்து 24 மணி நேரமும் சுகாதாரத்துறை ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
- ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன.
சென்னை:
சென்னையில் கடந்த மாதம் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென்று பலத்த மழையும் பெய்தது. இந்த திடீர் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் சென்னையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
பலருக்கு காய்ச்சலுடன் தொண்டைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மர்ம காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது.
இது பெரும்பாலும் சாதாரண பாதிப்புகள் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பலவித உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
மேலும் சென்னையில் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது. ஈக்கள் அதிக அளவில் பெருகியதால் அதன்மூலம் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பழங்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஈக்கள் மொய்ப்பதால், அந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்றுக்களே வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.
சென்னையில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெறவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஈக்கள் மூலமே அதிக நோய் பரவுகிறது.
எனவே மீன் மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்றாக அலசியபின் சாப்பிடலாம். ஈக்கள் மொய்க்கும் இடங்களில் உணவுப்பொருட்களை வைக்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் மழைநீர் வடிகால் தொட்டி, வடிகால், நீர்நிலைகள், குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு புகையும் அடிக்கப்படுகிறது. பொதுமக்களும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என்றனர்.
- அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
- எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.
சென்னை:
தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவ காலத்தில் பரவும் வழக்கமான வைரஸ் பாதிப்புதான் இது என்றாலும், முன் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பகல் வேளைகளில் அதீத வெப்பம் மற்றும் மாலை வேளைகளில் மழைப்பொழிவு என தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இதன் எதிர்விளைவாக குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.
அதன் தொடா்ச்சியாக மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக வரு ரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படத் தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடா்பாக நோய்த் தொற்றியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டா் அப்துல் கபூா் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளையில், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் அதற்கு டாக்டர்களை நாடுவதில்லை. 3-ல் இருந்து 5 நாட்களுக்குள் அந்த பாதிப்புகள் குணமாகிவிடுவதே அதற்கு காரணம்.
எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. அவா்களுக்கு பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் மருந்துகளையே பெரும்பாலும் பரிந்துரைக்கிறோம். வழக்கமான வைரஸ் தொற்று இது என்பதால் ஆன்டிபயோடிக், ஆன்டி வைரல் மருந்துகள் இதற்கு தேவையில்லை. வெது வெதுப்பான நீரில் உப்பு அல்லது கிருமித் தொற்று நீக்க மருந்துகளைக் கலந்து கொப்பளித்தால் போதுமானது.
காய்ச்சிய தண்ணீரைப் குடிப்பதும், கைகளை சோப்பால் அடிக்கடி கழுவுவதும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன.
- காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும்.
காய்ச்சலை நாம் அணுகும் முறையால்தான் உணவுரீதியாகவும் நாம் தடுமாற்றம் அடைகிறோம். எனவே, காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன என்பது பலரும் அறிந்ததுதான். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிரமான காய்ச்சலாக இருந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை.
காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அப்படியே படுத்துவிட்டு, சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பார்கள். இதைத்தான் முதலில் தவிர்க்க வேண்டும். நமது உடலில் காய்ச்சல் ஏன், எதனால் ஏற்படுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது சுற்றுப்புறத்திலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற ஏதாவதொரு கிருமி நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அதை நமக்கு உணர்த்தக்கூடிய ஓர் அறிகுறிதான் காய்ச்சல். அப்படி உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறபோது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை காய்ச்சல் என்று சொல்கிறோம்.
காய்ச்சலோடு தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். காய்ச்சலோடு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம். காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு கண் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
உடலில் அதிக களைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்காமல் வெயில் காலங்களில் வெளியே செல்கிறபோதும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருவதை Heat Stroke என்று சொல்கிறோம். அதேபோல அம்மை நோய்கள் ஏற்படுகிறபோது உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும். எனவே, என்ன காரணத்தால் அல்லது எந்தக் கிருமியினால் காய்ச்சல் வந்துள்ளது என்பதை சரியாக கண்டறிவதற்கே இரண்டு நாட்கள் வரை ஆகும்.
மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குனியா என்று நூற்றுக்கணக்கான காய்ச்சல் இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை தெர்மாமீட்டர் மூலம் கண்டறிவதோடு என்ன காரணத்தினால் அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சரியான மருத்துவத்தை மேற்கொள்ள முடியும்.
காய்ச்சலின்போது நீர்ச்சத்து தொடர்பான எல்லா உணவுகளையுமே நாம் புறக்கணிக்கிறோம். உடல் மேலும் குளிர்ச்சியடைந்து காய்ச்சல் அதிகமாகிவிடும் என்றும் தவறாக நம்புகிறோம். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்த நீர்வறட்சியினால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறது. எனவே, அதிகளவு நீர் அருந்துவதோடு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.
இந்த நீராகாரங்கள் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின்(Electrolyte) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரின் சுகாதாரம் தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதால், கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடித்துக் கொள்ளலாம். முக்கியமாக, காய்ச்சல் வந்த பிறகு இரண்டு நாட்கள் வரை உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும்.
காய்ச்சல் வந்துவிட்டால் இதைத்தான் சாப்பிட வேண்டும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதே தவறான புரிதல். இதுபோன்ற நேரங்களில் நாம் இவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று நாமாகவே நினைத்துக்கொண்டு, சாப்பிடாமலேயே இருப்பதுதான் உடல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காய்ச்சலின்போது மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுவதோடு தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்குள் புகுந்திருக்கிற கிருமிக்கு எதிராக செயல்படுகிறபோது, அதற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு நாம் எப்போதும்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கையில் நமது வாய்க்கு எதை சாப்பிடப் பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம்.
நாம் வழக்கமாக சாப்பிடுகிற எல்லா விதமான உணவுகளையும் சாப்பிடலாம். நாம் சரியாக சாப்பிட்டால்தான் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய முடியும். ஆனால், நமக்குப் பிடிக்கும் என்பதற்காக குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற ஆரோக்கியக் கேடான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்.
- நம்முடைய முன்னோர்கள் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.
- மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர்.
தலைவலி, கை, கால் வலி, சளி, காய்ச்சல், இருமல், தும்மல் எது வந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆங்கில மருந்தை நாடுகின்றோம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து, அடிக்கடி வரக்கூடிய சில உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். அந்த வரிசையில் சின்ன சின்ன கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் இந்த பொருட்கள் எல்லாம் நோயை குணப்படுத்தும் மருந்துகள் என்று தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டுகாலம் நலமுடன் வாழ்ந்தனர்.
வயிற்று வலி குணமாக சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொஞ்சம் நெய்யில் வறுத்து பொடி செய்து அதனை புதிதாக செய்த மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி முற்றிலுமாக நீங்கும்.
தலைவலி நீங்க ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும், 2 லவங்கமும் சேர்த்து நன்கு அரைத்து பற்று போடும் பதத்தில் வைத்துக்கொண்டு நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சில மணி நேரங்களில் குணமாகும்.
நாட்டு மருந்து கடையில் இருந்து கொஞ்சம் வேப்பங்கொட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக இழைத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமடைந்து விடும்.
குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நெஞ்சில் சளி சேர்ந்துகொண்டு இருமல் அதிகமாகிவிடும். இந்த நெஞ்சு சளி கரைய சிறிதளவு தேங்காய் எண்ணையில் பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்து நன்கு சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சில் உறைந்துள்ள சளி கரையத்தொடங்கும்.
பசி எடுக்க புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழம் சாறு 3 பங்கு சேர்த்து கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பசி ஏற்படும்.
வண்டுக்கடியால் ஏற்படு தடிப்புகள் மறைய வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சேர்த்து அரைத்த விழுது ஒரு கைப்பிடி எடுத்து ½ லிட்டர் பசும்பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிட கரப்பான், வண்டுக்கடியால் ஏற்பட்ட விஷம், வடு நீங்கும்.
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். அஜீரண கோளாறு இருக்கும் சமயங்களில் மிளகை வறுத்து பொடி செய்து தேனில் உட்கொண்டு வந்தால் அஜீரண கோளாறால் ஏற்படும் சீதபேதி குணமாகும்.
உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாக இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சுண்ணாம்பு இவற்றை உள்ளங்கையில் நன்றாக குழைத்தால் சூடாக இருக்கும். இந்த கலவையை அந்த சூட்டிலேயே தொண்டை பகுதியில் தடவி மறுநாள் காலையில் ஈரத்துணிகொண்டு துடைத்து எடுத்தால் உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாகும்.
அதிமதுரத்தை பொடியாக்கி அதை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் அரிசி கஞ்சியுடன் சேர்த்து, இந்த நீரை குடித்து வர வயிற்று புண் (அல்சர்) குணமாகும். இதனையே கஷாயமாக செய்து குடிக்க மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.
சிறு குழந்தைகள் சில சமயம் விடாமல் அழும். நமக்கு காரணம் புரியாது. அதற்கு இரண்டு வெற்றிலைகளை எடுத்து, விளக்கெண்ணெய்யை ஒரு பக்கம் தடவி, விளக்கில் லேசாக சூடு செய்து இளம்சூட்டில் குழந்தையின் வயிற்றின் மேல் போட சில நொடிகளில் அழுகை நின்று குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும்.
சிறு குழந்தைகளுக்கு வசம்பை ஒரு துண்டு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்றி விளக்கில் காட்டி நன்கு கருக்கி அதன் பொடியை சிறிது நாக்கில் தேய்த்துவிட வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், பேதி போன்றவை குணமாகும்.
- இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
- திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.
திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
- பரிசோதனை செய்த 526 பயணிகளில் யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.
உடுமலை:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்கொல்லி நோயான நிபா வைரசுக்கு இரண்டு பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினரால் தமிழக கேரளா எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் கண்காணிப்பு பணியை தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் ஒன்பதாறு சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்,செவிலியர் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அந்த குழுவினர் 24 நேரமும் கேரளாவில் இருந்து கேரளாவில் தமிழகத்திற்குள் வருகின்ற வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடுமலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.நேற்று நடைபெற்ற முகாமில் 111 வாகனங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த 526 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இந்த பணியில் சுகாதாரத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
- உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும்.
உங்கள் உடல் கட்டுமஸ்தானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி அவசியம்.
தினசரி உடற்பயிற்சி என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஏரோபிக் பயிற்சிகளை தினசரி 45 நிமிடங்கள் செய்தால் தொற்றுநோய் பிரச்சினை குறையும் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை. ஆனால், உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள்.
"ஒருவரின் உடல் காய்ச்சல் அல்லது சளியினால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்வது, உடல் நோயில் இருந்து மீண்டு வருவதை தாமதமாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்து தாக்கிக் கொண்டிருக்கும்போது உடலை வருத்தும் உடற்பயிற்சிகள், உடல் நிலையை இன்னும் மோசமாக்கும். எனவே உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும். இல்லையேல், லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்'' என்கிறார்கள், மருத்துவர்கள்.