என் மலர்
நீங்கள் தேடியது "Fisheries Department"
- புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் ராதாபுரமானது கடற்கரை கிராமங்களான கூடுதாழை, கூட்டப்பணை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டபுளி ஆகிய கிராமங்களுக்கு நடுநிலையான இடத்தில் அமைந்துள்ளது.
ரூ. 1.60 கோடி
இதனால் மீன்வள மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குநர் அலுவலகம் மீனவ கிராம மக்களுக்கு பயன்படும் வண்ணம் ராதாபுரம் பழைய தாலுகா அலுவலகத்தில் இயங்கி வந்தது.
இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார்.
அலுவலகம் இங்கு அமைவதால் மக்களுக்கு அரசின் திட்டங்கள் அரசு அலுவலர்கள் மூலம் தெரிந்து திட்டம் கிடைக்க எளிமையாக இருக்கும். மீனவர்களின் பயிற்சி மற்றும் கூடங்கள் அமைக்க சிறப்பாக இருக்கும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, பரிமளம், மவுளின், இசக்கிபாபு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில மீனவரணி துணை செயலாளர் எரிக்ஜுடு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், ராதிகா சரவணகுமார், மணிகண்டன், முருகன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், ராமையா, அகஸ்டின், மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஷ்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், காமில், எழில் ஜோசப், குமார், டென்னிஸ், முத்தையா, கோகுல், வடிவேல் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு ன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மண்டல இணை இயக்குநர் உதவி இயக்குநர் மற்றும் மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்கள் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ரூ. 5 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்
மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை நெல்லை கோட்ட உதவி பொறியாளர் தயாநிதி வரவேற்று பேசினார்.
விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, தி.மு.க. வட்ட செயலாளர் ரவிசந்திரன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் அமலசேவியர், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளார் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் ரவி, மீன்துறை ஆய்வாளர் பெல்சி ஷிபானி, மீன்பிடித்துறைமுக மேலாண்மை மீன்துறை ஆய்வாளர்கள் ஆரோக்கி யசாமி, பொன் சரவணக்கண்ணன், தாசில்தார் பிரபாகர், கவுன்சிலர்கள் ஜெயசீலி, பவானி மார்ஷல், எடின்டா, சுப்புலட்சுமி, சரண்யா, வைதேகி, இசக்கிராஜா, மாநகர தி.மு.க. அணி நிர்வாகிகள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ் மற்றும் ரேவதி, பெல்லா, அருணாதேவி, கவிதாதேவி, மணி, அல்பட், மகேஷ்வரசிங், பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் நன்றி கூறினார்.
- புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.
- இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.
இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து புதுவை மீன்வளத்துறை மாகி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைத்திரும்ப வேண்டும்.
மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
- விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.
புதுச்சேரி:
அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மூர்த்திக்குப்பம், நரம்பை கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்டது.
நிர்வாகிகள் வடிவேல், பெரியாண்டி, கதிரவன், கலைஞானம், வாசகன், உத்திராடம், புண்ணி யமூர்த்தி, யோகநாதன், நிர்வாகக்குழு உறுப் பினர்கள், பொதுமக்கள் முருகன், குமார், பிரகாஷ், பிரவீன், செல்வகுமார், கலையரசன், வினோத், ஞானவேல் பேசினர்.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.
அத்தகைய வங்கிகள் மீனவர்களுக்கு ஏற்படுத்தப் படவில்லை. புதுவையில் மீனவர்களுக்கு தனி வங்கி கிளையை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழுதடைந்த சுனாமி குடியிருப்புகளை செப்பனிட்டு தர வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை மண்டல அமைப்பாளர் கலைமணி செய்திருந்தார்.
- கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.
- வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
கடந்த 17-ந் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்கலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட தால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சங்கரா 300 ரூபாய்க்கும், பாறை 200 ரூபாய்க்கும் , ஷீலா 250 ரூபாய்க்கும் , கானாங்கத்த 200 ரூபாய்க்கும் , வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்து மீன்கள் வாங்கியதை காண முடிந்தது.
- மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் அதளை ஒட்டிய இலங்கை கடற்பகுதி, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலாமீட்டர் வேகம் வரை வீசுவதுடன் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது, எனவே மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசை படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் மாவட்டத்தில் பெரிய தாழை முதல் வேம்பார் வரை மீன்பிடிக்க மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.
- சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மரத்தில் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் அரசு அனுமதி அளித்த குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-1983 விதிகளை பின்பற்றாமல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதை கண்டறிந்த ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
அதனை மீறி அந்த 4 விசைப்படகுகளில் 2 படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தொழில் முடக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து படகை பறிமுதல் செய்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர்.
ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளதால் வழக்கு முடியும் வரை இந்த படகை அதன் உரிமையாளர் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி எச்சரித்து உள்ளார்.
- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தற்பொழுது கிடைத்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.
அதன் காரணமாக 17.12.2024 முதல் 19.12.2024 தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மற்றவர்கள் புதுச்சேரி கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த அறிவிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அவ்வப்பொழுது வெளியிடப்படும் அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.
- பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மண்டபம்:
தென் தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை தாக்கி சிறைபிடிப்பதும், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சில நேரங்களில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடும் நடத்தி வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள இலங்கை கடற்பரப்பில் வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று (8-ந்தேதி) பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி இன்று மாலை வரை நீடிக்கும் என தெரிகிறது.
இதற்கிடையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள இலங்கை பகுதிக்கு சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை கடற்படையினர் அவரது எல்லைப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதை கருத்தில் கொண்டு ராமேசுவரம் மீனவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மேலும் பாதுகாப்பாக நமது எல்லைக்குள் மீன் பிடிக்குமாறு ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
புதுவை மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் டெல்லியில் மத்திய மீன்வள அமைச்சக செயலாளர், மீன்வள அமைச்சக இணை செயலாளர், மீன்வள ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது புதுவை அரசின் மீனவர் நலம் மற்றும் மீன்வளம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய மீன்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுவையில் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம், காரைக்கால் மற்றும் ஏனாம் மீன்பிடிதுறைமுகங்களை நவீனப்படுத்தி விஸ்தரிக்கவும், புதுவை பகுதியில் நல்லவாடு, பெரியகாலாப்பட்டு பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கவும் மொத்தம் ரூ.140 கோடி நிதி வழங்க மத்திய மீன்வள அமைச்கம் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தவுடன் நிதிஒதுக்கீடு புதுவை அரசுக்கு கிடைக்கும்.
மேலும் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் புதிய மீன் ஏலக்கூடம், மீன்அருங்காட்சியகம், நவீன மொத்த மற்றும் சில்லரை மீன் வணிக வளாகம் ஆகியவையும், மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண உதவியை ரூ. 4 ஆயிரத்து 300 ஆக உயர்த்தவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு மானியம் வாங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடி வழங்கவும், நன்னீர் மீன் வளர்ப்புக்கு மானியமாக ரூ 1 லட்சமும், உவர்ப்பு நீர் மீன்வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.26 லட்சமும், மீன்பிடி படகுகள் மற்றும் என்ஜின்களை புதுப்பித்து உதவி வழங்க ரூ.60 லட்சமும் மத்தியஅரசு நிதி வழங்கி உள்ளது.
புதுவை அரசு மீன்வளத்துதுறை சார்பில் புதிய திட்டங்களுக்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்பித்து விடுத்த கோரிக்கைகளை அடுத்து மொத்தம் ரூ.159 கோடியே 67 லட்சம் அளவிலான நிதி ஒதுக்கீடு மத்திய மீன்வள அமைச்சகத்திடமிருந்து கிடைத்துள்ளது.
இந்த தகவலை புதுவை மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.