என் மலர்
நீங்கள் தேடியது "Fishermen Arrested"
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
- கடுமையாக தாக்கி, படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும், படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சுமார் 75 பேருக்கு மேல் சிறையிலும் 32 மீனவர்கள் நீதிமன்ற காவலிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மண்டபம்:
ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதும் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 4-ம் தேதி மிக்கேல் ராஜ், நிஜோ ஆகியோருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 பேரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரபீக் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 14 மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்ததை கண்டித்தும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
- கடந்த 3-ந்தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ந்தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் தற்போது 8 மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- 558 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியா-இலங்கை இடையே நாகப்பட்டினம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடல் பகுதி 25 முதல் 40 கி.மீ. வரை மட்டுமே அகலம் உள்ள கடற் பகுதியாகும். மீன்வளம் மிக்க இப்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் தங்களது பகுதிகளில் மீன் பிடித்து வருகின்றன.
இந்த நிலையில் அகலம் குறைந்த பகுதி என்பதாலும், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் நடக்கும் பகுதி என்பதாலும் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் சம்பவங்களும், அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடப்ப துண்டு.
எனினும் சமீப காலமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடி சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. இதில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2½ ஆண்டுகள் வரை சிறை தண்டனை மட்டுமின்றி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்குதல் போன்ற கடுமையான ஷரத்துகள் இடம் பெற்றிருந்தன.
இந்த சட்ட திருத்தம் கொண்டு வந்த பின் தமிழக மீனவர்கள் கைது சம்பவங்களும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இதேபோல் 2014-ல் 164 படகுகள், 2015-ல் 71 படகுகள், 2016-ல் 51, 2017-ல் 84, 2018-ல் 14, 2019-ல் 41, 2020-ல் 9, 2021-ல் 19, 2022-ல் 34, 2023-ல் 34, 2024-ல் 39 படகுகள் என மொத்தம் 558 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 365 படங்களை அந்நாட்டு அரசு நீதிமன்ற உத்தரவுபடி நாட்டுடமையாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் படி இந்த விவரங்கள் கிடைத்துள்ளது.
அங்கு 193 படகுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும் அவற்றில் 21 படகுகள் விடுவிக்கபட்ட பின்னரும் மீதி படகுகள் அங்கேயே உள்ளன. இவற்றை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
- புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- மீனவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தல்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
குறிப்பாக எல்லை தாண்டி வந்ததாக கூறி நடுக்கடலில் வைத்து அவர்களை சிறைபிடிப்பது, படகுகளை பறிமுதல் செய்தல், தாக்கி விரட்டி அடித்தல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்டவைகளால் நஷ்டத்தையும் சந்திக்கின்றனர்.
புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் அனைத்து தடைகளும் விலகிய நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே பாரம்பரிய பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து பல மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் ராமேசுவரத்தை சேர்ந்த முகேஸ்குமார், மரிய ரெட்ரிசன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
மீனவர்களின் படகுகளுக்குள் தாவிக்குதித்த அவர்கள் படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி களஞ்சியம் (வயது 47), முனீஸ்வரன் (49), கார்மேகம் (60), கண்ணன் (43), தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிஸ்மன் (25), பிரியன் (30), மரிய ஜான் ரெமோரா (48), சவேரியார் அடிமை (48) ஆகிய 8 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் நாளை அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 17 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
- ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி மற்றும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை எல்லைதாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை அரசு ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து கடந்த 25-ந்தேதி ராமேசுவரம் துறைமுக பகுதியில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறை மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
- தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் பதட்டம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்த போதிலும் அதில் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளையும் விரட்டியடித்தனர்.
இது எங்கள் நாட்டு எல்லை, இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர்கள் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு அந்தோணி டிமக் (34),
மற்றும் சுதன் என்பவரது படகில் இருந்த அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) என மொத்தம் 14 மீனவர்களையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரணத்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகவும் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 70-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதிலும் கடந்த மாதம் 25-ந்தேதி ஒரே நாளில் 34 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 34 பேரில் 32 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர்களுக்கு பல லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கைது நடவடிக்கை சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதில் ஏராளமான படகுகள் இயக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளது. மேலும் அந்த படகுகளை தங்களது வாழ்வாதாரம் கருதி விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 29-ந்தேதி எல்லைதாண்டியதாக கைதான 4 மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகு, அதில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ். கருவி, எந்திரங்கள், நங்கூரம் உள்ளிட்ட உபகரணங்களை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்திற்கு இலங்கை அரசு நேற்று ஏலம் விட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.
- 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதானவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
- விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
- விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, கிருஷ்ணன், தங்கப்பாண்டி, அஜித், மடுகுபிச்சை ஆகிய 6 மீனவர்கள் தூதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மன்னார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், இலங்கை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மன்னார் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை விடுதலை செய்து மன்னார் கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2 மாதங்களுக்கு பிறகு மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். 3-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுஉள்ளார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்தியா தான் செய்து வருகிறது.
- ஆனாலும், அவற்றையெல்லாம் மறந்து விட்டு, தமிழ் மீனவர்களை சிங்களப் படை கைது செய்வதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன் தினம் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒரு படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்த சிங்களக் கடற்படையினர், காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு அருகில் மீன் பிடித்ததாகக் கூறி சிறையில் அடைத்து உள்ளனர். மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்த சிங்களப் படையின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்தியா தான் செய்து வருகிறது. ஆனாலும், அவற்றையெல்லாம் மறந்து விட்டு, தமிழ் மீனவர்களை சிங்களப் படை கைது செய்வதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கம் ஆகும். அதனால் தான், தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அழிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக தமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்கவும் வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தொம்மையார்புரம் கிராமத்தை சேர்ந்த மீனவர் அருள்தாசன் (வயது41). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.
அது போல சம்பவத்தன்று இவர் அருகில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார் அப்போது அவரது நண்பர் வீட்டில் இல்லை. நண்பரின் மனைவியும் வெளியே கடைக்கு சென்று இருந்தார். அவர்களது மகளான 6-ம் வகுப்பு மாணவி மட்டும் வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.
அருள்தாசன், அந்த மாணவி அருகே அமர்ந்து டி.வி. பார்ப்பது போல் மாணவியின் தோளில் கைபோட்டு ‘சில்மிஷம்’ செய்துள்ளார். அப்போது கடைக்கு சென்றிருந்த அந்த மாணவியின் தாய் வந்து விட்டார். அவரை பார்த்ததும் அருள்தாசன் வெளியே தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருள்தாசனை சத்தம் போட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அருள்தாசனை கைது செய்தனர்.