என் மலர்
நீங்கள் தேடியது "Fishes"
- மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது.
- மீன்களை மக்கள் போட்டிபோட்டு வாங்கிசென்றனர்.
ராயபுரம்:
தமிழகத்தில் 61 நாட்கள் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த வாரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை விசைப் படகு மீனவர்கள் அதிக அளவில் கரை திரும்பாததால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. மேலும் விலையும் குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு முதலே அதிக அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால் கடந்த வாரத்தை விட பெரிய மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. இதனால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்தது.
கடந்த வாரத்தில் ரூ.1500 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ரூ.1200-க்கு விற்பனை ஆனது. இதே போல் மற்ற மீன்களில் விலையும் குறைந்து இருந்தது.

இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை போட்டிபோட்டு வாங்கிசென்றனர். காசி மேட்டில் மீன்வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் நல்ல விற் பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கூடுதல் நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் அடுத்த வாரம் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அடுத்தவாரம் இப்போதைய நிலையை விட கூடுதலாக பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், மேலும் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம் - ரூ.1200
வெள்ளை வவ்வால் மீன்- ரூ.1200
கருப்பு வவ்வால் மீன்- ரூ.700
சங்கரா - ரூ.350
ஷீலா - ரூ.250
கிழங்கா - ரூ.300
டைகர் இறால் - ரூ.1000
இறால் - ரூ.300
கடமா - ரூ.300
நண்டு - ரூ.300
- சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளன.
- இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
கிரீஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள துறைமுக நகரமான வோலோஸ் [Volos] நகரத்தில் உள்ள கடற்கரை மற்றும் நீர் நிலைகளிலிருந்து மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து மிதப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.
சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணிகளால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான மீன்களின் உயிரிழப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அழுகிய மீன்களால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
உயிரிழந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கி குமிந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருகின்றனர்.
- மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள மணப்பாடு முழுக்க முழுக்க மீனவர்களே வசிக்கும் கிராமம் ஆகும். இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள்.
மற்ற நாட்களில் அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருவதும், ஒரு நாள் முன்னதாக மாலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மறு நாள் காலையில் வெளியே வருவதும், ஒரு சில நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து வருவது என மூன்று பிரிவாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நாட்டுப் படகு, கட்டுமரம் பயன்படுத்தி தான் அதிகமான மீன்களை இப்பகுதி மக்கள் பிடித்து வருகின்றனர். உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ளமக்கள் கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மணப்பாடுகடற்கரைக்கு காலையிலே வந்துமீன்களை வாங்கி செல்கின்றனர்.
கடலில் மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்து உடன் கடற்கரையில் வைத்து ஏலம் போடுவார்கள். ஏலம் போட்ட பின்புதான் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ்கட்டிகள் போடுவார்கள். மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
இதுபற்றி கடற்கரைக்கு மீன் வாங்க வந்த ஒருவர் கூறியதாவது:-
அசைவ உணவுகளில் மிகவும் சத்தானது மீன்கள் மட்டும் தான். வீதி வீதியாக விற்பனைக்கு வரும் மீன்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டு பதப்படுத்தி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் இங்கு வந்து வாங்கினால் மணப்பாடு கடலில் பிடித்து வரும் மீன்கள் உயிரோட்டம் உள்ளதாக இருக்கும்.
மேலும் மணப்பாடு மீன்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. சுவையுண்டு, வாசனை உண்டு. அதனால் தான் நானே சாத்தான்குளத்தில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு இங்கு வந்துள்ளேன். நான் எனது நண்பர்கள் என பலர் சேர்ந்து மீன்களை மொத்தமாக வாங்கி பிரித்து எடுத்து கொள்வோம். மேலும் ஒரு சில நாளில் கனமழை எச்சரிக்கை இருப்பதால் இன்றே மீன்கள் வாங்க வந்து விட்டோம் என்று கூறினார்.
கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வந்திருந்தனர். இருந்தாலும் சுற்றுப்புற பகுதி கிராமமக்களுக்கு மீன்களை விற்பனை செய்வதில் மணப்பாடு மீனவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
- தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
- படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் மீனை தினமும் சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம்.
இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது வலையில் தங்கமீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.
அதிபத்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.
அதிபத்தநாயனாரின் பக்தியை மெச்சிக்கும் விழா நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.
தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள் கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபத்தநாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
- இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படியான விலை கிடைக்கவும் மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஏ. தாஜூத்தீன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மீன்பிடி தடைக் காலத்தால் போதிய அளவு பலன் இல்லாமல் உள்ளது.
தடைக்காலம் முடிந்து பிடித்து வரும் இறால், கணவாய், நண்டு போன்ற ஏற்றுமதி வகைகளை உரிய விலைக்கு விற்க முடியாதபடி, இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்குவதால் மீனவர்கள் சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே, இறால், மீன்களுக்கு முறையான கட்டுப்படி யான விலை கிடைக்கவும், மீனவர் வாழ்வாதாரத்தை காத்திடமும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே விசைப்படகு தொழில் மிக வும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகவே, மானியத்தை கூடுதலாக்கி தர வேண்டும். வரி இல்லா டீசல் வழங்கி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.
தஞ்சை மாவட்ட விசைப்படகுகளை ஆய்வு செய்து, அருகாமையில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் போல் ஐந்து நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து வர அனுமதி வழங்க வேண்டும். இதனால் எரிபொருள் சிக்கனம் ஏற்படு வதுடன், மீனவர் வாழ்வாதாரம் உயரும். எனவே அமைச்சர் மற்றும் ஆணையர்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.