என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "frauds"
- ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் போலீசில் புகார்
- கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 29). இவர் நெட் வொர்க் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,
கடந்த 8-ந்தேதி எனது வாட்ஸ் ஆப்க்கு தேவிகா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் யூடியூபர்களுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் அவர்களுக்கு சந்தாதாரர்களை அதிகரிக்க மார்க்கெட்டிங் செய்வதாகவும் கூறினார். இந்நிலையில் டெலிகிராமில் தனது விளம்பர வீடியோக்களை பார்த்து, அதனை ஸ்கிரீன் சாட் எடுத்து அனுப்பினால் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதை உண்மை என நம்பிய நானும் விளம்பர வீடியோ பார்த்தேன். பின்னர் ரூ.150 முதலீடு செய்ய சொன்னார். நானும் பணம் அனுப்பினேன். அதில் எனக்கு சிறிது பணம் வந்தது. பின்னர் எனது வங்கி கணக்கில் இருந்து தவணை முறையில் பல கட்டங்களாக ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து இரு நூறு அனுப்பினேன். ஆனால் எனக்கு கமிஷன் எதுவும் கிடைக்கவில்லை. பணத்தை பெறுவதற்காக நான் அவரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அந்த நபர் சரிவர பதில் அளிக்கவில்லை. எனவே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி, நியூ காலனி போன்ற பகுதியிலிருந்து வீடுகளில் சமையல் கியாஸ் போடுபவர் கியாஸ் சிலிண்டரை வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை என்று ஆதம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீடுகளில் சிலிண்டர் போடுபவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். வெங்கடேசன் (40) பிடித்து விசாரணை செய்யும்போது அவர் வழக்கமாக போடும் வீடுகளில் சென்று காலியான சிலிண்டர் வாங்கிக் கொண்டு புது சிலிண்டர் தருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது.
அவர் சுமார் 50 சிலிண்டருக்கு மேல் திருடி இருக்கிறார். இதுகுறித்து அவர் வேலை செய்யும் கியாஸ் ஏஜென்சியில் விசாரித்த போது வெங்கடேசன் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாகவே வேலையை விட்டு நின்று விட்டார் என்று கூறினர்.
ஆனால் போலீசார் சிலிண்டரை கொடுத்த வீடுகளில் விசாரித்தபோது வெங்கடேசன் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சிலிண்டர் போடுவதாகவும் பழக்கத்தின் பேரில் காலி சிலிண்டரை கொடுத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் வெங்கடேசன் பில் வைத்துதான் சிலிண்டர் விநியோகித்து வந்தார் என்று தெரிய வந்திருக்கிறது.
கியாஸ் ஏஜென்சியோ ஒன்றரை வருடத்திற்கு முன்பே வேலை விட்டு நின்று விட்டார் என்று கூறுகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பாக வேலையை விட்டு நின்ற அவருக்கு எப்படி ஒரிஜினல் பில் கிடைக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #gascylinder
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்