என் மலர்
நீங்கள் தேடியது "GK Mani"
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை காலை 10.30 மணிக்கு பாராட்டு விழா தொடங்குகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான ஜி.கே.மணிக்கு த.மா.கா சார்பிலே பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க வில் சாதாரண உறுப்பினராக செயல்படத் தொடங்கி படிப்படியாக கடின உழைப்பால் உயர்ந்து தலைவர் ஸ்தானத்தை அடைந்தவர். கட்சியினருக்கு நம்பிக்கையும், ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவரின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. பா.ம.க.வின் வளர்ச்சிக்காக, தொண்டர்களின் உயர்வுக்காக, தமிழக மக்களின் நலன் காப்பதற்காக பா.ம.க வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆற்றும் பணிக்கு, தலைவராக ஜி.கே. மணி மேற்கொள்ளும் பணி மென்மேலும் வளர, சிறக்க, உயர-நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூரைச் சேர்ந்த வி.ஜி.கே. மணி தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மாவீரன் குரு பரிந்துரைத்ததன் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இரு முறை நீக்கப்பட்டவர். அவர் மீண்டும் சேர்க்கப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நபரான வி.ஜி.கே. மணி, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபரான வி.ஜி.கே.மணி, அண்டை மாவட்டங்களான அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று கட்சியின் பெயரால் நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்.
டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்புரைகளில் அந்த நபர் ஈடுபட்டு வருகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அவர் கட்சிக் கொடியை காரில் பறக்க விடுவதை ஏற்க முடியாது.
கட்சிக் கொடியை உடனடியாக காரிலிருந்து அகற்றாவிட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே. மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும், சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இன்று முதல் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண் டாம்.
மேலும், வி.ஜி.கே. மணி பற்றி சமூக ஊடகங்களில் எந்தப் பதிவும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தன் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க. சார்பில் ‘பாலாறு காப்போம், பாசனத்தை பெருக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் வேலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் 22-ந்தேதி காலை 10 மணிக்கு பிரசார பயணம் தொடங்குகிறது. இந்த பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
இந்த பிரசார பயணம் புல்லூரில் தொடங்கி வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் சென்று இரவு வேலூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
23-ந்தேதி காலை தாமல் பகுதியில் தொடங்கி வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சென்று காஞ்சீபுரத்தில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பிரசார பயணம் அரசியல் ரீதியாக இல்லாமல் நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவேண்டி நடைபெறுகிறது. பாலாற்று பகுதியில் ஆந்திர அரசு கட்டும் தடுப்பணைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
தமிழ்நாட்டில் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. காமராஜர் காலத்தில் 9 அணைகள் கட்டப்பட்டன. அதற்குபிறகு வந்த எந்த ஆட்சியும் பெரிய அணையை கட்டவில்லை. தமிழக அரசு நீர்மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன். இதில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்.
குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடைபெறுகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.
தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கோதாவரி, பாலாற்றை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #AnbumaniRamadoss
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்டை மாநிலங்களில் நீர் மேலாண்மை மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் நீர் மேலாண்மை சரியாக செயல்படுத்தாமல் இருப்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. அதனால், கொள்ளிடத்தில் தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக செல்கிறது. கொள்ளிடம் அணை இடிந்ததற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம். மற்ற மாநிலங்களில் விவசாய பரப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் குறிப்பிட்ட அளவு மணல் அள்ளுவதற்கு பதிலாக 40 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டி மணல் அள்ளுகின்றனர். நாளைய சந்ததியினருக்கு ஊற்றுநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. முக்கொம்பில் புதிய அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கட்டப்படும் புதிய அணை பல வருடங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #Mukkombu
மதுரையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
வருகிற செப்டம்பர் மாதம் 1,2-ந் தேதிகளில் ‘வைகையை காப்போம், விழிப்புணர்வு கொள்வோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த பிரசாரம் வைகை அணையில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது 40 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு அணையை பராமரிக்காததும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் தான் காரணம்.
வைகை நதியை பராமரித்து பாதுகாத்தால் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கின்ற அணையையும் பராமரிக்கவில்லை. இதனால் தான் மழை காலங்களில் 40 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கிறது.

ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா என்பதை தற்போது கூற முடியாது. விரைவில் இது தொடர்பாக ராமதாஸ் முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss #GKMani
சேலம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.கட்சி தொடங்கப்பட்டு 29 ஆண்டுகளை நிறைவு செய்து இப்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. பா.ம.க.தான் கொள்கையை சொல்கிற கட்சி, மக்கள் பிரச்சனைக்கு போராடுகிற கட்சி, டாக்டர் ராமதாஸ் அவர்களின் நாள்தோறும் அறிக்கை பெரிய வலுசேர்த்து இருக்கிறது. இதெல்லாம் நாளை தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அறிகுறிகள் என்பது தான் இப்போதைய யதார்த்த நிலையாக உள்ளது.

அவ்வாறு செய்தால் ஏரிகளில் 2, 3 ஆண்டுகள் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது தான் மாவட்டம் செழிக்கும். அரசு காலம் தாழ்த்தக் கூடாது. உடனே இதை நிறைவேற்ற வேண்டும்.
அரசு லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. பருப்பு, அரிசி எந்த பொருட்களும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை. இதனால் விலைவாசி உயருமோ என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தால் அவர்களை அழைத்து பேசி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #LorryStrike
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது. அதனால் தான் 1987-ஆம் ஆண்டில் நடைபெற்ற சமூகநீதிப் போராட்டத்தின் மகத்துவம் அவருக்கு புரியவில்லை. அது ஒரு தியாக வரலாறு. அந்த வரலாற்றின் கதாநாயகர் மருத்துவர் அய்யா.
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதைப் போல, சமூக நீதியும் சும்மா கிடைத்துவிடவில்லை. 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்து, மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறை தண்டனைகளை அனுபவித்து அதன்பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் உரிமைக்காக போராடுவோரை எல்லாம், யாரோ சொல்லிக் கொடுத்தவாறு, சமூக விரோதிகள் என்று கிளிப் பிள்ளை போன்று கூறும் தமிழிசை சமூக நீதிப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதை பெரும்பான்மை சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
மருத்துவர் அய்யா சொந்த சாதிக்காக மட்டும் போராடும் வழக்கம் கொண்டவர் அல்ல. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் அதற்கான முதல் குரல் மருத்துவர் அய்யாவிடமிருந்து தான் வெளிப்படும்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழிசை சவுந்தரராஜன் சார்ந்த நாடார் சமூகத்தினரைப் பற்றி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் எட்டாம் வகுப்பு புத்தகத்தில் இழிவாக பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்த மருத்துவர் அய்யா தான், முதன்முதலில் மத்திய இடைநிலைகல்வி வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமது செலவில் சட்டப்போராட்டம் நடத்தி நாடார் சமுதாயம் குறித்து பாடப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இழிவான கருத்துக்களை நீக்க வைத்தார்.
அதற்காக நாடார் அமைப்புகள் மருத்துவர் அய்யாவுக்கு பாராட்டு விழா நடத்திய போது, அதை தடுக்க முயன்று தோற்றுப் போனவர் தான் தமிழிசை. அவரது சிந்தனை எவ்வளவு கோணலானது என்பதற்கு இதுவே சாட்சி.
108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த மருத்துவர் அய்யாவின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக மருத்துவர் அய்யாவிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும்வரை தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக பாட்டாளி மக்களின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PMK #BJP #TamilisaiSoundararajan #GKMani