என் மலர்
நீங்கள் தேடியது "Gold ring"
- அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
ராஜபாளையம்,
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தென்காசி எம்.பி. தனுஷ்குமார், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா ஆகியோர் தங்க மோதிரங்களை அணிவித்தனர்.
மேலும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர்கள் உமா, மாரியப்பன், தி.மு.க. நகர செயலாளர்(தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணைத்த லைவர் கல்பனா குழந்தை வேலு, மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் ஆனந்த், 42-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் 42-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
- அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.
- ராமநாதபுரம் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்/
தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொகுதி பொறுப்பாளர்கள் முத்துராமலிங்கம், குழந்தை வேலு, ஜூடு, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
- திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க இன்று வியாழக்கிழமை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி,ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டு மற்றும் கிளை பகுதிகளில் பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும்கழக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.,வேலுமணிதலை மையிலும்எனது முன்னிலையிலும் கீழ்கண்ட இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அதன்படி காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் காலை 10:30 மணிக்கு என்.எஸ்.என்.திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாலை 6 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதுசமயம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அமைப்புச் செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநில நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பகுதி,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி, வார்டு மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பூத் ஏஜெண்டுகள் மற்றும் உறுப்பினர்கள்,மகளிரணி நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்,பாசறை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர்,கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவித்திருந்தார்.
- 2-வது பிரசவத்துக்காக பெரியக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோ ட்டையில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பிரசவம் நடை பெறாததாலும் பொதுமக்க ளுக்கு இருக்கும் அச்சத்தை போக்கும் விதமா கவும் அங்கே மருத்துவராக பணிபு ரியும் மணவழகன் இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவி ப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கனாவூர் மேலதெருவை சேர்ந்த தர்மராஜ் மனைவி சுமித்ரா (வயது 23) இரண்டாவது பிரசவத்துக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இரவு நேரத்திலும் பெண் மருத்துவர் பூர்வி சிகிச்சை அளித்தார்.
அவருக்கு உறுதுணையாக செவிலியர்கள் வினோதா, கலா, சூசைஅந்தோனி, ஆயா செல்வி இருந்தனர்.
சுகப்பிரசவம் செய்ததில் சுமித்ராவுக்கு பென் குழந்தை பிறந்தது.
இதையடுத்து டாக்டர் மணவழகன் ஏற்கனவே கூறியது போல பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோ மூலமாக அணிவித்தார்.
- கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
- வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இது மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தத்தால் அருவிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து செல்கின்றனர். நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
அருவியில் குளித்து கொண்டிருந்தபோது அவர் கையில் வந்திருந்த 6.5 கிராம் தங்க மோதிரத்தை தண்ணீரில் தவறவிட்டார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து தாமோதரன் தவறவிட்ட மோதிரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா சுற்றுலா பயணியான தாமோதரனை வரவழைத்து அவருடைய தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
மோதிரம் காணாமல் போன ஒரேநாளில் அதனை மீட்டு கொடுத்த வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா.
- தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.
உடுமலை :
உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை நகர பா.ஜ.க. சார்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம், நகர பொதுசெயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் , திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் , திருப்பூர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய கண்ணன், நகர சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கோட்டைவேங்கைபட்டி அமைந்துள்ள சமத்துவபுரம் வீடுகளை வருகிற 8-ந்தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா சமத்துவபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்,
அதனைத்தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் சமத்துவபுரம் முன்பகுதியில் மரக்கன்றுகளை அமுதா நட்டார். இந்தஆய்வின்போது அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் பெரியகருப்பன் அணிவித்தார். மேலும் அங்கு உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் உணவு பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து பேரூராட்சி முன்பு கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 199 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பாரதம் திட்டத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
இதில் சிங்கம்புணரி நகர்மன்ற சேர்மன் அம்பலமுத்து, துணைச் சேர்மன் செந்தில்குமார், செயல் அலுவலர் ஜான்முகமது ஞானிசெந்தில் மற்றும் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை, ஆக.25-
தே.மு.தி.க. பொது செய லாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
இதையொட்டி புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை, புனித அந்தோ ணியார் ஆலயத்தில் பிரார்த் தனை, தொழிற்சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடி யேற்று விழா, அன்ன தானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடந்தது.
தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப் பட்டது. மேலும் உள்நோயா ளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்கினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி னர். இதைத்தொடர்ந்து 40-வது வார்டில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந் தது. நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு, அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்த குமார், வனிதா துரை,
செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்து குமார், பன்னீர்செல்வம், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
இன்று மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.