என் மலர்
நீங்கள் தேடியது "Gukesh"
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 3 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி சுமார் 5 மணி நேரத்தை கடந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 7 போட்டிகளில் இருவரும் தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் குகேஷுடனான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 7 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என 3.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 8-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி மீண்டும் டிராவில் முடிந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7, 8-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 8 போட்டிகளில் இருவரும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
- 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது/ World Chess Championship as the ninth game between Indian challenger D Gukesh and defending champion Ding Liren of China ended in yet another draw to still level on points here on Thursdayஉலக செஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜி. குகேஷ்- சீனாவின் டிங் லிரென் இடையே சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. 8 சுற்றுகள் முடிவில் இரண்டு பேரும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 8 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு சுற்றில் வெற்றி பெற்றிருந்தனர். மற்று 4 சுற்றுகளும் டிராவில் முடிந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 9-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. இதனால் இருவரும் தலா 4.5 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
நாளை ஓய்வு நாளாகும். நாளைமறுதினம் 9-வது சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 14 சுற்றுகள் வரை போட்டி நடைபெறும். 14 சுற்றுகள் முடிவில் இருவரும் சமமான புள்ளிகள் பெற்றிருந்தால், அதன்பின் வெற்றியை தீர்மானிக்க faster time control கடைபிடிகக்ப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டம் வெல்வார்கள்.
முதல் சுற்றில் டின் லிரென் வெற்றி பெற்றிருந்தார். குகேஷ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். 2-வது, 4வது, 5-வது, 6-வது, 7-வது மற்றும் 8-வது சுற்றுகள் ஏற்கனவே டிராவில் முடிந்திருந்தன.
54-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் போட்டியை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
- 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர்.
- இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 9 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர். முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவையாக உள்ளது. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்வதற்கு குகேஷுக்கும் மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவைப்படுகிறது. இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
- 11 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
- இன்னும் 3 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 11-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்று முடிந்துள்ளது.
- குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார்.
இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்று முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.
இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு இன்று 13-வது சுற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். முந்தைய சுற்றில் தாக்குதல் பாணியை கையாண்ட லிரென் 39-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதனால் இந்த தடவை புதிய வியூகங்களுடன் குகேஷ் களம் காணுவார். குகேஷ் தனது இரு வெற்றியையும் வெள்ளை நிற காய்களுடன் ஆடும்போது தான் பெற்றார். எனவே இன்று அவர் வெள்ளை நிற காய்களுடன் ஆடுவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
முக்கியமான இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் வீரருக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும். ஒரு வேளை எஞ்சிய இரு சுற்றும் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.
- சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- கடைசி சுற்றில் டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சா்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 58 வது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 -வது சுற்றில் சுமார் 4 மணி நேரம் போராடி குகேஷ் வெற்றியை ருசித்துள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
14வது சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
18 வயதிலேயே குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பட்டம் வென்ற நிலையில், குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது 2 வருட தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன்.
ஒவ்வொரு செஸ் வீரருக்கும் உள்ள கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- குகேஷ், சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
18 வயதில் இளைய உலக செஸ் சாம்பியன் ஆனதற்கு டி.குகேஷுக்கு வாழ்த்துகள்!
உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, உலகத்தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்கியதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 18 வயதிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.
- இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா 2 சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 14-வது மற்றும் கடைசி சுற்று போட்டி இன்று நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் சீன வீரரை வீழ்த்தி 7.5 புள்ளிகள் பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.
இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவரது எக்ஸ் பதிவில், "உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சபாஷ் குகேஷ். ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அவரது எக்ஸ் பதிவில், "மிக சிறப்பான சாதனை படைத்த குகேஷ்-க்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவால் கிடைத்துள்ளது. அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான இளம் வீரர்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- கடைசி சுற்றில் குகேஷ், சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷ்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற நம் சொந்த கிராண்ட்மாஸ்டர் டிகுகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
SDAT இன் ELITE பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரது வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் கவனிக்க வைக்கிறது.
இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையைக் கண்டது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது.
பிரகாசிக்கவும், சாம்பியன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இளம் உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- நீங்கள் இன்னும் பெரிய சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் சாம்பியன்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா 2 சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 14-வது மற்றும் கடைசி சுற்று போட்டி இன்று நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் சீன வீரரை வீழ்த்தி 7.5 புள்ளிகள் பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. ப்ரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி அவரது எக்ஸ் பதிவில், "மிகவும் இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை எங்களுக்கு நீ நிரூபித்துவிட்டாய்.. வாழ்த்துகள் சாம்பியன்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி அவரது எக்ஸ் பதிவில், "இளம் உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமையான தருணம். நீங்கள் இன்னும் பெரிய சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் சாம்பியன்" என்று பதிவிட்டுள்ளார்.