என் மலர்
நீங்கள் தேடியது "hanging"
- சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சரவணன். இவர், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
- இவர் குடும்ப பிரச்சினையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்திருப்பது தெரியவந்துள்ளது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சரவணன். இவர், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு சக்திவேல் (வயது 18) என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். சக்திவேலுக்கு 5 வயதாக இருக்கும்போது அவனது தாய் இறந்துவிட்டார். அதன்பிறகு சிறுவனின் தந்தை சரவணன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சக்திவேல் தனது தந்தையுடன் கடையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு சக்திவேலின் தங்கை வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு விரைந்து வந்த சரவணன், கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே மகன் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பரபரப்பு தகவல்
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது.
சேலம்:
சேலம் டவுன் ஜலால் புறா வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி யுவராணி, நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைக் கண்ட யுவராணி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ராஜேந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ராஜேந்திரன் நடத்தி வந்த ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பணம் கட்டியவர்கள், பணத்தை கேட்ட போது அதை தர முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வில்லியனூர் அருகே நோய் கொடுமையால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மேலும் வேலாயுதத்துக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே நோய் கொடுமையால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே சிவராந்தகம் காலனி மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது50). இவருக்கு சுகுணா என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வேலாயுதம் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மேலும் வேலாயுதத்துக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதனால் அவர் கடந்த 5 ஆண்டுகளாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சர்க்கரை நோய் குணமாகவில்லை. அவருக்கு 2 கால் பாதத்திலும் சர்க்கரை நோய் காரணமாக காயம் இருந்து வந்தது. இதனால் வேலாயுதம் கடும் அவதியடைந்து வந்தார்.
இந்த நிலையில் நோய் கொடுமையால் அவதியடைவதை விட இறந்து போகலாம் என அடிக்கடி கூறி வந்தார்.
சம்பவத்தன்று வேலாயுதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி சுகுணா வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் வேலாயுதம் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி சுகுணா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூரில் பஞ்சர் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தனது மனைவியிடம் தன்னால் குடும்பத்துக்கு சம்பாதித்து தரமுடியவில்லையே என்று வேதனையுடன் தெரிவித்து வந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் பஞ்சர் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் கோட்டைமேடு கண்ணகி நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது57). இவர் வில்லியனூர் கோட்டைமேடு-விழுப்புரம் மெயின் ரோட்டில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு அய்யனார் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டார். இதில் தலையில் அடிப்பட்ட அவருக்கு ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து விட்டது.
இதனால் அவர் பஞ்சர் கடையை நடத்த முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அவ்வப்போது தனது மனைவியிடம் தன்னால் குடும்பத்துக்கு சம்பாதித்து தரமுடியவில்லையே என்று வேதனையுடன் தெரிவித்து வந்தார்.
இந்தநிலையில் விஜயா சுயஉதவி குழுவில் பணம் செலுத்துவதற்காக பக்கத்து தெருவிற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அய்யனார் மின் விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.
- இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை ஏரங்காட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சேகர் (23) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த சிந்து (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சிந்துவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர்களை ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் அவர்களது குழந்தை நிச்சிகாவை, சிந்து வின் தந்தை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் மாலை அழைத்து வந்தார்.
அப்போது சேகர், சிந்துவிடம் ஏன் குழந்தையை அங்கு அனுப்புகிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கள் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் வெளியில் சென்றுள்ளார்.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிந்துவின் பெற்றோருக்கு தகவல் தெரி வித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிந்துவை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சிந்துவை மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சேகர்-சிந்து திரு மணம் நடந்து 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மற்றும் ஏ.எஸ்.பி. விசாரணை நடக்கிறது.
- மணிகண்டன் கோணவாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
- இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி பசுவேஸ்வரர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி நாகராணி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகராணி தார்பாய் தைக்கும் வேலை பார்த்து வருகிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்ற னர். நாகராணி குழந்தை களுடன் பவானியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மணிகண்டன் லட்சுமி நகர் அருகில் உள்ள கோண வாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் உடனே மணிகண்டனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நாகராணி அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மனைவி-குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை யில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது தாயார் வெளியே சென்றிருந்த நேரத்தில் கார்த்திகேயன் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
மனைவி-குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை யில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அம்மா நகரை சேர்ந்தவர் கார்த்தி கேயன்(வயது38). கட்டிட தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
திருமணமான முதல் கார்த்திகேயன் குடு ம்பத்துடன் கூடப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடவில்லை. கடந்த 5 மாதத்துக்கு முன்பு கார்த்திகேயன் மது குடித்து விட்டு வந்ததால் அவரிடம் இனிமேல் மது குடித்து விட்டு வந்தால் வீட்டுக்கு வரக்கூடாது என்று கண்டித்தார்.
இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வில்லியனூர் அம்மாநகரில் உள்ள தனது தாய் வீட்டில் கார்த்திகேயன் இருந்து வந்தார். தினமும் மனைவி-மகன்களை பார்க்க முடியாமல் கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது தாயார் வெளியே சென்றிருந்த நேரத்தில் கார்த்திகேயன் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் மோகன் என்ற மோகன் குமார் (வயது 22).
அவர் வீட்டு மாடியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. மோகன்குமார் வேலை முடிந்து இரவு நஞ்ச கவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கி வந்தார்.
இந்த நிலையில் மோகன் குமார் நஞ்சகவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் இரவு தூங்க சென்றார். காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவி னர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்தனர்.
அப்போது மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.தோப்பூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 20). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது பெருநாழியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரும், கீர்த்தனாவும் காதலித்ததாக கூறப்படு கிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் விரக்தி அடைந்த கீர்த்தனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினர். பின்னர் அருப்பு க்கோட்டை போலீசார் கீர்த்தனா-அப்துல்ரகுமானை அழைத்து அறிவுரை கூறி னர். ஆனாலும் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்ரகுமான் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வேறொரு பெண்ணை காதலிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனால் கீர்த்தனா யாருடனும் பேசாமல் விரக்தி யுடன் காணப்பட்டார். பெற்றோரும் மகளை சமரசம் செய்தனர். ஆனா லும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தனா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காரியா பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக சுந்தரமூர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி ஆதிசக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 37). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டி ச்சாவடி போலீஸ் சரகம் சின்ன காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித்குமார் (வயது 30), டிரைவர். இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டி லிருந்து வெளியே சென்ற ரஞ்சித் குமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெட்டிச்சாவடி எஸ்.ஆர்.வி. நகரில் உள்ள மரத்தில் ரஞ்சித் குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை காவல்துறை சி.பி.சி.ஐ.டி. பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் வில்லியனூர் ஜி.என் பாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
இவருக்கு வள்ளி என்ற மனைவி, வெங்கடேசன் என்ற மகன், பிரதீபா என்ற மகள் உள்ளனர். பிரதீபா மற்றும் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்தில் கல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடி க்கப்பட்டது.
இந்நிலையில், நோய் குணமடைய தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக விடுமுறையில் வீட்டிலிருந்த சக்திவேல் வீட்டுக்குள் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு இரும்பு தூணில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சக்திவேல் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சக்திவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி. ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.