என் மலர்
நீங்கள் தேடியது "haryana"
- அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
புதுடெல்லி:
மராட்டிய மாநில சட்ட சபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதி நிறைவு பெற உள்ளது. அதுபோல அரியானா மாநில சட்டசபை யின் 5 ஆண்டு கால பதவி காலம் நவம்பர் 3-ந்தேதி நிறைவு பெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிய உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் முதல் செய்ய தொடங்கியது.
இதனால் இந்த 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். முதல் கட்டமாக இந்த 4 மாநி லங்களிலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு உயர் அதிகாரிகளை மாற்றம் செய்யும் பணி நடந்தது.

இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் 4 மாநிலங்களிலும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்தது. அதோடு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தியது. அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஓட்டுப்பதிவை எப்போது நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 மாநிலங்களுக்கும் சென்று வந்தனர்.
குறிப்பாக காஷ்மீரில் பாதுகாபபு ஏற்பாடுகள் பற்றி கடந்த சில தினங்களாக தீவிர ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.
இதையடுத்து 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதனால் இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இதையடுத்து 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்த தொடங்கி உள்ளன.
இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. மராட்டி யத்தில் பா.ஜ.க.-சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
காஷ்மீரில் யூனியன் பிரதேச கவர்னர் மூலம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மிக மிக தீவிரமாக உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் இப்போதே களை கட்ட தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட சபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல அரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 3-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந்தேதி நடக்கிறது.
இந்த தேர்தலோடு மராட்டியம் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.
இந்த நிலையில் காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது. அதன் பிறகு தான் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்க ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி வெளியாகும்.
மராட்டிய மாநில சட்ட சபையின் பதவி காலம் நவம்பர் 26-ந்தேதியும் , ஜார்க்கண்ட் மாநில சட்ட சபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது.
மராட்டிய மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் மராட்டிய தேர்தலோடு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
- காங்கிரசில் வினேஷ் போகத் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.
வினேஷ் போகத் அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரியானாவில் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான பூபிந்தர் சிங் ஹுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வினேஷ் போகத் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
வினேஷ் போகத்திடம் பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூபிந்தர் சிங் ஹுடா, "எங்கள் கட்சியில் இணைவது குறித்து வினேஷ் போகத் தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முடிவு அவர் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
அரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த பீகாரைச் சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சாபிரை தாக்கிய பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
- அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
- அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் முதல் மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அரியானாவில் பிஜோனி சமுதாய மக்களின் முக்கிய பண்டிகை தேர்தல் நடைபெறவிருந்த நாளன்று வருவதால் அக்டோபர் 1-ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
- அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்டது.
அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சாபிரை தாக்கிய பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
பசு பாதுகாப்பு கும்பலின் இந்த வெறிச்செயல் குறித்து பேசிய அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆதலால் இதனை கும்பல் கொலை என்று கூறுவது சரியல்ல. கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்? இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. இந்த சம்பவங்கள் துரதிஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்தார்.
- ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் டொயோட்டா பார்ட்சியூனர் கார்களில் பசு கடத்தப்படுவதாக குண்டர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது
- கார் நின்றவுடன் அவர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஆர்யன் மீது மேலும் ஒரு குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
அரியானாவில் காரில் பசுவைக் கடத்தியதாகத் தவறாக நினைத்து 12 வகுப்பு மாணவனை 5 பசு பாதுகாப்பு குண்டர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் டொயோட்டா பார்ட்சியூனர் கார்களில் பசு கடத்தப்படுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து சட்டவிரோதமான துப்பாக்கிகளுடன் கிளம்பிய கிருஷ்ணா,அணில் கௌசிக், வருண்,சவுரப் ஆகிய 5 பசு பாதுகாப்பு குண்டர்கள், படேல் சவுக் சாலையில் வந்த ரெனால்ட் டஸ்ட்டர் டாக்சி காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் டாக்சி டிரைவர் ஹர்ஷித் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த காரை சுமார் 30 கிலோமீட்டர்க்கு தங்களது வாகனத்தில் துரத்திச் சென்ற பசு பாதுகாப்பு குண்டர்கள், காருக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர், இதில் தனது நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா மீது குண்டு பட்டு படுகாயமடைந்துள்ளார். கார் நின்றவுடன் அவர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஆர்யன் மார்பில் மேலும் ஒரு குண்டு துளைத்தது.
அதன்பின்னரே தாங்கள் தவறான காரை துரத்தியுள்ளோம் என்று அறிந்த பசு பாதுகாப்பு குண்டர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆரியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தற்போது பசு பாதுகாலவர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தின் பேரில் இந்த கொலை பசு கடத்தல் தொடர்புடையது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் சந்திக்க ராகுல் காந்தி தீவிரம்.
- இரு கட்சிகளுக்கும் இடையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்.
அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் காந்தி கருத்து கேட்டார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து பாஜக-வை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியானது.
ராகுல் காந்தியின் கூட்டணி குறித்த கருத்தை ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சங் சிங் வரவேற்றிருந்தார். அத்துடன் மற்றொரு மாநிலங்களவை எம்.பி. ராகவ் சந்திரா காங்கிரஸ் சீனியர் தலைவர் கே.சி. வேணுகோபால் உடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் சந்திப்பு இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இரண்டு கட்ட பேச்சுவார்த்தையின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரியானாவில் 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற அடிப்படையில் 10 இடங்கள் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏழு தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 90 இடங்களில் 66 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலுக்கு மத்திய தேர்தல் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் தீப் பபாரியா "இரு கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில்தான் உள்ளது. இன்னும் ஏராளமான விசயங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது 90 இடங்களில் 49 இடங்கள் குறித்து இரண்டு நாட்கள் ஆராயப்பட்டன. மொத்தமாக 66 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது." என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, வியாழக்கிழமை இதற்கு தெளிவு கிடைக்கும் என்றார்.
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் "கூட்டணி தொடர்பாக, இடங்கள் தொடர்பாக என எந்தவொரு முடிவு என்றாலும், அதை அரவிந்த் கெஜ்ரிவால்தான் எடுப்பார்" என்றார்.
- அரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
- தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அரியானா மாநில அரசு அலவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள், சுமார் 40,000 இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் இந்த வேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை ஆளும் மாநில பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- வினேஷ் போகத், பஜ்ரங் புனியா நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
- அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர். இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத் மற்றும் பஜ்ர்ங் புனியா சந்திப்பு மூலம் கடந்த வருடம் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது நிரூபணம் ஆகியுள்ளது என மத்திய உள்துறை மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களின்போது நமது விளையாட்டு வீரர்கள் அரசியல் பிரமைக்குள் சிக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். அன்று ஆரம்பித்தது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவர்கள் (மல்யுத்த வீரர்கள்) காங்கிரஸிடம் சீட்டு கேட்கிறார்கள். இதன் பொருள் ஒரு இணைப்பு உள்ளது என்பதாகும். அப்போது அது தெளிவாக இல்லை என்றால், இப்போது அது முற்றிலும் தெளிவாக உள்ளது.
இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங்கிங்கு எதிராக பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூஷன் இளம் ஜூனர்ய மல்யுத்த வீராங்கனைகளுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.
- தனது பெயர் பட்டியலில் இருக்கும் என நம்பியதாக அவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் சேர மும்முரம் காட்டி வருகிறார்.
அரியானா, பாஜக, சட்டமன்றத் தேர்தல், பாஜக, வேட்பாளர் பட்டியல், வீடியோ மாநிலத்தில் கடந்த 2014 முதல் பா.ஜ.க. தலைமயிலான அரசு ஆட்சியில் உள்ளது. தற்போது அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக அக்டோபர் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த தேர்தல் ஆணையம் அதன்பின்னர் தேதியை மாற்றியுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது பாஜகவுக்குச் சாதகமான செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் தேர்தலுக்கான தனது 67 வேட்பாளர்களின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது . இதில், லத்வா தொகுதியில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார். பாஜக வெளியிட்ட பட்டியல் அக்கட்சியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாக அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் பட்டியல் வெளியான மறுநாளே கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
ரணியா தொகுதிக்குத் தனது பெயர் அறிவிக்கப்படாத அதிருப்தியில் முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனும், மாநில எரிசக்தி மற்றும் சிறைத்துறை அமைச்சருமான ரஞ்சித் சிங் சவுதாலா பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகினார். சீட் கிடைக்காத விரக்தியில் பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் சேர மும்முரம் காட்டி வருகிறார்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சஷி ரஞ்சன் பார்மரிடம் அவருக்கு ஏன் சீட் தரவில்லை என்று பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, தனது பெயர் பட்டியலில் இருக்கும் என நம்பியதாக அவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுபோல தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் ஓபிசி பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான கரண் தேவ் காம்போஜ் கட்சி மீட்டிங்கில் முதலமைச்சர் நயாப் சிங் சைனியுடன் கை குலுக்க மறுத்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இதுபோல சீட் கிடைக்காதவர்கள் வெளிப்படையாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது.
- ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் 10 இடங்களை கேட்கிறது ஆம் ஆத்மி.
- ஏழு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது.
அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற வகையில் ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களை கேட்கிறது.
ஆனால் ஏழு தொகுதிகள் மட்டுமே வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது. இதனால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 12-ந்தேதி கடைசி நாளாகும். அதற்கு முன்னதாக கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகவ் சதா கூறுகையில் "காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைவதில் மகிழ்ச்சியாக உள்ளன. கூட்டணி அமையும் என நம்பிக்கை உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12-ந்தேதியாகும். அதற்கு முன் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்லது இரு கட்சிகளுக்கு ஆதாயம் என்ற நிலை இல்லாமல் இருந்தால், நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை விட்டுவிவோம்.
கூட்டணிக்கான நேர்மறையான நிலை சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவா்த்தைகள் நல்ல நிலையில் இருக்கிறது. அரியானாவின் நலன், நாட்டு மக்களின் நலன், ஜனநாயத்தின் நலனுக்கான பேச்சுவார்த்தை நல்லதாக முடியும் என நம்புகிறேன். பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்ட அனைத்தையும் வெளிப்படையாக கூற முடியாது" என்றார்.