என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Head Coach"

    • அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

    சென்னை:

    10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யின் புதிய தலைமை பயிற்சியாளராக ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார்.

    அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் பிரபலமான பிரிமீயர் லீக் கால்பந்தில் பர்ன்லி, போல்டன் ஆகிய கிளப் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

    57 வயதான ஓவென் கோயல் கூறுகையில், 'சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவது உண்மையிலேயே உற்சாகம் தருகிறது. கடைசியாக சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த கிளப் ஏற்கனவே இரு முறை பட்டம் வென்றுள்ளது. அதே போன்று மீண்டும் சாதிக்க முயற்சிப்போம். புதிய சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.

    • ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.
    • இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. கடந்த முறை அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


    இதனை தொடர்ந்து ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது.
    • ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. லாராவின் பதவி காலம் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரியை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நிர்வாகம் நியமித்துள்ளது.

    முன்னதாக ஆர்சிபி அணி புதிய பயிற்சியாளரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரவி சாஸ்திரி பதவி காலம் 2021-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடருடன் முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தம் செய்தது.

    சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது. அவரது பயிற்சியின் கீழ் 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியில் அவர் நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடருக்கு பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அவர் தனது முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை.
    • எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது.

    இதனையடுத்து அவரது பதவி காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது. ராகுல் டிராவிட்டில் முடிவுக்காக பிசிசிஐ காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமத்துக்கு ராகுல் டிராவிட் தற்போது சரி என தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் ரத்தோர், டி திலீப் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் இந்திய அணியில் தொடருவார்கள்.

    இது குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:- 

    இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் தோல்வியையும் வெற்றியையும் கண்டிருக்கிறோம். இந்த பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனித்துவமானது. டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் அமைத்துள்ள கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

    இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது பார்வையை ஆதரித்ததற்காகவும், ஆதரவை வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம்.

    மும்பை:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    இதற்கிடையே, டிராவிட் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடியவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

    மேலும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பிசிசிஐ தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கியது.

    இதற்கிடையே, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. நேற்று தெரிவித்தது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

    • ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார் எனத் தெரிகிறது.
    • கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இவருடைய பயிற்சி காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அவருடைய பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

    ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இதனால் பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் தலைமை பயிற்சியாளராக இருக்கும் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் விருப்பம் இல்லை எனக் கூறியதாக தெரிகிறது.

    இதனால் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புகிறது எனத் தகவல் வெளியானது. ரிக்கி பாண்டிங், பிளமிங் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் உலா வருகின்றன.

    இதற்கிடையே கவுதம் கம்பீரை பிசிசிஐ சார்பில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியானது. இதனால் கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    இந்தியின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்தால், அதில் ஆர்வம் உள்ளது. வீரர்களுக்கு டெக்னிக்கல் திறனை சொல்லிக் கொடுப்பதைவிட அணி மேலாண்மை திறன் குறித்து பயிற்சி அளிப்பததான் முக்கியம்.

    விண்ணப்பம் செய்வேனா என்பது எனக்குத் தெரியாது. இந்திய அணியின் பயிற்சி, நபரின் (வீரர்) மேலாண்மை திறன் பற்றியது. அவர்களுக்கு எப்படி டிரைவ் ஆட வேண்டும், புல் ஷாட் ஆட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிப்பது அல்ல.

    இது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்களுக்கு உங்களால் சில வழிகாட்டுதல்களை கொடுக்க முடியும். கிரிக்கெட் எனக்கு ஏராளம் கொடுத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன்.

    ஜூலை 1-ந்தேதியில் இருந்து 2027 டிசம்பர் 31-ந்தேி வரை அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் ஆகும்.

    • ஜூலை மாதம் முதல் 2027 டிசம்பர் மாதம் வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட வேண்டும்.
    • வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு சரிபட்டு வராது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளராக விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.

    தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் 2025 ஜூலை முதல் 2027 டிசம்பர் மாதம் வரையாகும். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் ஸ்டீபன் பிளமிங் யோசிப்பதாக தகவல் வெளியானது. எம்.எஸ்.டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக பிசிசிஐ தன்னை அணுகியது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வாய்ப்பை நிராகரித்தாகவும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இருந்தால் இதை ஏற்பேனா என்பதை அறிந்து கொள்வதற்காக, ஐபிஎல் போட்டியின்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல நடைபெற்றது. நான் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை விரும்புகிறேன். ஆனால் எனது வாழ்க்கையில் கூடுதலான நேரத்தை ஆஸ்திரேலியாவில் செலவழிக்க விரும்புகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக நீங்கள் பதவி ஏற்றுக் கொண்டால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே, தலைமை பயிற்சியாளராக விரும்பினால், ஐபிஎல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    மேலும், தலைமைப் பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலையாகும். இப்போது எனது வாழ்க்கை முறைக்கும் நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களுக்கும் தலைமை பயிற்சியாளர் பதவி பொருந்தாது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    • 10 முதல் 11 மாதம் அணியுடன் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு ஒத்து வராது- ரிக்கி பாண்டிங்.
    • பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன்- ஜஸ்டின் லாங்கர்.

    இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை கோரியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற 28-ந்தேதி கடைசி நாளாகும்.

    வெளிநாட்டு பயிற்சியாளரை பிசிசிஐ விரும்புவதாகவும் ஸ்டீபன் பிளமிங் அல்லது ரிக்கி பாண்டிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேவேளையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் "தலைமை பயிற்சியாளர் பதவிக்கான பிசிசிஐ தன்னை அணுகியது. தன்னுடைய வாழ்க்கை முறைக்கு தற்போது அந்த பதவி பொருந்தாது" எனத் தெரிவித்திருந்தார்.

    மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்தியாவில் தலைசிறந்த முன்னாள் வீரர்கள் உள்ளபோது, ஏன் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் எனவும் விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் யாரிடமும் பிசிசிஐ கோரிக்கை வைக்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.
    • ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக கைப்பற்றி ராகுல் டிராவிட் இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

    ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதன்படி முன்னாள் இந்திய அணி வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோர் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளனர்.


     

    இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் நியமனம் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.

    எனினும், இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஐ.சி.சி. போட்டி தொடர்கள் நடைபெற உள்ளன. 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி, இதைத் தொடர்ந்து 2027 ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    அப்போது இந்திய வீரர் ரோகித் சர்மா 40 வயதை கடந்திருப்பார். விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா 39 வயதில் இருப்பர். அந்த வகையில், 2027 உலகக் கோப்பை தொடரில் இவர்கள் விளையாடுவது அவரவர் உடல்திறன் சார்ந்தே முடிவு செய்யப்படும். அந்த வகையில், புதிய தலைமை பயிற்சியாளர் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு பின்பு இந்திய அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கிய பொறுப்பில் இருப்பார்.

     


    இதைத் தொடர்ந்து இந்திய அணியில் மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்ற வைகயில், பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சரியான வீரர்களை கண்டறிவது மற்றும் வீரர்களை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவது புதிய தலைமை பயிற்சியாளருக்கு சவாலாக இருக்கும்.

    டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறும் நிலையில், இவருக்கு மாற்றாக டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தவிர கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த பதவிக்கு கடும் போட்டியாளர்களாக இருப்பர். டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்கல் இருக்காது என்ற வகையில், ஒருநாள் போட்டிக்கான அடுத்த கேப்டனை தேர்வு செய்வது மிக முக்கிய பணியாக இருக்கும்.

    தற்போதைய கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக பங்காற்றி வருகிறார். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரை தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் வீரர் யார் என்பதை முடிவு செய்வதும் அதிக சவாலான ஒன்றாக இருக்கும்.

     


    கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணி கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடைசியாக விளையாடிய இரண்டு ஐ.சி.சி. தொடர்களில் நடைபெற்ற 20 போட்டிகளில் 19 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

    அந்த வகையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார், டி20 அணிக்கு அடுத்த கேப்டன் யார் என பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் இந்திய அணி தற்காலிக கேப்டன், தற்காலிக பயிற்சியாளருடன் அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு முன்னேற துவங்கி உள்ளது.

    உலக கிரிக்கெட்டில் வலிமை மிக்க இந்திய அணியை அடுத்து வழிநடத்தப் போவது யார், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் இந்திய அணியின் எதிர்காலம் புதியவர்கள் கையில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

    • உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது.
    • இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து 3-வது சுற்றுக்கு வரத் தவறியது. கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்நிலையில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை நியமனம் செய்தது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு.

    மனோலோ மார்கிஸ் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×