என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavyrain"

    • செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய மக்கள் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
    • மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ரெயில்வே தரைப்பாலம் முழுமையாக மழை நீரால் நிரம்பி காணப்படுகிறது.

    எனவே அச்சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் யாரும் மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பால வழியினை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி, யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது வரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

    • சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது
    • இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது.

    தாராபுரம்

    தாராபுரம் பகுதியில் சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மாலையில் 3 மணிக்கு மேல் கருமேகம் சூழ்ந்து ஜில்லென குளிர்காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழை மெல்ல தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக பொழிந்தது.

    மழை மாலையில் 4மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை சூறாவளி காற்றுடன் பெய்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக அலங்கியம் சாலையில் மழை நீர்தேங்கியது. அந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    அதே போல் மூலனூர், போளரை, கரையூர் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கால்நடைகளுக்கு போதுமான புற்கள் காடுகளில் வளர தொடங்கி விடும் என்றும், இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயில் குறைந்து இதமான காலநிலை நிலவியதுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் உஷ்ணத்தில் தவித்த மக்கள் உற்சாகமடைந்தனா்.

    பின்னா் இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது. 

    • ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    பீகாரின் சீதாமர்ஹி என்ற பகுதியில் ராணுவத்தின் இலகு ரக ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச்சென்றபோது ஹெலிகாப்டர் வெள்ளத்தில் இறங்கியது.

    ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    மேலும், மீட்பு பணி வராததால் பொது மக்கள் உதவியுடன் ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால், அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

    பேரிடர்களை கையாளுவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.

    தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

    வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் இதனால், வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

    வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.
    • அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவமழை தொடங்க காரணமாக அமைய உள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது.

    இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.

    அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.

    • இந்தாண்டு இயல்பை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு.
    • டெல்டா, கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மெதுவாக நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும்.

    பிறகு, வட தமிழ்நாட்டை நோக்கி நகரும். வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்குகிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்.

    17ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

    விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    டெல்டா, கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு.

    மீனவர்கள் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

    கனமழை எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பருவமழையை வழக்கமாக எதிர்கொள்வது போல் எதிர்கொள்ளலாம். அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை திட்டமிடலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்மூலம், இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிழக்கு திசை காற்று தென் இந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது.
    • வருகிற 5-ந்தேதி முதல் பருவமழை தீவிரம் அடைய உள்ளது.

    சென்னை:

    கிழக்கு திசை காற்று தென் இந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பருவமழை தீவிரம் அடைய உள்ளது.

    அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

    நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுதினம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேதாரணயத்தில் 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
    • கோடியக்கரை- 6.8 செ.மீ., வேளாங்கண்ணி-4 செ.மீ., திருப்பூண்டி -3.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக தூத்தூக்குடி, நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேதாரணயத்தில் 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோடியக்கரை- 6.8 செ.மீ., வேளாங்கண்ணி-4 செ.மீ., திருப்பூண்டி -3.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக மாறுகிறது.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    ×