என் மலர்
நீங்கள் தேடியது "Himanta Biswa Sarma"
- தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கில் நிலையில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம்.
- தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் செல்கிறார்.
இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தகவலை அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வருகை குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
நாளை மாலை 4 மணிக்கு தேஸ்பூர் விமான நிலையம் வந்து இறங்குகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக காஸிரங்கா செல்கிறார். அங்கு தங்கும் பிரதமர் மோடி, 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு காஸிரங்கா தேசிய பூங்கா செல்கிறார். அங்கு இரண்டு மணி நேரம் இயற்கை சூழல் கொண்ட பூங்காவை சுற்றிப் பார்க்கிறார். காஸிரங்காவில் இருந்து அருணாச்சல பிரதேசம் செல்கிறார்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 1.30 மணியளவில் அசாம் மாநிலம் ஜோர்ஹாத் திரும்புகிறார்.

திக்போய் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சுத்திகரிப்பு நிலையம் 768 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் 510 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கவுகாத்தி சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பராயுனி முதல் கவுகாத்தி வரையிலான 3992 கோடி ரூபாய் மதிப்பிலான பைப்லைன் திட்டத்தை திறந்து வைக்கிறார்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்கிறார். சிவசாகர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஜோர்ஹாட்டில் உள்ள மெலெங் மெத்தேலி போதரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
- தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள்- சாம் பிட்ரோடா
- நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன்- ஹிமாந்தா பிஸ்வா சர்மா
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் "சாம் பாய், நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன். நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம். நாம் மாறுபட்டதாக தோன்றுகிறோம். ஆனால் எல்லோரும் ஒன்றுதான்" என பதிலடி கொடுத்துள்ளார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
- பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.
ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும், மக்களவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. அங்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 4வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் ஒடிசாவில் ஜூன் 10-ந்தேதி பா.ஜனதா பதவி ஏற்கும். ஜூன் 11-ந்தேதி நாங்கள் பி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
என்னுடைய கணிப்பின்படி, ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க இன்னும் ஒருசில இடங்கள்தான் தேவை. ஜூன் 1-ந்தேதி அதுவும் நிரப்பப்படும்.
பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.
இன்று, ஒடிசா இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் வெளி மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து செல்கிறார்கள். மற்றொரு பக்கம் ஒரு லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளது. ஒடிசா இளைஞர்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்யவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.
பிஜு ஜனதா தளத்தின் 5T-ல் ஒரு T-ன் அர்த்தம் டீம் ஒர்க். ஒடிசாவில் ஏதாவது டீம் ஒர்க் நடைபெறுகிறதா?. தேர்வான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள் அவர்களுடைய அதிகாரத்தை செயல்படுத்த முடியவில்லை. அங்கு ஒரே ஒரு டீம்தான் உள்ளது. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவிக்கு இடையிலான ஒரு T. அது தமிழ்நாட்டை குறிக்கும்.
ஒடிசாவில் கேபினட் அமைச்சர்கள் அல்லது எந்த அதிகாரிகளும் அதிகாரத்தை பெறவில்லை. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவி ஆகிய இரண்டு பேரும் அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளனர். நவீன் பட்நாயக்கை பாண்டியன் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். ஒடிசா மக்களின் மரியாதை பெற அவர் அதில் இருந்து வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.
இதுதொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில்,
பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும். ஜஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை- அசாம் முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | On 4 Army personnel who have lost their lives in action in J&K's Doda, Assam CM Himanta Biswa Sarma says," The government will give an answer to Pakistan-sponsored terrorism. It is our duty to maintain peace in Jammu & Kashmir." pic.twitter.com/l2Fk750DZx
— ANI (@ANI) July 16, 2024
- ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது.
- ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது எனக் கூறிய அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
"புள்ளி விவரங்கள் மாதிரியின்படி அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இதன்படி 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும். இது நிஜம், யாராலும் இதை தடுத்து நிறுத்த முடியாது.
ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது. முஸ்லிம் மக்களை தொகையை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் காங்கிரசின் பணி முக்கியமானது.
மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான தூதராக ராகுல் காந்தி ஆனால், அவருடைய பேச்சை மட்டும் கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும்" என்றார்.
- அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
- ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி:
அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
3 முதல் 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது வனப்பகுதியை 2 சதவீதம் அதிகரிக்க உதவும். இதனால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் நமக்கு சாதகமான தாக்கத்தைக் காண்போம்.
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒரே நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.12 கோடி மரக்கன்றுகளை நட்டு 90 சதவீதம் உயிர் பிழைத்துள்ளது.
மரம் நடும் பிரசாரத்தை செயல்படுத்த மாநில அரசு ஏற்கனவே ராணுவம், விமானப்படை, பள்ளிகள், கல்லூரிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் மத்தியப் படைகளை இணைத்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகளை அகற்றி மீட்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காடு வளர்ப்பு இயக்கங்களை அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
- ஒருவர் அவருடைய சாதி பெயரை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி சாத்தியம்?.
- ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சாதி குறித்து கேட்ட முடியும். நாங்கள் அவருடைய சாதி குறித்து கேட்க முடியாது.
நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது பாஜக எம்.பி. சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசுகிறார்கள் என ராகுல் காந்தியை மறைமுக விமர்சனம் செய்தார். இதனால் ராகுல் காந்தியை இழிவுப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் ஒருவரை அவருடைய சாதியை பெயரை வெளிப்படுத்தும்படி கூற முடியாது எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அசாம் மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஒருவருடைய சாதியை வெளிப்படுத்தாமல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பார்முலாவை ராகுல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான பாஜக கட்சியின் இணை-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹிமாந்தா பிஸ்வா சர்மா இது தொடர்பாக கூறியதாவது:-
ஒருவருடைய சொந்த சாதியை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பார்முலாவை நாங்கள் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இதற்கான பார்முலாவை தெரியப்படுத்தட்டும். அதன்பின் இது தொடர்பாக முடிவு செய்கிறோம்.
பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இது நாடு முழுவதும் நடத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது வேறு விசயம். ஆனால், ஒருவர் அவருடைய சாதி பெயரை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி சாத்தியம்?
ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சாதி குறித்து கேட்ட முடியும். நாங்கள் அவருடைய சாதி பற்றி கேள்வி கேட்க முடியாது.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
- கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அப்படி வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு சென்று ஜவுளித் தொழில் வேலைக்காக செல்கின்றனர்.
கவுகாத்தி:
அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வங்கதேசத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் ஒரு இந்து கூட இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டறியப்படவில்லை.
இந்துக்கள் இந்தியாவிற்கு இடம்பெயராமல், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் தங்கி, போராடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள், ஆனால் வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு, கோயம்புத்தூர் சென்று ஜவுளித் தொழிலில் வேலை செய்ய உள்ளனர்.
இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- ஹேமந்த் சோரன் ஜெயிலுக்கு சென்றதால் முதல்வராக பதவி ஏற்றார்.
- ஹேம்ந்த் சோரன் மீண்டும் முதல்வராக, தனது பதவியை ராஜினாமா செய்ததால் அதிருப்தி.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.
கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைத்தது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்காக சம்பாய் சோரன் பதவி விலகினார்.
பின்னர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாஜக-வில் இணையப் போவதாக செய்தி வெளியாயின. கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலருடன் டெல்லி சென்றார்.
இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அதிருப்தியில் உள்ள சம்பாய் சோரன் தனது அடுத்த நகர்வாக புதிய கட்சியை துவக்கி பாஜக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது, அல்லது பாஜக-வில் இணைவது ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (30-ந்தேதி) தனது ஆதரவாளர்களுடன் பாஜக-வில் இணைய இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் "ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரான புகழ்பெற்ற பழங்குடியின தலைவர் சாம்பாய் சோரன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராஞ்சியில் பாஜக கட்சியில் இணைய இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
சாம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் ஜூலை 3-ந்தேதி தனது முதல்வர பதவியை ராஜினாமா செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
- முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் சட்ட மசோதா தாக்கல்.
- சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும்- அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா.
அசாம் மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தகவல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்ட மசோதாவை ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் அமளியில் ஈடுபட்டது.
இருந்தபோதிலும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மதக்குருக்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார்கள். அவர்கள்தான் திருமணத்திற்கு சாட்சி.
இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டால் இனிமேல் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த சட்டத்தின்படி 18 வயதிற்கு கீழ் உள்ள பெண், 21 வயதிற்கு கீழ் உள்ள ஆண் திருமணம் செய்து கொள்ள முடியாது. இதன்மூலம் சிறுவர்கள் திருமணம் தடுத்து நிறுத்தப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில பொது சிவில் சட்டத்தை நாட்டின் முதல் மாநிலமாக கொண்டு வந்தது. தற்போது அசாம் அதே வகையிலான சட்டத்தை கொண்டு வர இருக்கிறது.
திருமணம் தொடர்பான இதற்கு முந்தைய சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் இந்த புதிய சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில், தேர்தல் வருடத்தில் வாக்காளர்களை பிளவுப்படுத்துவதற்கான இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
தன்னுடைய அரசு திருமணங்கள் தொடர்பான சட்டத்தை கொண்டு வரும் என ஏப்ரல் மாதத்திலேயே தெரிவித்திருந்ததாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஒருவர் திருமணம் செய்ய விரும்பினால், ஆறு மாதத்திற்கு முன்பே அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதில் கலப்பு திருமணங்களும் அடங்கும்.
- தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்துள்ளார்.
- இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அசாம் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு அம்மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்ததாக கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிந்த பின்பு சமூக ஊடகங்களில் அப்பெண் இதுகுறித்து பகிர்ந்த பின்பு இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாங்களும் இதேபோன்ற சங்கடத்தை அனுபவித்ததாக வேறு சில பெண்களும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் அசாம் மாநிலத்தில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை பெண் காவலர் சோதனை செய்தது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர், "என்னைப் பொறுத்தவரை, எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதை மிகவும் முக்கியமானது. வடக்கு லக்கிம்பூரில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் டிஜிபி என்னிடம் தெரிவித்தார். அதே நாளில் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையில் இருந்து மோசடி செய்வதற்கான பொருட்கள் கிடைத்தன" என்று தெரிவித்தார்.