என் மலர்
நீங்கள் தேடியது "Holy Water"
- குமரக்கோவிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்.
- நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குமரக்கோட்டம் எனும் குமரக் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 36ஆண்டு களுக்குப் பிறகு கும்பாபி ஷேகம் நடைபெ ற்றது.
முன்னதாக கடந்த, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகளுடன் நான்கு காலையாக சாலை பூஜைகள் நடைபெற்றது
விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேளதாளம் முழங்க கோவிலை பலம் வந்தது கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந் நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமி கள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
இதில் சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை பீடாதிபதி சுவாமிகள், கோவில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கல்லூரி செயலர் செல்வநாயகம், சியாமளா பெண்கள் பள்ளி செயலர் முரளிதரன் டாக்டர் முத்துக்குமார் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், முன்னாள் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, மதிமுக மாவட்டச் செயலாளர் மார்க்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, வள்ளி முத்து, நித்யா தேவி பாலமுருகன், ராஜேஷ், கவன்சிலர் பாலமுருகன் தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பி ரமணியன், கியான்சந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இச்சங்காபிஷேகத்திற்காக பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீரும், பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களிலிருந்து புனித மண்ணும் எடுத்து வரப்படுகிறது.
- இச்சங்காபிஷேக புனித நீரை பிரசாதமாக பெற்று அருந்தும் பக்தர்களுக்கும் சகல பாவங்களும்நீங்குவதாகவும், சகல சௌபாக்கியங்களைப் பெறுவர்.
திருவையாறு:
தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு நாளை மாலை ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.
மேலும், 28, 5 மற்றும் 12 ஆகிய மூன்று சோம வாரங்களிலும் ஸ்ரீ ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.இச் சங்காபிஷேகத்தின் போது ஆலய பிரசங்க மண்டபத்தில் ஸ்ரீ ருத்ர பாராயணம், ஸ்ரீ ருத்ர ஹோமம், வேத பாராயணம். திருமுறை இன்னிசை மற்றும் புனித நீர் கலச ஆராதனைகளும் நடக்கிறது.
இச்சங்காபிஷேகத்திற்காக பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீரும், பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களிலிருந்து புனித மண்ணும் எடுத்து வரப்படுகிறது.
இவற்றுடன் பல மூலிகைகள், மருந்துப் பொருட்கள், பச்சிலைகள், தானியங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவைகள் கலந்து, 1008 வெண்சங்குகளில் நிரப்பி, வேத பாராயணம் மற்றும் ஹோமம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும், இச்சங்காபிஷேக புனித நீரை பிரசாதமாக பெற்று அருந்தும் பக்தர்களுக்கும் சகல பாவங்களும்நீங்குவ தாகவும், சகல சௌபாக்கியங்களைப் பெறுவர் எனவும், அகால மரணம் எய்த மாட்டார் எனவும், 4446 நோய்களிலிருந்து விடுபடுவர் எனவும் புராணங்களும், வேதாகம ங்களும், திருமுறை களும் கூறுகின்றனஇச்சங்கா பிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர்கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.
- சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது.
- சங்காபிஷேகம் செய்த புனிதநீர் பிரசாதம் அருந்தியும் சாமி அருள் பெற்றனர்.
திருவையாறு:
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
முன்னதாக கோவில் பிரசங்க மண்டபத்தில் புனித நீர் மகா கலசம் மற்றும் புனித நீர் நிறைந்த சங்குகளை நான்கு மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு யாக வேள்வியும் வேதபாராயணமும் ஆராதனையும் நடந்தது.
நேற்று பிரதோஷமும் சோம வாரமும் இணைந்த நாளில் நந்தியெம்பெருமானுக்கும் ஐயாறப்பருக்கும் பிரதோஷம் மற்றும் சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், சங்காபிஷேகம் செய்த புனித நீர் பிரசாதம் அருந்தியும் சுவாமி அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
- அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனிதநீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்க ண்ணியை அடுத்த கருங்கண்ணியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் இந்த புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு தேர்பவனி நடை பெற்றது சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்ட சப்பர த்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் எம். பிரான்சிஸ் துணைத் தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் இறை மக்கள் கருங்கன்னி அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் உள்ளி ட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
- புனித நீர் தெளித்து வீதி வழியாக தேர்பவனி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காடம்பாடியில் பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது முன்னதாக ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரி கக்ப்பட்ட சப்பரத்தில் புனித செபஸ்தியார்எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
- கருட பகவான் கோவிலை வலம்வர கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சுப்ரமணியருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் புகழ்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23-ந் தேதி கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
நேற்று லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.
கருட பகவான் கோயிலை வலம் வர ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.
- ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாத திங்கள்கிழமையில் வரும் கிருத்திகை தான் சோமாவாரமாகும்.
- புனிதநீர் அடங்கிய 1008 சங்குகளால் மகாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு தல சிறப்புகளை உடைய இக்கோவிலில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் திங்கள் கிழமையில் வரும் கிருத்திகை தான் சோமாவாரமாகும்.
அதைப்போல் நேற்று தை மாதமான கீர்த்திகை திங்கள் கிழமை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நெல்லின் மேல் சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு மா இலை பூ வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு ஹோமம் பூரனாகஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட சங்குகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலய வெளி மற்றும் உட்புர பிரகாரத்தினை வலம் வந்து சுப்ரமணிய சுவாமி மற்றும் பாவவிநாச பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய 1008 சங்குகளால் மகாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்நிகழ்சிகளை நெடுவாசல் மாணிக்கம் பிள்ளை வகையரா ஏற்பாடுகள் செய்தனர்.
- நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருக்குடியில் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் மகாகும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.
பின்னர் வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாகசாலை பூஜை நிறைவுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பரிவார தெய்வங்களான பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், பட்டாணி ஐய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- விநாயகர் பூஜை, தீபாராதனை, கோபூஜை, 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது.
- கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
மதுக்கூர்:
பட்டுகோட்டை அருகே அருள்மிகு பூர்ணாம்பிகா புஷ்கலாம்பிகை சமேத அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் மற்றும் பிடாரி அம்பிகையின் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட பெரியக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு பூர்னாம்பிகா, புஷ்கலாம்பிகை அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் பிடாரி அம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயில் சிலை ஒரே கல்லில் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு யாகசாலை உள்ளிட்ட விநாயகர் பூஜை மஹகணபதி ஹோமம் விநாயகர் பூஜை தீபார்த்தனை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.
இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கலச நீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.
இந்த புனித நீரை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்தபடி கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
நிகழ்ச்சியை பெரிய கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் இருந்த பொதுமக்கள் நிறைய பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- புனிதநீர் நிரப்பி அதனை ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது. அபயாம்பிகை அம்மன் மயில் உருவம் கொண்டு சிவனை பூஜித்து சாப விமோசனம் அடைந்த தலம். மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை வள்ளி தேவசேனா உடனாகிய சுப்பிரமணிய சாமி கோவிலில் நாளை மறுநாள் (24-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக புன்னிய நதிகளில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரையில் உள்ள காவிரி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மல்லாரி மேளக்கச்சேரி உடன் ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல, 100-க்கும் மேற்பட்ட வேத சிவ ஆகம பாடசாலை சிறுவர்கள் தேவார பாடல்கள் பாடி பின் தொடர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொள்ள வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி அதனை யானைகள் மீது ஏற்றி ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீன கட்டளை மடத்தின் வாசலில் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மலர் தூவி புனித கடங்களை வரவேற்றார்.
தொடர்ந்து யாகசாலையில் பாலசந்தர் சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் ஆகியோர் முதல் கால பூஜைகள் தொடங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
தேவகோ ட்டை அருகே ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த பெரியகோடகுடி கிராமத்தில் மிகப்பழமை யான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் கோட்டை விநாயகர் தர்ம முனீஸ்வரர், ஆகாச வீரன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 5:30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப சபா சுவாமிக்கு, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, ஆசிர்வாதம் தீபாரணை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தலைமை தாங்கினார்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், திருப்பட்டு சாற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 ஆயிர த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோவில் கிணற்றில் உள்ள நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற தலம் என்ற சிறப்புடைய ஆம்ல குஜாம்பிகா எனும் வாடா முலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமானது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைப்பெறுவது வழக்கம். தேவார சிறப்புமிக்க 274 திருத்தலங்களில் மூவரால் பாடப்பட்ட 44 தலங்களில் இதுவும் ஒன்றாக போற்றப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நாளில் கோயில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பாகும். இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் கோயில் கிணற்றில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையொட்டி ஆம்ல குஜாம்பிகா, பிரம்ம புரீஸ்வரர் ஆகிய சாமிக ளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் கிணற்றில் இருந்து வாரி இறைக்கப்பட்ட தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.
இந்த தீர்த்தவாரி விழாவில் கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.