என் மலர்
நீங்கள் தேடியது "Honor"
- மேல்நிலைக்கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
- அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்.
இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள் கீர்த்தனா.
இவர் நடுநிலைக்கல்வியை தளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார். பின்னர் மேல்நிலை கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
இதையடுத்து மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வு எழுதினார்.
அந்த தேர்விலும் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது.
அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தளிக்கோட்டை அரசு பள்ளி சார்பில் சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தளிக்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.
தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். தளிக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சூரியபிரபா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவி கீர்த்தனாவுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இதில் மாணவியின் பெற்றோர் இளவரசன், சித்ராதேவி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. சுந்தரமூர்த்தி, எஸ். மாசிலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.விஜயகுமார், எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பி.ரமேஷ், கிராம பிரமுகர் ஞானம், ஆசிரியர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.
- மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மதுரை
இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- ஹானர் பிராண்டின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ஹானர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 7.9 இன்ச் FHD+ 90Hz OLED மடிக்கக்கூடிய உள்புற ஸ்கிரீன், வெளிப்புறம் 6.45 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள டைமிக் டிம்மிங், சர்கடியன் நைட் டிஸ்ப்ளே புளூ லைட் பாதிப்புகளை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்கிரீன்களிலும் 1920Hz PWM டிம்மிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆவதை குறைக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு சார்ந்த மேஜிக்ஒஎஸ் 7.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹானர் மேஜிக் Vs அம்சங்கள்:
7.9 இன்ச் 2272x1984 பிக்சல் FHD+ OLED 10.3:9 டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
6.45 இன்ச் 2560x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
12 ஜிபி ரேம்
512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் யுஐ 7.1
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி 3.1 டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
ஹானர் மேஜிக் Vs மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 865 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏற்பாடு
- இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில், 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஜான் சலீவன் நினைவுநாளை கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாகவும், வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாகவும், அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், ஆ.ராசா எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
பின்னர் இதுகுறித்து ஆ.ராசா எம்.பி தெரிவித்ததாவது:- முதல்-அமைச்சர் சென்ற ஆண்டு நீலகிரி மாவட்டத்தில், தொடக்க விழாவினை தொடங்கி வைத்து, இவ்விழா கொண்டாடுவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிறைவு விழாவினையொட்டி புத்தககண்காட்சி, புகைப்படகண்காட்சி, குறும்பட போட்டி, திரைப்பட விழா, பழங்குடியின மக்களின் கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த வாரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். மேலும் இந்த 200-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டு வர வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கைகள் வைத்துள்ளோம் என கூறினார். மறைந்த ஜான் சலீவன் நினைவினை போற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 108 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இக்கூட்டத்தில், பந்தலூர் வட்டம் கையுண்ணி பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவர் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை கேட்டு மனு அளித்ததை தொடர்ந்து, உடனடியாக பரிசிலனை செய்ய உத்தரவிட்டு, சம்மந்தப்பட்ட நபருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவினை முன்னிட்டு, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சார்பில் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ரூ.30 ஆயிரத்திற்க்கான வங்கி வரவோலையை கலெக்டரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ெரயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
மது அருந்துவதன் மூலம் கல்லீரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, குடும்பத்தில் பிரச்சினை, கடன் வாங்குதல், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவதன் மூலம் விபத்து போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே, மது அருந்துதல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.
- ஹானர் பேட் டேப்லெட்டின் புதிய வேரியண்ட் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- ஹானர் பேட் X8 மாடல் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ஹானர் பேட் X8 (4ஜிபி ரேம், 64 ஜிபி) மாடல் அறிமுகம் செய்தது. முன்னதாக இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் அதிக மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய ஹானர் பேட் X8 மாடலில் 10.1 இன்ச் FHD ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், மேஜிக் யுஐ 6.1, 5MP பிரைமரி கேமரா, 2MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் 7.55mm அலுமினியம் அலாய் பாடி கொண்டிருக்கிறது. இத்துடன் 5100 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ஹானர் பேட் X8 அம்சங்கள்:
10.1 இன்ச் 1920x1200 பிக்சல் FHD IPS டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80
ARM மாலி G52 2EEMC2 GPU
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1
5MP பிரைமரி கேமரா
2MP செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5100 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் X8 மாடலின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷன் புளூ ஹவர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஹானர் பேட் X8 மாடலின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 ஆகும்.
- ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டுள்ளது.
- இந்த ஃபோல்டபில் போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹானர் ஃபோல்டபில் போனின் எடை 231 கிராம், தடிமன் 9.9 மில்லிமீட்டர்கள் ஆகும். அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மடிக்கக்கூடிய சாதனங்களில் மிகவும் மெல்லிய மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
முன்னதாக உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 மாடலின் தடிமன் 11.2 மில்லிமீட்டர்கள், எடை 262 கிராம்கள் ஆகும். புதிய ஹானர் மேஜிக் V2 மாடலில் மிக மெல்லிய சிலிகான் கார்பன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா சென்சார், 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், OIS, மேக்ரோ ஆப்ஷன், 20MP டெலிபோட்டோ கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.92 இன்ச் மடிக்கக்கூடிய LTPO OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 2344x2156 பிக்சல் ரெசல்யூஷன், 6.43 இன்ச் LTPO டிஸ்ப்ளே, 2376x1060 பிக்சல், ஸ்டைலஸ் சப்போர்ட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹானர் மேஜிக் V2 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை RMB 8999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம் என்று துவங்குகிறது. 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் V2 அல்டிமேட் எடிஷன் விலை RMB 11999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 300 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
- ஹானர் பேட் X9 மாடலில் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட மொத்தம் 7 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹானர் பிரான்டின் புதிய ஹானர் பேட் X9 மாடலுக்கான டீசர் வெளியாகி உள்ளது. புதிய ஹானர் டேப்லெட் இந்திய சந்தையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டீசரில் புதிய ஹானர் பேட் X9 வாங்குவோருக்கு ஹானர் ப்ளிப் கவர் இலவசமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், இது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1 ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ஹானர் பேட் X9 மாடலில் 5MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீக்கர் டிசைன் வழங்கப்படுகிறது.
ஹானர் பேட் X9 மாடலில் 7250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்தற்கு வீடியோ பிளேபேக் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 199.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 450 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- ஹானர் பேட் X9 மாடல் மொத்தத்தில் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் தவிர ஹானர் பிரான்டு லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஹானர் பேட் X9 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டேப்லெட் மாடல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஹானர் பேட் X8 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய ஹானர் பேட் X9 மாடல் ரியல்மி பேட் 2, ஒப்போ பேட் ஏர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் டிஸ்ப்ளே, சுற்றிலும் சிமெட்ரிக்கல் பெசல்கள், 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹை-ரெஸ் ஆடியோ, மெட்டல் யுனிபாடி, 5MP சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி, 7250 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஹானர் பேட் X9 மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக்யுஐ 7.1 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் X9 மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஹானர் பேட் X9 மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 500 தள்ளுபடி, ஹானர் ப்ளிப் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய வியாபாரத்தில் கவனம் செலுத்த ஹானர் பிரான்டு முடிவு.
- இந்திய ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா பிரான்டு டீசர் வெளியீடு.
ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் மீண்டும் தனது வியாபாரத்தை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு ரியல்மி நிறுவனத்தின் முன்னாள் இந்திய தலைவர் மாதவ் சேத் தலைமை வகிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த தகவல்களை உண்மையாக்கும் பட்சத்தில் ஹானர் மற்றும் மாதவ் சேத் இணைந்து நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தி உள்ளன.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிரான்டாக ஹானர் இருந்தது. அமெரிக்க அரசு ஹூவாய் நிறுவனம் மீது பிறப்பித்த வர்த்தக தடை காரணமாக, ஹானர் பிரான்டின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய வியாபாரத்தில் கவனம் செலுத்த ஹானர் பிரான்டு முடிவு செய்தது.

அதன்படி இந்திய ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா பிரான்டு டீசர் ஒன்றை X தளத்தில் வெளியிட்டது. இதனை மாதவ் சேத் ரிடுவீட் செய்து இருந்தார். ரிஎன்ட்ரி பற்றி வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், விரைவில் ஹானர் பிரான்டிங்கில் புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஹானர் பிரான்டு முதலில் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 90 என்ற பெயரில் அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது ஹானர் பிரான்டு தற்போது சீனாவில் விற்பனை செய்து வரும் வேரியன்டை விட அதிகம் ஆகும். சீன சந்தையில் ஹானர் 90 ஸ்மார்ட்போனின் விலை CNY 2499 இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 705 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹானர் 90 அம்சங்கள்:
6.7 இன்ச் AMOLED குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர்
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1
200MP பிரைமரி கேமரா
12MP வைடு ஆங்கில் லென்ஸ்
12MP சென்சார்
50MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- ஹானர் இந்தியாவின் யுத்திகளை மாதவ் சேத் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்.
- ஹானர் 90 இந்திய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி என்ட்ரி கொடுக்கப் போவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் பிறகு ஹானர் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்குவதை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் ஹானர் பிரான்டின் முதல் ஸ்மார்ட்போன் ஹானர் 90 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்திய சந்தையில் களமிறங்கும் போதே நாடு முழுக்க சுமார் 150 சர்வீஸ் சென்டர்களை வைத்திருக்க ஹானர் பிராண்டு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஹானர் இந்தியாவின் யுத்திகளை மாதவ் சேத் ஒவ்வொன்றாக அறிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவரின் பிரபல ஆஸ்க் மாதவ் என்ற சமூக வலைதள உரையாடல் நிகழ்வில் இதனை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்திய ஆஸ்க் மாதவ் நிகழ்வில், ரிபிராண்டு செய்யப்பட்ட ஹானர் 90 இந்திய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஹானர் ஸ்மார்ட்போன்கள் கூகுள் சேவைகளை கொண்டிருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஹானர் 90 ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் பெற இருக்கிறது.
- ஹானர் 90 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஹானர் 90 ஸ்மார்ட்போனுடன் ஹெச்டெக் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் குவாட் கர்வ்டு OLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டைனமிக் டிம்மிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னசை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒ.எஸ். 7.1 கொண்டிருக்கும் ஹானர் 90 ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று ஹெச்டெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 7 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் முன்புற மற்றும் பிரைமரி கேமரா சென்சார்களிலும் EIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஹானர் 90 அம்சங்கள்:
6.7 இன்ச் 2664x1200 பிக்சல் FHD+OLED 120Hz ஸ்கிரீன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர்
அட்ரினோ 644 GPU
8 ஜி.பி., 12 ஜி.பி. ரேம்
256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒ.எஸ். 7.1
டூயல் சிம் ஸ்லாட்
200MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
12MP அல்ட்ரா வைடு கேமரா
2MP டெப்த் சென்சார்
50MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
66 வாட் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போன் டைமண்ட் சில்வர், மிட்நைட் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 18-ம் தேதி துவங்குகிறது.
- பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர்.
திண்டுக்கல்:
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஊராட்சிகளில் திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, பெரம்பலூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 7 ஊக்குவிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பலக்கனூத்து ஊராட்சியை சேர்நத நாச்சம்மாள், காளாஞ்சிபட்டியை சேர்ந்த கற்பகம், நெல்லை மாவட்டம் கீழகோட்டத்தை சேர்ந்த சுமதி, வேலூர் மாவட்டம் மெட்டுகுளத்தை சேர்ந்த புஷ்பா, செங்கல்பட்டு மாவட்டம் புத்தூரை சேர்ந்த சத்யா, பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவனூரை சேர்ந்த சுதா, ஆலம்பாடியை சேர்ந்த புஷ்பலதா ஆகியோர் டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கின்றனர்.
முழுசுகாதார இயக்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ஏகாம்பரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு இன்று புறப்பட்டு செல்கின்றனர். குடியரசு தினவிழாவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதார ஊக்குவிப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
இந்த கூட்டத்தில் திடக்கழிவு, திரவக்கழிவு, மேலாண்மை செயல்பாடு, நீடிக்கும் சவால்கள், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.