search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Skeleton"

    • கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது.
    • கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது. இங்குள்ள குழாயை சீர் செய்யும் பணிக்கு இன்று காலை தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கு ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது.

    அதனை பார்த்த தொழிலாளர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட மனித எலும்புக் கூடு பெட்டியில் இருப்பது தெரியவந்தது. அது யாருடையது என்பது தெரியவில்லை.

    அதேநேரம் அது 2 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதனை தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பிய போலீசார், அப்பகுதியில் மாயமானவர்கள் குறித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்த மனித எலும்பு கூடை கைப்பற்றிய போலீசார் சிகிச்சை பெற்ற நோயாளியா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
    தாம்பரம்:

    தாம்பரம் சாணடோரியத்தில் காசநோய் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆஸ்பத்திரி வளாகத்தின் பின்புறம் செடி கொடிகள் படர்ந்து வனப்பகுதி போல் உள்ளது.

    இந்த நிலையில் புதர் பகுதியில் இருந்து மனித எலும்புகளை நாய்கள் கவ்வி கொண்டு வந்தன. இதை பார்த்த நோயாளிகளின் உறவினர்கள் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு சென்று புதர் மண்டி இருந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மனித எலும்பு கூடு ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    எலும்பு கூடாக கிடந்தது ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி புதர் பகுதியில் இறந்து கிடந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    ×