என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT Chennai"

    • அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    • இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன.

    சென்னை :

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனமும், டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனமும் இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்திலும், கோவை வேளாண் பல்கலைக்கழகம் 93-வது இடத்திலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 94-வது இடத்திலும் என தமிழ்நாட்டில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

    ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை தொடர்ந்து 5-வது ஆண்டாக தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது. ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடத்தில் 7 ஐ.ஐ.டி.க்கள் இடம் பெற்றுள்ளன.

    பல்கலைக்கழகங்களின் பட்டியலில், பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 14-வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 50-வது இடத்திலும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

    கல்லூரிகளைப் பொறுத்தவரையில், டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்வி நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடத்திலும், லயோலா கல்லூரி 7-வது இடத்திலும் என தமிழ்நாட்டை சேர்ந்த 35 கல்லூரிகள் இடத்தை தக்க வைத்திருக்கின்றன.

    என்ஜினீயரிங் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலாவது இடத்திலும், திருச்சி என்.ஐ.டி. 9-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்திலும் என மொத்தம் 15 என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துள்ளன.

    மருத்துவக் கல்லூரி வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3-வது இடத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்திலும் என 8 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இதேபோல், ஆராய்ச்சி பிரிவில் 9 கல்வி நிறுவனங்களும், மேலாண்மை பிரிவில் 10 கல்லூரிகளும், துணை மருத்துவத்தில் 9 கல்வி நிறுவனங்களும், பல் மருத்துவத்தில் 7 கல்லூரிகளும், சட்டப்படிப்பில் 2 கல்வி நிறுவனங்களும் கட்டிடம் மற்றும் திட்டமிடல் பிரிவில் 3 கல்லூரிகளும், வேளாண்மை சார்ந்த படிப்புகளில் 5 கல்வி நிறுவனங்களும், புதுமையான கண்டுபிடிப்புகளில் 2 கல்லூரிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களாக இடம்பெற்று அசத்தி இருக்கின்றன.

    கடந்த ஆண்டுகளுடன் இந்த ஆண்டு தரவரிசை பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி.யின் சிறந்த தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஊழியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் முன்னாள் மாணவர்களின் அசைக்க முடியாத ஆதரவின் ஓய்வில்லாத முயற்சி போன்றவற்றாலேயே இது (தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் முதல் இடம்) சாத்தியமாகியிருக்கிறது.

    எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கல்வி அமைச்சகம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்யவேண்டும் என்பதை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். சென்னை ஐ.ஐ.டி.யை உள்நாட்டில் பொருத்தமானதாகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகவும் உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது.
    • கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், "உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகத்தை முதல் 300 இடங்களுகு்குள் கொண்டு வருவதே இலக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகம் ஆகும்.
    • 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    சென்னை :

    சென்னை ஐ.ஐ.டி., அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23-ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதி ஆண்டில் திரட்டப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். நிதி திரட்டலை பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியை இப்போது பதிவு செய்துள்ளது. இதேபோல 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    ரூ.1 கோடிக்கு மேல் இந்த கல்வி நிறுவனத்துக்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்புணர்வு திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.

    சென்னை ஐ.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சி பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று காரணமாக முந்தைய ஆண்டு நடைபெறாமல் இருந்த 'பேட்ச்' மாணவர்கள் சந்திப்பு கடந்த ஆண்டு நடந்தபோதும் நிதி பங்களிப்பு கிடைக்கப்பெற்றது.

    இதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி.யின் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், "சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பின் கல்வி பயிலும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும், பாசமும் நெகிழச்செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவானது சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அவர்களின் நீடித்த ஆதரவுடன் வரும் ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டி.யை இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

    இதேபோல, சென்னை ஐ.ஐ.டி.யின் சமூகம் சார்ந்த திட்டங்கள் எவ்வாறு நாட்டுக்கு பயனளிக்கின்றன என்பது குறித்து, சென்னை ஐ.ஐ.டி. இன்ஸ்டிடியூசனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர் விளக்கினார்.

    • நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
    • வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    சமீபத்தில் ஒடிசா தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செயல்படுத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை சுப்ரீம் கோர்ட்டில் செயல்படுத்த உள்ளோம். நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.

    வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் உறுப்பினரா சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
    • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது

    புதுடெல்லி:

    மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி நியமிக்கப் படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருக்கிறது.
    • பசுமாட்டின் கழிவுகள் தான் கோமியமாக வெளியேறுகிறது.

    இந்தியாவில் ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களும் பெருகி வருகின்றன.

    குறிப்பாக மாட்டு கோமியம் குடித்தால் உடல்நலனுக்கு நல்லது என்றும் பல நோய்களை மாட்டு கோமியம் குணப்படுத்தும் என்று அறிவியலுக்கு புறம்பான செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

    இந்நிலையில், 'கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும்' என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    உடலின் கழிவுகள் தான் சிறுநீராக வெளியேறுகிறது. அவ்வகையில் பசுமாட்டின் கழிவுகள் தான் கோமியமாக வெளியேறுகிறது. கோமியம் குடித்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
    • தான் பேசியது அறிவியல்படி தவறு என்று காமகோடி பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், "சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார்.

    அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு, மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய. நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது.

    மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சியில் பேசிய அவர் கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகிடும் என்றார்.
    • பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் கோ பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகிடும் என்றார்.

    மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அறிவியலுக்கு புறம்பாக பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமக்கோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஐ.ஐ.டி. இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநரே போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    கோ பூஜை நிகழ்வில் பேசிய ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது."

    "கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

    • கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐஐடி இயக்குநர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, "முதலில் கோமியத்தை அவர் குடிக்கட்டும், அவர் குடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஐ.ஐ.டி போன்ற நிறுவனத்தின் இயக்குனர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது.

    மாட்டு மூத்திரம் உடலுக்கு கேடு என அறிவியல் ரீதியாக சொல்லப்படும் இந்த காலத்தில், அறிவியல் ரீதியான நிறுவனத்தின் இயக்குனரே இப்படி சொல்லியிருப்பதற்கான காரணம் புரியவில்லை.

    மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐஐடி இயக்குநர் ஆளுநர் போல மாறிவிட்டார் என தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் இந்தக் கருத்துக்கள் வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    அதுவும் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிற தமிழக மக்கள், அறிவியல் ரீதியாக சிந்திக்க கூடியவர்கள், பகுத்தறிவு மிகுந்தவர்கள், ஐஐடி இயக்குனர் கூறி விட்டார் என்பதற்காக அதை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது தான் நடைமுறை உண்மை" என்று தெரிவித்தார்.

    • பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்றார்.
    • கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும் என்றார்.

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    ஐஐடி இயக்குனர் காமகோடி ஒரு வகுப்பறையில் வகுப்பு எடுத்து நீங்க குடிங்க என்று சொல்லவில்லையே. அவரின் தனிப்பட்ட கோட்பாட்டை சொல்கிறார். இதிலும் அரசியலாக்க நினைத்தால், அந்த மனிதர் எதற்காக இத்தனை வேலைகளை செய்கிறார் என்பதை மறந்து ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு கூறினார்.

    • அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
    • கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு நேர்மறையான விளைவாக இந்த விவாதத்தை பார்க்கிறேன்

    கோமியம் சர்ச்சை:

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது அரசியல் ரீதியாகவும், அறிவியல் வல்லுனர்களிடையேயும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    காமகோடி விளக்கம்:

    இந்நிலையில் தனது கருத்து அறிவியல் ரீதியானதுதான் என்றும் அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் காமகோடி தெரிவித்துள்ளார்.

     கோமியம் விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி இயக்குனர் காமகோடி  செய்தியாளர்களை சந்தித்தார்.

    அரசியல் சர்ச்சை குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த காமகோடி சிரித்துக் கொண்டே கையை அசைத்து, "நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. இது முற்றிலும் அறிவியல் பூர்வமானது. சில பண்டிகைகளின் போது நானும் பஞ்சகவ்யத்தை சாப்பிட்டுள்ளேன்.

    பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புவேன்"

    கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு நேர்மறையான விளைவாக இந்த விவாதத்தை பார்க்கிறேன் என்று கூறினார்.

    மேலும் ஐஐடி மெட்ராஸ் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த காமகோடி, "ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தால், இதை ஐஐடியில் ஆய்வு செய்யலாம். எங்களிடம் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத் துறை உள்ளது. ஆனால், ஆனால் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?

    இதற்கிடையே காமகோடி கருத்துக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மனிதர்கள் கோமியத்தை குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும் இந்த ஆய்வு முடிவுகள் காமகோடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கோமியம் ஆபத்தானது என்ற ஆராய்ச்சி குறித்து தெரியாது என காமகோடி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசினார்.
    • ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.

    மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

    அதிலும் குறிப்பாக, "ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது" என்று மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கோமியம் சர்ச்சை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம். மாட்டு பால் குடிக்கிறவன் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் உயர்ந்த சாதி. இது தான் இந்த நாட்டின் கட்டமைப்பு. உலகத்திலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கபடுகிறது" என்று தெரிவித்தார்.

    ×