என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "import Tax"

    • தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன.

    திருப்பூர்:

    கோவை புறநகரில் சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் புளியம்பட்டி பகுதியில் 3,000 முதல் 50 ஆயிரம் ஸ்பின்டில் திறன் வரை உள்ள ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் 40 மற்றும் 60ம் எண் நூல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அன்னூர் தாலுகாவில் மட்டும் கரியாம்பாளையம், குன்னத்தூர், கெம்பநாயக்கன்பாளையம், பொகலுார், பசூர், கஞ்சப்பள்ளி உட்பட பல பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாக 3 ஷிப்டுகள் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்கள், இரண்டு ஷிப்டுகளாக மாறின. தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒரு சில மில்கள் மட்டுமே இரண்டு ஷிப்டுகள் இயங்குகின்றன. சில ஸ்பின்னிங் மில்கள் வாரத்திற்கு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளன.சில மில்களில் ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்த தொழிலாளர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர்.

    இது குறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 356 கிலோ எடையுள்ள ஒரு கண்டி பஞ்சு 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும்போது ஒரு கிலோ நூல் வங்கிக் கடனுக்கான வட்டி இல்லாமல் 283 ரூபாய் அசல் ஆகிறது.

    தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 33 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதிலும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன. இந்த நிலை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் ஜவுளித்துறை நிலைத்து நிற்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூற்பாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தற்போது வசூலிக்கப்படும் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஸ்பின்னிங் மில் முதலீட்டுக்கு மானியம் அளிக்க வேண்டும். உள்ளூரிலேயே பருத்தி அதிக அளவில் விளைவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாது. நூல் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். அதிக கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நுால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகை தர வேண்டும் என்றனர்.

    இந்தநிலையில் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் பல்லடத்தை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:-

    ஜவுளி தொழில் துறை சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு தர கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு, இது பெரும் தடையாக உள்ளது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைக்கு அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து,விலக்கு அளிக்க வேண்டும்.

    உள்நாட்டில் போதிய அளவு பருத்தி சாகுபடி கிடையாது. துணி உற்பத்திக்கு தேவையான பருத்தி - பஞ்சினை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது துணி உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது.உள்நாட்டில் பருத்தி சாகுபடியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் துணி உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும்.
    • புற்றுநோய் மருந்துகள், தோல் பொருட்கள், கடல்சார் உணவுகளும் விலை குறைகிறது

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இறக்குமதி வரி குறைப்பு விவரம் வருமாறு:

    தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து வரி 6.4 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    சில குறிப்பிட்ட தோல் பொருட்களுக்கான வரி விதிப்புகளும் குறைக்கப்படும்.

    மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

    இதையடுத்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மற்றும் செல்போன் போன்றவைகளின் விலை குறைகிறது.

     

    மேலும் புற்றுநோய் மருந்துகள், தோல் பொருட்கள், கடல்சார் உணவுகளும் விலை குறைகிறது

    இதேபோல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆக அதிகரிக்கப்படும்.

    தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சுங்க வரி 10ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

    அம்மோனியம் நைட்ரேட், பிளாஸ்டிக் சாதனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் விலை உயர்கிறது.

    • அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது என் கடமை.

    கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இறக்குமதி வரியை அதிகரிக்கும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

    "இன்று, நான் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியையும் (கனேடிய எரிசக்திக்கு 10%), சீனாவுக்கு 10% கூடுதல் வரியையும் அமல்படுத்தியுள்ளேன். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நமது மக்களைக் கொல்லும் கொடிய போதை பொருட்களின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இது சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மூலம் செய்யப்பட்டது."

    "நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமையாகும். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் நமது எல்லைகளில் கொட்டுவதைத் தடுப்பதாக எனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் உறுதியளித்து இருந்தேன். மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
    • 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும்.

    அமெரிக்கா வரிவிதிப்பு

    டொனால்டு டிரம்ப் உடைய ஆளுகையின் கீழ் உள்ள அமெரிக்கா பிற நாடுகள் மீது கடுமையான வரிக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 03) கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்தது.

    முன்னதாக கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்டு டிரம்ப் தனது அறிவிப்பில் பல்வேறு சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.

    பென்டன்டைல் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக சீனா வளர்ந்துள்ளது. இந்த மூலப்பொருட்கள் மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பென்டனைல் போதைப்பொருளாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது.

    இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இந்த புதிய வரிவிதிப்பு இன்று (மார்ச் 04) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் நிலவுகிறது.

    சீனா பதிலடி

    இந்நிலையில் இன்று (மார்ச் 04) அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீனா புதிதாக 10% முதல் 15% வரி விதிப்பை அறிவித்துள்ளது.

    சோயாபீன், சோர்கம் (sorghum), பன்றிக்கறி, மாட்டுக்கறி, கடல்சார் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு சீனா 10 சதவீத வரியை அறிவித்துள்ளது.

     

     

    மேலும் கோழிகள், கோதுமை, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றின் இறக்குமதிக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கனடா - மெக்சிகோ எதிர்வினை 

    இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடா, மெக்சிகோவும் இறங்கியுள்ளது. நேற்று இதுதொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா தனது போக்கை தொடர்ந்தால் 20 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு (செவ்வாய்க்கிழமை முதல்) 25 சதவீத வரி விதிக்கப்படும்.

    மேலும் 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

     

    அமெரிக்காவின் மிதமிஞ்சிய வரிவிதிப்பு தொடர்பாக நேற்று பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எங்களிடம் பிளான் B, C, D உள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச வர்த்தக கழகத்தில்(WTO) சீனா புகார் கொடுத்துள்ளது. 

    ×