என் மலர்
நீங்கள் தேடியது "India A"
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- இந்திய அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 104 ரன்கள் விளாசினார்.
கொழும்பு:
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஏ- பாகிஸ்தான் ஏ அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் சேர்த்தார். சாகிப்சதா பர்கான் 35 ரன்கள், முபாசிர் கான் 28 ரன்கள், ஹசீபுல்லா கான் 27 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. துவக்க வீரர் சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்தார். அபிஷேக் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகின் ஜோஸ் 53 ரன்கள் சேர்த்தார்.
இதனால் இந்தியா 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 104 ரன்களுடனும், கேப்டன் யஷ் துல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி, குரூப்- பி பிரிவில் தான் மோதிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 202 ரன்களை எடுத்தது.
பெங்களூரு:
துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே விளையாடி வருகின்றனர்.
செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் மோதினர். டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், அபிமன்யு களமிறங்கினர். அபிமன்யு 13 ரன், ஜெய்ஸ்வால் 30 ரன், சர்ப்ராஸ் கான் 9 ரன், ரிஷப் பண்ட் 7 ரன், சாய் கிஷோர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு முஷீர் கான், நவ்தீப் சைனி ஜோடி108 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் முடிவில் இந்தியா பி 79 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 105 ரன்னும், நவ்தீப் சைனி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
- இந்தியா ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு:
துலீப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி 321 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்து 181 ரன்னும், நவ்தீப் சைனி 56 ரன்னும் எடுத்தஉள்ளனர்.
இந்தியா ஏ அணி சார்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.
இந்தியா பி அணி சார்பில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பி அணி இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்து 61 ரன்னும், சர்ப்ராஸ் கான் 46 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா பி அணி சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 275 ரன்களை இலக்காகக் கொண்டு இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணி 198 ரன்களில் ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 57 ரன்னும், ஆகாஷ் தீப் 43 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கு அளிக்கப்பட்டது.
- இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
- இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து வந்த இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி 380 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 487 எனும் கடின இலக்கை துரத்திய இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியா டி அணிக்கு ரிக்கி புய் 113 ரன்களையும், அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 41 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கியவர்களில் சௌரப் குமார் 22 ரன்களையும், ஹர்ஷித் ராணா 24 ரன்களையும் எடுத்தனர்.
இந்தியா ஏ அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய தனுஷ் கொடியன் 4 விக்கெட்டுகளையும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- துலீப் கோப்பை லீக் போட்டி ஆந்திராவின் அனந்தபூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினர்.
அனந்தபூர்:
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் 89 ரன்னும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா பி சார்பில் ராகுல் சஹார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.
ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்ததது. ஷஷ்வத் ராவத்122 ரன்னும், ஆவேஷ் கான் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2-வது இடம் பிடித்தது.
- ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.
அனந்தபூர்:
துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா சி உடன் மோதியது.
இதில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட்டானது.
63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி அணி களமிறங்கியது. அந்த அணியின் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில் இந்தியா சி அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் எடுத்தனர்.
மற்றொரு போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதின முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.
இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.
இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 119 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணி 115 ரன்களில் சுருண்டது. இதனால் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணி வெற்றி பெற்றது.
மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2வது இடமும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி மூன்றாம் இடமும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.
- ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.
- இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடர் ஓமன் நாட்டில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும் ராசிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்
இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி வந்த யாசிர் கான் தூக்கி அடித்த பந்தை ஓடிச்சென்று பாய்ந்து ஒற்றை கையால் ரமன்தீப் சிங் பிடித்தார்.
ரமன்தீப் சிங்கின் அந்த கேட்ச் ஒரு இந்தியரின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.
- திலக் வர்மா 16 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- ராமன்தீப் சிங் 34 பந்தில் 64 ரன்கள் அடித்து கடைசி வரை போராடினார்.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் உள்ள அல் அமராத் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று இந்தியா- ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.
ஜுபைத் அப்காரி 41 பந்தில் 64 ரன்கள் விளாசினார். செதிகுல்லா அடல் 52 பந்தில் 83 ரன்கள் குவித்தார். கரீம் ஜனத் 20 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி சார்பில் ரசிக் சலாம் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினாலும் அன்ஷுல் கம்போஜ் 3 ஓவரில் 40 ரன்களும், அக்யூப் கான் 4 ஓவரில் 38 ரன்களும், ராகுல் சாஹர் 3 ஓவரில் 48 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கேப்டன் திலக் வர்மா 16 ரன்னில் வெளியேறினார். ராமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி 34 பந்தில் 64 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியாக இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா ஏ அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை ஆப்கானிஸ்தான் ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ருதுராஜ், நிதிஷ் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர்.
- ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடராக அமைந்துள்ளது பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கு முன்னதாக ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணியும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு பயிற்சி போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்கினர்.
ருதுராஜ் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் அபிமன்யு 7 ரன்னிலும் சாய் சுதர்சன் 21, இந்திரஜித் 9, இஷான் கிஷன் 4, படிக்கல் 36, நிதிஷ் ரெட்டி 0, மனோவ் சுதர் 1, பிரசித் கிருஷ்ணா 0, சைனி 23 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் இந்தியா ஏ அணி 47.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக படிக்கல் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.
- இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் மோதுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை இந்திய அணி தற்போது ரத்து செய்துள்ளது. மேலும் இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் வலை பயிற்சியை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- முதல் இன்னிங்சில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் 103 ரன்கள் விளாசினார்.
இந்தியா 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த டெஸ்ட் ஐந்து நாட்கள் கொண்டதாகும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா 'ஏ' அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 'ஏ' அணி 107 ரன்னில் சுருண்டது. தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 21 ரன்களும், நவ்தீப் சைனி 24 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' 195 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். பிரசித் 3 விக்கெட்டும், நிதிஷ் ரெட்டி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 'ஏ' அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 12 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று விளையாட 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா மேலும் விக்கெட்டை இழக்கவில்லை. சாய் சுதர்சன் 96 ரன்களும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாசினார். சதம் அடித்த அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். 200 பந்தில் 9 பவுண்டரியுடன் 103 ரன்கள் அடித்தார். மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 88 ரன்னில் வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது.
இந்தியா 91 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடித்துள்ளது. 199 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
- அபிமன்யூ, சாய் சுதர்சன் ஆகியோர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய 'ஏ' அணியின் தொடக்க வீரர்களாக அபிமன்யூ- கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அபிமன்யூ டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 2-வது ஓவரில் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் இந்திய அணி 11 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து படிக்கல் மற்றும் ஜூரெல் நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். ஆனால் ரொம்ப நேரம் அது தொடரவில்லை. படிக்கல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் நிதிஷ் ரெட்டி 16, தனுஷ் கோட்யான் 0, கலீல் அகமது 1, பிரசித் கிருஷ்ணா 14 என விக்கெடுகளை பறிகொடுத்தனர். ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் அரை சதம் அடித்ததுடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.